இந்திய கிராமங்களுக்கு மின்சக்தி கிடைத்தது உண்மையா?


Image result for power




அறிவோம் தெளிவோம்!

இந்தியா நூறு சதவிகித மின்சாரவசதி பெற்றுவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில் 17 சதவிகித வீடுகளில் இன்றும் மின்வசதி கிடையாது என்ற உண்மை வெளியாகியுள்ளது.

பிரதான் மந்திரி சாகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா திட்டஅறிக்கை, 17.4% கிராமப்புற வீடுகள் இன்னும் மின்வசதி பெறாமல் உள்ளன என்று கூறுகிறது.

1950 ஆம் ஆண்டு வரை 3,061 கிராமங்களுக்கு மட்டுமே மின்வசதி கிடைத்திருந்தன. 1991-2003 காலகட்டத்தில் மாநில மின்வாரியங்களின் பணிகளால் 44 ஆயிரம் கிராமங்கள் மின்வசதி பெற்றன.


2019 ஆம் ஆண்டு மார்ச் 31 க்குள் நூறு சதவிகித வீடுகளுக்கு மின்வசதியைப் பெற்றுத்தர மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், முயன்றுவருகிறார். .பி, பீகார், ஒடிஷா, ஜார்க்கண்ட், அசாம், ராஜஸ்தான், .பி ஆகிய மாநிலங்களில் மத்தியப்பிரதேசம் மட்டுமே அமைச்சர் சொன்ன நாட்களுக்குள் மின்வசதியை தருவதே சாத்தியம். ஐந்து மாதங்கள் செலவிட்டால் போதும்