இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிகளுக்கு இலவச உணவுதரும் முஸ்லீம்!

படம்
தெலங்கானா மகாத்மா!  தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள தபிபுரா காந்தி அரசு பொதுமருத்துவமனை நோயாளிகளுக்கு தினசரி இலவச உணவு வழங்கிவருகிறார் அசார் மக்சூஸி. சிறுவயதில் குடும்பத்தை காப்பாற்றி வந்த தந்தை இறந்துபோக, பசியும் பட்டினியுமாக கிடந்த வாழ்க்கை அசாருக்கு பிறரின் பசி, தாகம் போக்க தூண்டியுள்ளது ஆச்சர்யமான கதை. “குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான இரவுகளில் வெறும் வயிற்றுடன்தான் தூங்குவேன்” என இறந்தகாலத்தை கண்ணீர்மல்க பேசுபவர், சாலையில் உணவுக்கு கையேந்திய ஆதரவற்ற பெண்ணுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த தினத்திலிருந்து வாழ்க்கை மாறியிருக்கிறது. தபிபுராவில் முதல் மூன்றாண்டுகள் சொந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக்கொடுத்தவர், ஏழாண்டுகளாக இச்சேவையை் தொடர பல்வேறு நல் இதயங்களிடமிருந்து வந்த நன்கொடைகள் உதவியுள்ளன. “பெங்களூரு, ராய்ச்சூர், தந்தூர், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய இடங்களிலும் ஆயிரத்து இருநூறு பேர்களுக்கு இலவச உணவை அளிக்க முயற்சித்து வருகிறேன். ஏழைகளின் கண்களில் பசி நெருப்பு தீர்ந்து அமைதி படருவதை காண்பதே இறைவனைக் கண்ட திருப்தி” என நெகி

குழந்தைகளை கொல்லும் அதிகாரப்போர்!

படம்
பசியால் இறக்கும் குழந்தைகள்! ஏமனின் ஹஜ்ஜா நகரில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக பெற்றோர்களின் கண்முன்னே பசியால் துடித்து இறந்து வருகின்றனர். காரணம், சவுதி அரேபியாவின் இரக்கமற்ற போர்வெறிதான். உள்நாட்டு சந்தையில் உள்ள காய்கறிகளை, ரொட்டிகூட வாங்கமுடியாத வறுமையில் ஏமன் நாட்டினர் தவித்து வருகின்றனர். அலி அல் ஹஜாலியின் கண்முன்னே அவரது மூன்றுவயதுமகன் இறந்ததும் அப்படித்தான். ஹூதி புரட்சியாளர்கள் வடக்கு ஏமனைக் கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.  அவர்களை எதிர்த்து நடக்கும் போரில் வீசப்படும் ஏவுகணையால் பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர். உணவுக்கு அரசை நம்பியுள்ள எட்டு மில்லியன் ஏமன் நாட்டு மக்களின் எண்ணிக்கை விரைவில் 14 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். 2 மில்லியன் டாலர்களை ஏமன் மத்திய வங்கிக்கு அரபு அமீரகத்துடன் இணைந்து அளித்துள்ளதாக சவுதி கூறினாலும் சன்னி- ஷியா இனவெறுப்புக்கு ஏதுமறியாத மக்கள் பலியாகவேண்டுமா என்ற கேள்விக்கு சவுதி அரேபியா என்ன பதில் சொல்லப்போகிறத

இந்திய ராணுவத்தை திட்டமிட்டு கொல்லும் ஸ்நைப்பர் டீம்!

பாதுகாப்பு படைகளுக்கு புதிய எதிரி!  காஷ்மீரிலுள்ள இந்தியப்படைகளை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி பெற்ற ஸ்நைப்பர்கள் தீவிரமாக பலிவாங்க தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பரில் மூன்று இந்திய வீரர்கள் பலியாக ஸ்நைப்பர்களின் துல்லிய தாக்குதல்களே காரணம் என ராணுவம் கூறியுள்ளது. புல்வாமாவிலுள்ள நேவா, ட்ரால், நவ்காம் ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளர்கள் உதவியுள்ளனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை. டெலஸ்கோப் வசதிகொண்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பாக்.தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய இத்துப்பாக்கி ரகத்தில் 600 மீட்டர் தூரத்தில் ஒரு நிமிடத்திற்கு 700-950 ரவுண்டுகள் சுடலாம். எம்4 கார்பைனை பாகிஸ்தானின் சிறப்பு ராணுவப்படை பயன்படுத்தி வருகிறது. இந்திய வீரர்களின் புல்லட் ப்ரூப் உடைகளை துளைக்கும் சக்தி கொண்ட தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு சீனா வழங்குகிறது என சந்தேகமும் இந்தியாவுக்கு எழுந்துள்ளது. ஐ.நா சபையில் ஜெய்ஷ் –இ- முகமது இயக்கத்தையும் தடை செய்து அதன் தலைவரான மௌலானா மசூத

விலங்குகளை வேட்டையாட சீனா பச்சைக்கொடி!

