இடுகைகள்

பெரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் எனது கடமையைத்தான் செய்தேன்! - பெரு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த வழக்குரைஞர்

படம்
  ஜோஸ் டெமிங்கோ பெரஸ் இவர்தான் இப்போதைக்கு பெரு நாட்டில் அதிகம் பேசப்படும் நபர். பெரு நாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு தள்ளியவர் இவர்தான்.  இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா, அந்த அவமானத்திற்கு பயந்து தற்கொலைக்கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.  ஒரு வழக்குரைஞர், வலிமை வாய்ந்த முன்னாள் அதிபரை எப்படி எதிர்க்க  முடிந்தது  என்பது பலருக்கும் ஆச்சரியம். ஆனால் அவரது நண்பர்கள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி போதிலிருந்து அப்படித்தான். நேர்மையாக இருக்கவேண்டுமென நினைப்பார். பிறரிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது அவர்களில் கண்களில் தெரியாத பயம்தான் என்றனர்.  பிரேசிலின் ஓடேபிரச்சிட் என்ற நிறுவனம்தான் ஒப்பந்தங்களைப் பெற பணத்தை வாரி இறைத்திருக்கிறது. இந்த நிறுவனத்திடன் பணம் பெற்றுக்கொண்டு அரசு ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதாகதான் கார்சியா மீது வழக்கு. தொடக்கத்தில் நான் எந்த பணத்தையும் வாங்கவில்லை என்று கூறியவர், இதில் நிறைய

ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!

படம்
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம். இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உ

பனைமரங்கள் விதைப்பு பெருநாட்டில் நிறுத்தப்படுகிறது!

படம்
காடுகள் அழிப்பில் பாமாயில் பங்கு! பெரு, கொலம்பியா நாட்டுக்கு அடுத்தபடியாக சூழல் கெடாமல் பனை மரங்கள் நடுவதாக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷன், உள்ளூர் அரசுகளோடு சேர்ந்து காடுகளைப் பாதுகாப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் 2021ஆம் ஆண்டு பெரு நாடு, பாமாயிலுக்காக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறும்.  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என ஜூன்பால்மா எனும் பாமாயில் விற்பனைச் சங்கத்தைச் சேர்ந்த கிரிகோரியோ சென்ஸ் கூறியுள்ளார். பெருவில் 86 ஆயிரம் ஹெக்டேர்களின் பனைமரங்கள் பாமாயிலுக்காக விதைக்கப்பட்டுள்ளன. தற்போது, 31500 ஹெக்டேர்கள் புதிய பனைமரங்கள் விதைக்கப்பட உள்ளன. “காடுகள் அழிப்பைத் தடுப்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சி. மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷனைச் சேர்ந்தவரான  சகோன். பெரு நாட்டில் ஆண்டுதோறும் 1100 சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்