இடுகைகள்

தண்ணீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
  தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம்.  1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம்.  2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம்.  3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.   4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறிவைத்து செல்லுங்கள்.

சூரிய சக்தியில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு முறை! - எம்ஐடி சாதனை!

படம்
கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது. இதனை எப்படி அனைத்து குடும்பங்களும் பயன்படுத்த முடியும்? அதற்காகத்தான் இந்த கருவி. இதன் மூலம் நூறு டாலர்கள் விலையில் ஒரு குடும்பம் தனக்கு தேவையான குடிநீரைப் பெறலாம். அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி, சீனாவைச் சேர்ந்த ஜியாவோ டாங் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கடல்நீரை மின்சாரமின்றி எளிதாக குடிநீராக மாற்றலாம். இதனால் குடிநீர் பிரச்னையால் கடல்பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களை தடுக்க முடியும். இதனின் மாதிரியை எம்ஐடி அமைப்பின் மாடியில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். இக்கருவியில் நீரை சுத்திகரிக்க பல்வேறு அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதிரிக்கருவில் பத்து அடுக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அதிகம் பயன்படுத்தினால் காசும் கூடும். கருவியும் பெரிதாகும். மாதிரியில் பயன்படுத்திய ஏரோஜெல் விலைகூடியது. இதனை சந்தைக்கு கொண்டுவரும்போது விலைகுறைவான மாற்று பொருளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் எண்ணியுள்ளனர். சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீரை சுத்த

அதிகளவு தண்ணீர் குடித்தால் என்னாகும்?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் தினசரி அவசியம் குடிக்கவேண்டிய நீரின் அளவு என்று ஏதாவது உண்டா? உங்களுக்கு தாகம் ஏற்பட்டால் கோலா, ப்ரூட்டி குடிக்காமல் தண்ணீர் குடித்தாலே போதும். இவ்வளவு நீர் என்று எந்த அளவும் நீர் குடிப்பதில் கிடையாது. ஏசியில் உட்கார்ந்து இருப்பவருக்கும், பைக்கில் வெளியே அலைபவருக்கும் உணவு, நீர் தேவை மாறுபடும். நீங்கள் பிஸ்லெரி நீரை பாட்டில் பாட்டிலாக கேன் கேனாக குடித்தாலும் உடலைப் பொறுத்தவரை  ஒருமணி நேரத்திற்கு 800 மி.லி அல்லது ஒரு லிட்டர் நீரை வெளியேற்றும். மூன்று மணிநேரத்தில் ஏழு லிட்டர் நீரைக் குடித்தாலே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். உடலிலுள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றை அளவுக்கு அதிகமான நீரை குடிப்பது வெளியேற்றி விடும். இது உடலை கடுமையான சோர்வில் தள்ளும். இந்தவகையில் மூளை பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்? தூய நீர் என்பது உங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை மலரவைக்காது. அதற்காக அதில் எந்த சுவையும் இல்லை என நினைத்து விடாதீர்கள். உங்கள் எச்சிலிலுள்ள வேதிப்பொருட்கள் நீருடன் வினைபுரிந்தால் டாடா குளுக்கோ ப்ளஸ் லெவலுக்கு இல்லையென்றால் சற்றே இனிப்பது போல தோன்றும். நன்றி: பிபிசி