படம்
மருத்துவத்திற்கு தடை நீக்கம்! – மருத்துவத்தில் காண்டாமிருகம் மற்றும் புலிகளின் கொம்புகள், எலும்புகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை சீன அரசு அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது. “25 ஆண்டுகளாக எலும்புகள் மற்றும் கொம்புகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த இருந்த தடை விலக்கிகொள்ளப்படுகிறது. இப்பொருட்களை பயன்படுத்தும்போது அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்” என சீன அரசின் கேபினட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு சூழலியல் ஆர்வலர்களிடையே கடுமையான கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கடந்தாண்டு உள்நாட்டில் தந்தங்களுக்கான சந்தையை சீன அரசு ரத்து செய்வதாக அறிவித்து விலங்கு நேசர்களிடையே எக்கச்சக்க பாராட்டுக்களை பெற்றது. ஆனால் சீன அரசின் தற்போதைய தடம் மாறிய அறிவிப்பு பாதுகாக்கப்படும் காண்டாமிருகங்கள், புலிகளை அழித்துவிடும் என அச்சம் சூழலியல் வட்டாரங்களில் பரவிவருகிறது. “சீனா 25 ஆண்டுகளாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டது உலகளவிலான சூழலியல் பிரச்னையாக விரைவில் மாறும்” என எச்சரிக்கிறார் உலக கானுயிர் அமைப்பைச்(WWF) சேர்ந்த மார்க்கரேட் கின்னார்ட்.

நம் குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது நமக்கே பீதியாவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? – நமது குரலை ஸ்பீக்கர்களில் கேட்கும்போது அதனை வெறுப்பது ஏன்? எந்த உடல் உறுப்புகளுக்கும் பிறருடையதோ, அல்லது செயற்கையாக கூட தயாரித்து பொருத்திக்கொள்ளமுடியும். ஆனால் குரலுக்கு மட்டும் ஆப்ஷனே கிடையாது. அவரவருக்கு என்ன வாய்க்கிறதோ அதுவேதான். அப்படிப்பட்ட குரலை பிறரோடு பேசும்போது சகிக்கும் நாம், ஸ்பீக்கர்களில் ரெக்கார்ட் செய்தபின் கேட்டால் கண்றாவியாக தோன்றும். அதற்குகாரணம், உச்சஸ்தாயியில் ஒலிக்கும் குரலின் தன்மையே. கேட்கும் குரல் நமது ஆளுமையின் வெளிப்பாடு என பிறர் நினைப்பார்கள் என்பதால் பொது இடங்களில் மைக் மோகனாக பாடும்போதும் பேசும்போதும் பலருக்கும் பயப்பந்து வயிற்றில் உருள தடுமாறுகிறார்கள்.

மூன்று நாட்டு அதிபர்களை ஒற்றுமையாக்கிய போர்!

படம்
புத்தக அரங்கு! The Allies: Churchill, Roosevelt, Stalin, and the Unlikely Alliance That Won World War II   Winston Groom   464 pp National Geographic பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்டாலின் ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும் ஒன்றிணைந்து இரண்டாம் உலகப்போரை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது. உலகின் வரலாற்றை மாற்றிய இப்போரை நடத்திய மூன்று அதிபர்களின் அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளை ஆசிரியர் வின்ஸ்டன் சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. A Misunderstood Friendship: Mao Zedong, Kim Il-Sung, and Sino-North Korean Relations, 1949-1976 Zhihua Shen 352 pp Columbia University Press சீனாவின் மாவோ – வடகொரியாவின் கிம் சுங் ஆகியோருக்கிடையேயான உறவு எப்படி இன்றுவரையும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டு தொடர்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.  

கோக்குமாக்கு தீர்வு சொன்னால் கோப்ரா எஃபக்ட் கிடைக்குமா?

