உலக நாடுகளுக்கு ரஷ்யா என்ன செய்தது?
ரஷ்யாவே வெளியேறு ! அமெரிக்கா தன் நாட்டிலுள்ள அறுபது ரஷ்ய அதிகாரிகளுக்கு தம் குடும்பத்துடன் ஆறுநாட்களில் வெளியேற கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது . ஐரோப்பியாவைச் சேர்ந்த பதினெட்டு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய அதிகாரிகள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது . ஏன் ? இங்கிலாந்திலுள்ள தன் முன்னாள் உளவாளிக்கு நச்சு கொடுத்த பிரச்னையால் . இதில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்தான் நோவிசோக் . நான்காம் தலைமுறை வேதிப்பொருளான நோவிசோக் (Novichok) கை சோவியத் யூனியன் கண்டுபிடித்தது . ஆர்கனோபாஸ்பேட் எனும் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வேதிப்பொருள் உரவகைகளில் பயன்படுகிறது . உடலுக்குள் நோவிசோக் உணவு வழியாக அல்லது வாயு வடிவில் உள்ளே செல்லும்போது நரம்பு மண்டலத்தின் என்ஸைம்களிலுள்ள புரதத்தை பாதிக்கிறது . இதனால் உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு மரணம் நேருகிறது . தற்போது இந்த நச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உளவாளி செர்ஜெல் கிரிபால் வாயில் வெண்ணிற நுரை வெளியேறி வருகிறது . அவரது மகள் யூலியாவின் கண்கள் வெள்ளை நிறமாக மாறிவிட்டன . தற்போது உலக