தொடுகிறேன்.. வருடுகிறாய்...
தொடுகிறேன்.. வருடுகிறாய்... எஸ் ஜே சூர்யா போல செய்தாலும் சரி. அப்படி இல்லையென்றாலும் சரி. அடிப்படையில் ஒருவரைத் தொட்டாலே, அவரது தோலின் மென்மை, கடுமை, காய்த்துப்போனது, கன்றிப்போனதை அறியமுடியும். தொடும்போது கைகளிலுள்ள உணர்விகள், அத்தகவலை மூளைக்கு கொண்டு செல்கின்றன. இதற்கு மோட்டார் நியூரான்கள் உதவுகின்றன. அடுத்து என்ன செய்யலாம் என்பதை மூளை மோட்டார் நியூரானுக்கு கூறுகிறது. இந்த தகவல்கள் தசை வழியாக கடத்தப்படுகின்றன. ஒரு வயது குழந்தை நீருக்கடியில் விடப்பட்டால், அதன் உடலிலுள்ள தசைகள் தானியங்கியாக இயங்கி நுரையீரலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க முயல்கின்றன. இதை ரெஃப்ளக்ஸ் செயல்பாடு என வரையறுக்கலாம். நம்முடைய தோலில் வலியை உணரும் நியூரான்கள் 3 ட்ரில்லியன்களுக்கும் மேல் உண்டு. மருந்தகங்களில் வாங்கி சாப்பிடும் வலிநிவாரணிகள் தனி. அவையெல்லாம் இன்றியே உடலே வலிநிவாரணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் எண்டார்பின். ஒரு பொருளைத் தொட்டால் அது எப்படியிருக்கிறது? மென்மையா, வன்மையான, வழுவழுப்பா, வெப்பமாகவா என தொடுதல் உணர்விகள் மூலம் மூளை அறிகி...