படம்
பிட்ஸ்! விண்டோஸ் ஓஎஸ் தொடங்கும்போது ஒலிக்கும் வரவேற்பு ஒலி, ஆப்பிளின் மேக் ஓஎஸ்ஸிற்காக உருவாக்கப்பட்டது. பிரச்னைக்கான தீர்வு, பிரச்னையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் அதற்கு கோப்ரா விளைவு(Cobra Effect) என்று பெயர். நிலவில் அப்போலோ 11 விண்கல வீரர்கள் ஊன்றிய அமெரிக்க தேசியக்கொடி சியர்ஸ் எனும் கடையில் 5.50 டாலர்களுக்கு வாங்கப்பட்டது. விண்வெளியில் அழுதாலும் கண்ணீர் கீழே விழாது; காரணம், புவிஈர்ப்பு விசை இல்லாததுதான். பிரேக்கிங் நியூஸ் மற்றும் ஏராளமான கிசுக்கள், வதந்திகளை தேடித்தேடி படிப்பவர்களுக்கு Quidnunc என்று பெயர். 1993 ஆம் ஆண்டு அமெரிக்கா ஊறுகாய் ஆராய்ச்சிக்கென செலவு செய்த தொகை 2,77,000 டாலர்கள்.  

கட்டற்ற அறிவு மின்னூல் வெளியீடு!

படம்
இனிய நண்பர்களுக்கு, விண்டோஸ் தெரிந்தளவு அரசு கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள லினக்ஸ் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியாது. அதை தெரிந்துகொள்வது அறிவு சுதந்திரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் நூல்தான் இது. கட்டற்ற அறிவு தொடருக்கான ஐடியாவை சொன்னதும் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து இதற்கான பயன்பாடுகளை கூறிய கணியம்.காம் சீனிவாசன் அவர்களுக்கு என்றும் எனதன்பு. பல்வேறு இ-நூல்களை அவர் கொடுத்ததோடு அடிப்படையான லினக்ஸ் குறித்து பேசி ஊக்கப்படுத்தினார். இது குறித்து பல்வேறு இணையதளங்கள் உதவின. நூலில் அடிப்படையாக லினக்ஸ் எதற்கு என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது. லினக்ஸை எப்படி இன்ஸ்டால் செய்வது, அதில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து கூறப்படவில்லை. லினக்ஸை நாம் தேர்ந்தெடுப்பது ஏன்? அதன் அவசியம் குறித்து இந்நூலை படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன். இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-KakLMGgXvaf0

நினைவுக்கேணி மின்னூல் வெளியீடு!

படம்
அன்புள்ள நண்பர்களுக்கு, எழுத்தாளர்களின் கதைகளை படிப்பதும் அவர்களோடு நட்பு பேணுவதும் வேறுபாடான தன்மை கொண்டது. கவிதை படிக்க நன்றாக இருந்தாலும் அதை எழுதுபவர்களின் மனம் மகா கோரமாக இருக்கும். எழுத்தும் மனிதர்களும் ஒன்றுபோலவே இருப்பது மிக அரிது. பாவண்ணன் எளிய மனதில் சித்திரமாய் பதியும் சிறுகதைகள் மற்றும் கட்டுரை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவர், இரா.முருகானந்தம் என்ற வாசகருக்கு எழுதிய கடிதங்களை நினைவுக்கேணி என்ற நூலாக தொகுத்துள்ளோம். பதிலுக்கு பதில் என கிரா.- அழகிரிசாமி கடித நூல் போல வரவில்லை என்பது என் வருத்தம்தான். ஆனால் முடிந்தளவு எழுத்தாளர் பாவண்ணனின் சொற்களிலிருந்து அக்காலகட்டத்தில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை அறியமுடியும். வாசகர்கள் நிச்சயம் அதை தேடி அறிவார்கள் என நம்புகின்றேன். இணைய லிங்க் இதோ! https://tamil.pratilipi.com/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-oHoUDgtMphXj?utm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author

மின்நிலையங்களை அமைத்தால் கங்கை காலி

படம்
நேர்காணல் 2 ஜெய்ராம் ரமேஷ் பல்வேறு மாநிலங்கள் நீர்மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனவே? சூழல் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு பதிலாக பசுமை நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். 5 ஆண்டுகளுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு இந்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலங்களுக்கு இழப்பீடு கிடைக்காதது ஏன் என புரியவில்லை. உண்ணாநோன்பிருந்து உயிரிழந்த அகர்வால், கங்கையில் நடைபெறும் மணல்கொள்ளையை தடுக்கவும் கூட அரசை வற்புறுத்தினாரே? மணல்கொள்ளையை திருகலான அரசியல் பிரச்னை. இதனை தடுக்க உத்தர்காண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியாலுக்கு டஜனுக்கு மேலான கடிதங்களை எழுதியதோடு டெல்லியில் இருமுறையும் டேராடூனில் இருமுறையும்  சந்தித்து பேசியும் கூட  மணல் கொள்ளையை தடுக்க வற்புறுத்தினேன். ஆனால் மணல் கொள்ளை நிற்கவில்லை. கங்கை விவகாரமும் அப்படித்தான். இதற்கான பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக்கூட நினைத்தேன். ஆனால் அப்படிச்செய்தால் ஆளும் பாஜக மாநில அரசை குறிவைப்பதாக மாறும் அபாயமிருந்தது. முடிந்தவரை உத்தர்காண்ட் முதல்வரிடம் பே

ஸ்டார்ட்அப் மந்திரம் 1 மின்னூல் வெளியீடு!

