இடுகைகள்

சமூகநீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .

சாக்கடை நாற்றம் அடிக்கும் சமூகநீதி சந்நிதானங்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
chambre237.com 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு இதழில் மீதிப்பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,   அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16

சமூகநீதி பேசும் சமதர்ம நாயகர்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு..!

படம்
pexels 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,  அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16