சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்
டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வாய்ப்பாட்டு கலைஞர் இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன். நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது? அது வேறு வகையான இடம் என்று ந