படம்
இந்தியாவில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் பெரியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் முத்ரா கடன்களை நம்பி இளைஞர்கள் பலரும் நம்பிக்கை தரும் ஸ்டார்ட்அப் முயற்சிகளை செயல்படுத்த முயற்சித்தனர். அந்த நம்பிக்கையை பரவலாக்க நினைத்தேன். அதன்வழியாக உருவானதுதான் ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர். அமேசான் ஐடியாவை ஃபிளிப்கார்ட்டும் ஏர்பிஎன்பி ஐடியாவை ஓயோவும் எடுத்து லாபம் சம்பாதிப்பதை ஸ்டார்ட்அப் தொழில்முயற்சியாக எடுத்தால் இந்தியாவின் தனித்தன்மை காணாமல் போய்விடும். இந்த நூலில் ஸ்டார்ட்அப் தொழில்முயற்சிகளில் வென்றவர்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், பணிச்சூழல், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், களத்தில் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் ஆகியவற்றை  செய்திதாள், வணிக நூல்கள், இணையதளங்களில் சேகரித்து எழுதியுள்ளேன். அதேசமயம் தொழில்முயற்சி என்பது களத்தில் அச்சூழலுக்கு சிறந்ததும், நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முடிவு எடுக்கவேண்டியது  சிறந்த தலைவர்களின் கைகளிலேயே உள்ளது. இருபகுதிகளாக வெளியிடப்படவுள்ள ஸ்டார்ட்அப் மந்திரத்தின் முதல்பகுதி இது. https://tamil.pratilipi.com/story/%E0%AE%B8%E0%

நீர்மூலம் மின்சாரம் தயாரிப்பது சூழலுக்கு கேடுதான்

படம்
ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கும் ஜிடி அகர்வாலுக்குமான நட்பு குறித்து கூறுங்களேன் 2010 ஆம் ஆண்டு நான் காங்கிரசில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது அகர்வால் உண்ணாவிரதமிருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவரை சந்தித்து அவரின் கோரிக்கைகளை கேட்டேன். ஐஐடி கான்பூரில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராக அகர்வால் பணியாற்றிய போது என்னுடைய தந்தை மும்பை ஐஐடியில் அதேதுறையில் பேராசிரியராக இருந்தார். என்ன கோரிக்கைகளை அவர் உங்களிடம் முன்வைத்தார்? கோமுக் - உத்தர்காசி பகுதியை இயற்கை பகுதியாக அறிவிக்க கோரியதோடு, பாகிரதி, பாரோன் கடி, பால மனேரி ஆகிய இடங்களில் நடைபெறும் மின்சார நிலைய பணிகளை நிறுத்த கோரினார். இது குறித்து என்னுடைய  Green Signals: Ecology Growth and Democracy in India .  குநூலில் எழுதியுள்ளேன். பாரோன் கடி -பால மனேரி திட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால் லோகரினாக் மின்சார நிலைய திட்டத்திற்கான பணிகளில் ரூ.1000  கோடி(NTPC) செலவிடப்பட்டுவிட்டது. எனவே அத்திட்டத்தை நிறுத்தமுடியாத நிலை. இதனை எப்படி சுற்றுச்சூழல் துறை அனுமதித்தது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் இதுகுறித்து பிரதமர் மன்மோக

எழுத்தாளராக பாக்.கில் வாழ்வது கடினம்!

படம்
நேர்காணல்! “பாகிஸ்தானில் எழுத்தாளராக உயிர்வாழ்வது கடினம்!” முகமது ஹனிஃப், பாகிஸ்தானிய எழுத்தாளர் தமிழில்: ச.அன்பரசு பாகிஸ்தான் அரசியலைப் பற்றி வெளியே இருந்துதான் எழுதமுடியும் என தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளீர்கள். அப்படியென்ன பிரச்னையை சந்தித்தீர்கள்? பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் மூச்சுவிடமுடியாத சூழல்தான் உள்ளது. Dawn நாளிதழில் நான் சென்றாண்டு எழுதிய கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். என்னால் பிறரின் வாழ்க்கை அபாயத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினாலும் தேசதுரோகி என சித்தரிக்கப்படும் அபாயம் அங்கு நிலவுகிறது. எ கேஸ் ஆஃப் எக்ஸ்ப்ளோடிங் மேங்கோஸ் நூலில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த வழி பற்றி விவரித்திருந்தீர்கள். புதிய நூலான ரெட் பேர்ட்ஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்ததா? நாவல் எழுதுவதிலுள்ள ஆபத்து, உங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் எழுதுவதோடு வாசகருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே. தொடங்கிய நாவலை வெற்றிகரமாக முடிக்கவேண்டும

ஜனநாயக இந்தியாவின சிற்பி!

