இந்திய ராணுவத்தை திட்டமிட்டு கொல்லும் ஸ்நைப்பர் டீம்!


பாதுகாப்பு படைகளுக்கு புதிய எதிரி! 

காஷ்மீரிலுள்ள இந்தியப்படைகளை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி பெற்ற ஸ்நைப்பர்கள் தீவிரமாக பலிவாங்க தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பரில் மூன்று இந்திய வீரர்கள் பலியாக ஸ்நைப்பர்களின் துல்லிய தாக்குதல்களே காரணம் என ராணுவம் கூறியுள்ளது.

புல்வாமாவிலுள்ள நேவா, ட்ரால், நவ்காம் ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளர்கள் உதவியுள்ளனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை. டெலஸ்கோப் வசதிகொண்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பாக்.தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய இத்துப்பாக்கி ரகத்தில் 600 மீட்டர் தூரத்தில் ஒரு நிமிடத்திற்கு 700-950 ரவுண்டுகள் சுடலாம். எம்4 கார்பைனை பாகிஸ்தானின் சிறப்பு ராணுவப்படை பயன்படுத்தி வருகிறது.
இந்திய வீரர்களின் புல்லட் ப்ரூப் உடைகளை துளைக்கும் சக்தி கொண்ட தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு சீனா வழங்குகிறது என சந்தேகமும் இந்தியாவுக்கு எழுந்துள்ளது. ஐ.நா சபையில் ஜெய்ஷ் –இ- முகமது இயக்கத்தையும் தடை செய்து அதன் தலைவரான மௌலானா மசூத் அசாரை தீவிரவாதி என அறிவிக்க முயன்ற இந்தியாவின் முயற்சியை நான்குமுறை சீனா தோற்கடித்துள்ளது.