கடனால் தவிக்கும் உலகநாடுகள்! எச்சரிக்கும் ஐஎம்எஃப்
உலகம் சந்திக்கும் நிதிநெருக்கடி ! தனி நாடுகளின் ஏற்றுமதி , இறக்குமதிகளால் நேரும் பணவீக்கம் என்பதைத் தாண்டு உலகநாடுகள் பெற்றுள்ள கடன் 164 ட்ரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதை உலக நிதிக்கழகம் (IMF) எச்சரித்துள்ளது . தற்போது உலகிலுள்ள உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக அரசு மற்றும் தனியாரின் கடன் அளவு விகிதம் 225 சதவிகிதம் (2016) என்பதை தன் அறிக்கையில் நிதிக்கழகம் வலுவாக கூறியுள்ளது . " இது மிக அதிக அளவு . எல்லை மீறும்போது நாடுகளின் வணிகத்தில் நிதிப்பேரழிவு நிகழும் " என்கிறார் உலக நிதிக்கழகத்தின் பணவீக்கத்துறையைச் சேர்ந்த விட்டர் காஸ்பர் . அமெரிக்காவின் நிதிச்சீரழிவுகளிலிருந்து வணிகம் மெல்ல இப்போதுதான் மீண்டுவரும் நிலையில் இப்படியொரு வார்னிங்கை உலக நிதிக்கழகம் கொடுத்துள்ளது . தற்போது மூன்று காலாண்டுகளாக செய்துவரும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தனியார் கடன்களின் அளவு சுனாமியாய் அதிகரித்து வருவதை குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது உலக நிதிக்கழகம் . ��ாக பேசுகிறார் கரன் ஆச்சார்யா. le='font-size:20.0pt;font-family:TAUN_Elango_Valluvan'>