படம்
நவீனச்சிற்பி நேரு! 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக செங்கோட்டையில் இந்தியக்கொடி ஏற்றிய நேரு, மக்களிடையே உரையாற்றினார். 1948 ஆம் ஆண்டு பிப்.12 அன்று காந்தியின் இறுதிச்சடங்கி் நேரு பங்கேற்றார். தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி, கங்கையில் கரைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரு, பிலாய் மற்றும் பொகாரோ இரும்பு தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுவந்தார். ஸ்டாலின்கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிடுகிறார் நேரு.    1959 ஆம் ஆண்டு மே21   அன்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட டிசைனை பிரதமர் நேருவிடம் விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர். 1961 ஆம்ஆண்டு அணிசேரா இயக்க மாநாட்டில் எகிப்தின் காமல் அப்தெல் நாசர், யூகோஸ்லேவியாவின் ஜோசப் டில்டோவுடன் நேரு அமர்ந்திருக்கிறார்.  

நீதிமன்றத்தை விட நாடாளுமன்றமே உயர்ந்த அமைப்பு

படம்
முத்தாரம் Mini அயோத்தியாவில் ராமர்கோவில் கட்ட தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளீர்கள். இதனை விளக்குங்களேன். கோவிலை கட்ட 400 ஆண்டுகளாக முயற்சி நடைபெற்றுவருகிறது. இது புதியகோரிக்கை அல்ல. முகலாயர்கள், ஆங்கிலேயர்களின் வருவாய்த்துறை ஆவணங்களில் ராமர் பிறந்த இடம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1872-2003 காலகட்ட ஆவணங்களில் கோவில் இருந்ததும், அழிக்கப்பட்ட விவரங்கள் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக சொல்லிவருகிறதே? ராமர்   கோவிலை கட்டும் லட்சியத்தில் பாஜக பின்வாங்கவில்லை. அதன் நிலைப்பாடு மாறினாலும் அதன் பொறுப்பு நீர்த்துப்போகவில்லை. ராமர்கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது தனிநபர் மசோதா எதற்கு? இது கோர்ட்டை அவமதிப்பதாகாதா? நாடாளுமன்றம் நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய அதிகார மையம். 1950 ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையை ஒழித்தபோது கூட சரியான முடிவை நாடாளுமன்றம் எடுத்தது. தனிநபர் மசோதா கொண்டு வந்தது கோர்ட் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதோ, அவமதிப்பதோ ஆகாது. கோர்ட் தீர்ப்பை கட்சிகள் மீறப்போவதில்லை. இவ்விஷயத்தில் அவ

நித்தம் வேண்டும் ரத்தம்!

படம்
நித்தம் வேண்டும் ரத்தம்! அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின்(1974-) பள்ளியில் நடந்த அவமானங்களால் துவண்ட ரஷ்யாவின் பிச்சுஸ்கின், தாத்தாவின் தூண்டுதலால் செஸ்சில் வித்தகரானார். தாத்தா இறந்துபோக,ஆவேசமானவர் இலவச வோட்கா காட்டி 48 நபர்களை கொன்றார். பின்னாலிருந்து ஒருவரின் மண்டையை சுத்தியலால் உடைத்து திறந்து துளையில் வோட்காவை ஊற்றி கொல்வது பிச்சுஸ்கினின் சிக்னேச்சர் ஸ்டைல். அனடோலி ஓனோபிரைன்கோ(1953-2013) உக்ரைன் விலங்கு என்றழைக்கப்பட்ட அனடோலி, தாய் இறந்தவுடன் தந்தை ஏற்காததால் காப்பகத்திற்கு அனுப்பபட்டவர். பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொல்பவர் குடும்பமாக தீர்த்துக்கட்டி வீட்டுக்கு தீவைத்து ஆதாரங்களை அழித்துவிடுவார். 52 பேர்களை கொன்ற வனவியல் பட்டதாரி, சிறையில் மாரடைப்பால் இறந்தார்.   ஹெரால்டு சிப்மன்(1946-2004) இங்கிலாந்தில் 250 நபர்களை கொன்ற டாக்டர் டெத் என பெயரிடப்பட்ட ஹெரால்டு, டயாமார்பினை பயன்படுத்தி 80% வயதான பெண்களுக்கு பரலோக சீசன் டிக்கெட் வழங்கினார். பதினைந்து கொலைகளுக்கு கோர்ட் ஆயுள்தண்டனை தர தூக்குபோட்டு உயிரிழந்தார்.     

விண்கல மனிதர்கள்!

படம்
விண்கல மனிதர்கள்! 1961 ஆம் ஆண்டு ஏப்.12 அன்று சோவியத் ரஷ்யாவின் வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் 1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று முதல்வீரர்(108 நிமிடங்கள் இருந்தார்) என்ற சாதனை படைத்தார். இதேயாண்டில் மே 5 அன்று, அமெரிக்க வீரர் ஆலன் பி ஷெப்பர்ட் புராஜெக்ட் மெர்குரி திட்டத்தில் விண்வெளிக்கு சென்று 15 நிமிடங்கள் செலவிட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று சோவியத் பெண் வீரரான வாலென்டினா விளாதிமிரோவ்னா வோஸ்டாக் 6 விண்கலத்தில் விண்வெளி சென்ற சாதனை படைத்தார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, சோவியத் வீரர் அலெக்ஸி லியோனோவ் முதன்முதலில் விண்வெளியில் நடந்த பெருமை பெற்றார். 1969 ஆம்ஆண்டு ஜூலை 20 அன்று அப்போலோ 11 விண்கலத்தில் நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஜூனியர் அதில் நடந்து சாதித்தனர். 1984 ஆம்ஆண்டு ஏப்.2 அன்று இந்திய விமானப்படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, சோவியத் விண்கலத்தில் ஏறி விண்வெளி தொட்டார்.  

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு..

படம்
கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு.. "The Naked Roommate," by Harlan Cohen கல்லூரி செல்பவர்கள் வகுப்புகளைத் தாண்டி கல்லூரி வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்,நண்பர்களை அடையாளம் காண்பது, விடுதி அறை தூய்மை துணிதுவைப்பது அனைத்துக்கும் வழிகாட்டும் நூல் இது. “Outliers: The Story of Success," by Malcolm Gladwell 10 ஆயிரம் மணிநேரங்களை செலவிட்டு ஒரு விஷயத்தில் மாஸ்டர் ஆவது எப்படி என சுவாரசியமாக விவரிக்கிறார் கிளாட்வெல். "The Idiot," by Elif Batuman துருக்கி அகதி குடும்பத்தைச் சேர்ந்த செலின் ஹார்வர்ட் பல்கலையில் இணைகிறாள். அங்கு நட்பாகும் இவான், ஸ்வெட்லனா ஆகியோரின் மூலம் தனது வாழ்வை அடையாளம் காண்பதே நாவலின் கதை. "Exit West," by Mohsin Hamid தீராத வன்முறை நிகழும் தேசத்திலிருந்து தப்பி அகதியாக செல்லும் சயீத்-நாடியா எனும் இளம் காதல்ஜோடியின் போராட்டமே கதை. "This is Water," by David Foster Wallace   வாழ்வை தீர்மானிக்கும் கல்லூரிப்பருவத்தில் மதிப்பெண் பின்னால் ஓடாமல் திறமையாக வெல்ல இந்நூலிலுள்ள வாலஸி

ரத்தம் தெறிக்க ஒரு போர்! - ஃபைனல் ஃபேன்டஸி அதகளம்

படம்
Final Fantacy மூன்று அத்தியாயங்கள் வீடியோ வடிவில் பார்த்தேன். முதல் கதை, பூமியில் தாவரங்கள் உள்ளதா என தேடிவரும் பெண், அவளை நேசிக்கும் ராணுவ தளபதி, ஆராய்ச்சிகளை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் ராணுவத்தலைவர், பூமியை கட்டுப்படுத்திவிட்ட நுண்ணுயிரிகளின் கூட்டம் என கதை செல்கிறது.  நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் உதவி கிடைத்தால் மட்டுமே ஆராய்ச்சி செய்யும் நாயகி உயிர்பிழைக்கும் நிலை. ஆனால் அப்படியொரு ஆராய்ச்சி தேவையில்லை என ராணுவத்தலைவர் தடுத்து விண்ணிலிருந்து பூமியை ஏவுகணைகளால் தாக்குகிறார். இதற்கு அவருக்கு கீழேயுள்ள அதிகாரி எப்படி தனக்கு அட்வைஸ் சொல்லலாம் என்ற ஈகோவும் காரணம்.  சயின்டிஸ்ட் நாயகிக்கு காதலனான ராணுவத்தளபதியும் துணைநிற்க பூமியில் உதவி கிடைத்ததா? நாயகி உயிர்பிழைத்தாளா? என்பதே கதை. மெதுவாக நகரும் கதை பெரிய சோதனை. அதையும் மீறி பார்த்தாலும் நுண்ணுயிரிகளின் ஆற்றலுக்கு முன்னால் மனிதர்கள் பரிதாபமாக பலியாகிறார்கள். நாயகியும் மூத்த விஞ்ஞானி மட்டுமே இறுதியில் உயிர்பிழைக்கிறார்கள்.  Kings alive இது தேசத்தை ரத்தம் சிந்தி கைகால்களை உடைத்துக்கொண்டு தேசம் காக்கும்

கைவிடப்படும் தேவாலயங்கள்!

படம்
கைவிடப்படும் தேவாலயங்கள்! அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் அதிகரிக்கும் வாடகை, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் தொன்மையான பல்வேறு தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. பத்தொன்பதாவது நூற்றாண்டு கட்டிடமான செயின்ட் வின்சென்ட் டி பால் தேவாலயத்தில் 2000 ஆம் ஆண்டு முதலாக மக்களின் வருகை குறைந்து வந்தது. வேறுவழியின்றி அதனை விற்றனர். இன்று அந்த இடத்தில் அபார்ட்மெண்ட் உயர்ந்து நிற்கிறது. அங்கு தங்க வாடகை 4 ஆயிரம் டாலர்களை வசூலிக்கின்றனர். கடவுளே இனி அங்கு காசு கொடுத்துத்தான் தங்கமுடியும். அமெரிக்காவில் ஆண்டுக்கு 6-10 ஆயிரம் தேவாலயங்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 70 சதவிகித கிறிஸ்தவர்கள் இருந்தாலும் சர்ச்சுகளுக்கு நன்கொடை அளிப்பது மெல்ல தேய்ந்து வருகிறது. இவர்களை நோனெஸ் என்று  குறிப்பிடுகிறார்கள். தேவாலயங்கள் கண்முன்னே தூசி படிந்து இடிந்து போவதை தவிர்க்க மக்கள் அதனை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்று வருகின்றனர். விலை குறைவாக கேட்டாலும் அதனை காப்பாற்ற வேறுவழியே இல்லை. தெற்கு போஸ்டனிலுள்ள 140 ஆம் ஆண்டு வரலாறு கொண்ட செய

ஐரோப்பிய ராணுவம் சாத்தியமான கனவா?

படம்
ஐரோப்பிய ராணுவம் சாத்தியமா? ராணுவ உதவிகளுக்கு ட்ரம்பின் அமெரிக்காவை சார்ந்திருப்பது பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆர்மி தேவை என்ற கோரிக்கையை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எழுப்பினாலும் நேட்டோ படைக்கு வேலையென்ன என இங்கிலாந்து இந்த யோசனையை மறுத்து வருகிறது. நகைமுரணாக ஐரோப்பிய ஆர்மி திட்டத்தை 1950 ஆம் ஆண்டு தடுத்ததே பிரான்ஸ் அரசு என்பதை அறிவீர்களா? ஐரோப்பிய ஆர்மி நிறைவேற வாய்ப்பு இப்போது கூடிவருவதற்கு பிரெக்ஸிட்டும், ட்ரம்ப் நேட்டோவிலிருந்து விலக முயற்சிப்பதும் முக்கியமான காரணம். இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதால் அதன் ராணுவ பலம் பெருமளவு குறையும் அபாயம் உள்ளது. பிரான்ஸ்,ஜெர்மனி என இரண்டு நாடுகளும் ஆயுத உற்பத்தி, தளவாடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பெரும் சக்தி வாய்ந்தவை கிடையாது. அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பாக இருக்க ரோமானியா, செக், டச்சு ஆகிய ராணுவங்களை இணைத்து ஐரோப்பிய ராணுவம் உருவாவது அவசியம். போருக்கு இல்லையெனினும் தங்களை பாதுகாக்கவாவது ஐரோப்பிய ராணுவம் அவசியம்.

உலகப்போரில் கருப்பின வீரர்களுக்கு நடந்த அநீதி!

படம்
மறக்கப்பட்ட கருப்பின வீரர்கள்! முதலாம் உலகப்போரின் 100 வது ஆண்டு. அமெரிக்க ஜெனரல் ஜான் பெர்ஸிங், 1,500 அமெரிக்க வீரர்களை பிரான்சில் படையில் இணைந்து போரிட்டதாக பெருமைப்படுகிறார். ஆனால் இப்போரில் பங்கேற்ற 3 லட்சத்து ,80 ஆயிரம் ஆப்பிரிக்க- அமெரிக்க வீரர்களின் பங்களிப்பை வெற்றிபெற்ற பின்பு யாரும் பேசவேயில்லை. “அமெரிக்க ராணுவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவேற்றுமை இதற்கு காரணம். கருப்பின வீரர்களின் நினைவுகளை மக்களிடமிருந்து அழிக்கவே ராணுவம் முயற்சித்து வருகிறது” என்கிறார் அமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலையில் ஆப்பிரிக்க-அமெரிக்க வரலாற்று பேராசிரியரான சாட் வில்லியம்ஸ். “உலகம் ஜனநாயகத்திற்கேற்றதாக இருப்பது அவசியம்” என்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் 1917 ஆம் ஆண்டு போர் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் இனவெறுப்புக்குள்ளான கருப்பின வீரர்கள் தம் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் ராணுவத்தில் சேர்ந்தனர். ஆனால் முதலில் அவர்களை ராணுவம் பணியில் சேர்க்க மறுத்துவிட்டது. பின்னர் அமெரிக்க அரசின் சட்டம் மூலமாக வீரர்கள் சேர்க்கப்பட்டனர். சமையல் சுகாதாரப் பணிகளை த

மறைந்துள்ள கேமராக்களை கண்டுபிடிக்க ஸ்பை ஃபைண்டர் புரோ!

படம்
பிரைவசி காக்க! நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் இடத்திலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்பை கேமராக்களை கண்டுபிடிக்க ஸ்பை ஃபைண்டர் புரோ டிடெக்டர் உதவுகிறது. பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் கூட ஸ்பை ஃபைண்டர் மூலம் அதனை கண்டறியமுடியும் என்பது இதன் பிளஸ் பாய்ண்ட். கிக் ஸ்டார்டரில் அறிமுகமாயுள்ள ஸ்பை ஃபைண்டர் 10 ஆயிரம் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த சாதனம் அடிக்கடி விடுதிகளுக்கு சென்று தங்குபவர்களுக்கு உதவக்கூடும். CCD, CMOS, CCTV, Fisheye   உள்ளிட்ட அனைத்து வகை கேமராக்களையும் எளிதாக கண்டுபிடிக்கமுடியும். இதன் வியூபைண்டரில் கண்களை வைத்து பட்டனை அழுத்தினால் எல்இடி லைட் இயங்கத்தொடங்கும். எங்கு கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ அந்த லென்ஸில் ஸ்பை ஃபைண்டரின் எல்இடி வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும். உடனே மறைவாய் வைக்கப்பட்ட கேமராக்களை கண்டுபிடித்து பிரைவசி காக்கலாம். ஆடியோ ரீசிவர்களை கண்டுபிடிக்கும் திறன், ஜிபிஎஸ் ட்ராக்கர்களை கண்டுபிடிக்க முடியாதது இதன் குறை.

வேற்றுகிரகவாசிகளை ஆராய்ந்த உளவியலாளர்!

படம்
உளவியலாளர் கார்ல் ஜங்க்! உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்டுக்கு பிறகு நடத்தை உளவியல் பற்றிய தியரிகளால் புகழ்பெற்றவர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கார்ல் ஜங்க்(1875-1961). ஸ்விட்சர்லாந்தின் கெஸ்வில்லில் பிறந்த கார்ல் ஜங்க் தனிமையில் வாழ்ந்து வளர்ந்த குழந்தை. அவரின் மூன்று வயதிலேயே தாய் எமிலிக்கு மனநலப்பிரச்னைகள் ஏற்பட்டது. பாசெல் பல்கலையில் 1900 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பர்கோல்ஷில் காப்பகத்தில் பணியாற்றும்போது குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்லும் ஏற்படும் வித்தியாச மாற்றங்களை நோயாளிகளிடம் கண்டறிந்தார். “தந்தையின் ஆளுமையும் தாயின் கண்டறியமுடியாத குணங்களும் எனக்கு இருந்தன.” என தன்னைப்பற்றியும் கூறிய ஆளுமை இவர். ரசவாதம், யோகா என பல்வேறு முறைகளை ஆராய்ந்து கருத்து கந்தசாமியாக ஒவ்வொன்றுக்கும் கருத்துக்களை மைக் நீட்டாமலேயே பேசி கண்டனங்களைப் பெற்றார் கார்ல் ஜங்க்.  Saucers: A Modern Myth of Things Seen in the Skies(1958) என வேற்றுகிரகவாசிகளைப் பற்றி நூலை எழுதி வெளியிட்டார். பெண்களின் மீது தீராத காதல் கொண்டவர் 1961 ஆ