இடுகைகள்

மயிலாப்பூர் டைம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

மயிலாப்பூர் டைம்ஸ்! - குடியால் கெட்ட வேலு சித்தப்பாவின் வாழ்க்கை!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் எதிர்பாராத மரணம் இதோ  இன்று காலையில்தான் அம்மாவிடம் பேசினேன். அவள் எப்போதும், தனக்கு நேர்ந்த அனுபவங்களை துல்லியமாக காட்சிப்பூர்வமாக விவரிப்பாள். தூங்கி எழுந்தபோது எப்படியிருந்தது, முகத்தின் இடது கண் எப்படி கண்ணாடியில் தெரிந்தது, இடதுகாலை எடுத்து வைக்கும்போது வீட்டின் தரை குளிர்ந்திருந்தது வரையில் சொல்லுவாள். ஆனால் இறப்பு என்பது யாரையும் மருட்டுவதுதான். இறப்புச்செய்தியை சொல்லும்போது, குரலில் ஆழ்ந்த அமைதி எப்படி பூக்கிறது என்று ஆய்வுதான் செய்யவேண்டும்.  அவள் சொன்னது வேலுச்சித்தப்பாவின் இறப்புச்செய்தியை. வேலு சித்தப்பாவைப் பொறுத்தவரை, அவருக்கு வாழ்க்கையில் மது பாட்டில்தான் எல்லாமே என்று ஆகி வெகுகாலமாகிவிட்டது. திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, அடித்து துரத்திவிட்டார். அவர் மனைவியும் தாய் வீட்டுக்கு சீராட்டு போய்விட்டார். இன்று அவரது மகனுக்கு 11 வயது. வேலை செய்வதே குடிப்பதற்குத்தான் என்று சொல்லுமளவு குடிநோயாளியாகிவிட்டார். இவருக்கு நேர்ந்த இறப்பை இங்கு பதிவிடும்போது, படிக்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்?  சிரோசிஸ். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோய்விட்டார்

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்

மயிலாப்பூர் டைம்ஸ் - கூட்டு மிளகுத்தூள் எனும் பேரமுது!

படம்
  Mylapore Times வந்தே ஏமாத்துறோம்... அல்டிமேட் லெஜண்ட்ஸ் -1 எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அலர்ஜி பிரச்னை இருப்பதால், பால் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் பால் பொருட்களை சேர்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தயிரை சேர்த்து அதில் மிளகுப் பொடியைப் போட்டு சாப்பிட்டு வருகிறேன். இதில் தயிர் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஹெரிடேஜ் கர்ட் பத்து ரூபாய் பாக்கெட்டில் தடையின்றி கிடைத்து விடுகிறது. ஹட்சன் என்றால் எப்போதும் டப்பாதான். அதில் தயிரின் அளவு 40 கிராம் குறைவாக இருக்கும். எனவே, பாக்கெட் தான் வாங்குபவர்களுக்கு லாபம். டப்பா, பாக்கெட் இரண்டுமே பத்து ரூபாய் என்றாலும் கிராம்களை வேறுபடுத்தியுள்ளனர்.  இந்த நேரத்தில் தான் மிளகுத்தூளை வாங்க கடைக்குப் போனேன். மயிலாப்பூரின் பஜார் ஸ்ட்ரீட்டில், பூக்கடை ஒன்று இருக்கும் அதற்கு அருகில் இளங்கோ என்ற நவீன நாகரிக கடை இருக்கும். அதில் வேலை செய்பவர், அவர்தான் முதலாளி. என் ரேஞ்சு என்ன தெரியுமா, என்னைப் போய் பொட்டுக்கடலை மடிக்கச்சொல்லி கேட்குற என்பது போன்ற அலுப்பு முகத்தில் தெரியும். இவர் கடையில் வாங்கிய 50 ரூபாய் அரிசி இன்னொரு அநியாயம். அதில் இருந்த

வாங்கினா ஏமாந்துருவீங்க- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் எப்படியும் ஏமாத்துவோம்... அண்மையில் அலுவலகம் அருகே உள்ள அரசு நடத்தும் காமதேனு கடைக்கு சென்றேன். சுற்றுமுற்றும் உள்ள ஜியோ மார்ட், ஸ்பென்சர், ஷோபிகா, நீல்கிரிஸ் என எல்லா கடைகளையும் விட இங்கு கொஞ்சம் பொருட்களின் விலையைக் குறைத்துக் கொடுக்கின்றனர். அதாவது ஆஃபர் அப்புறம் வந்து வாங்கிக்கோங்க என்று சொல்லாமலேயே பில்லிலேயே விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.  அங்கு எப்போதும் போல போகும்போது செய்த தவறு, முத்ரா என்ற பிராண்டை வாங்கியது. அப்போது அம்பிகா பருப்பு பொடி தீர்ந்து போயிருந்தது. அதனை இப்போது பெயர் கூட மாற்றிவிட்டார்கள். அம்பிகா நெய் பருப்புப்பொடி. இதுதான் பருப்பு பொடிகளில் உருப்படியானது. நானும் சக்தி, ஆச்சி, 777 என நிறைய பருப்பு பொடிகளை வாங்கிப் பார்த்து வயிறு பிரச்னையானதுதான் மிச்சம். முத்ரா பிராண்டு இந்த பிரச்னைகளை செய்யவே இல்லை. 42க்கு ஒரு ரூபாய் குறைக்காமல் வாங்கினேன்.  இரண்டு வாரம் கழித்து சாப்பிட எடுத்தேன். அப்போதும் கூட அம்பிகா பருப்பு பொடி தீர்ந்துவிட்டதால்தான் அந்த சூழ்நிலை வந்தது. எடுத்து சோற்றில் போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்தால் எந்த ருசியும் இல்லை.

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து

மயிலாப்பூர் டைம்ஸ் - பாரம் சுமந்த திருவண்ணாமலைப் பயணம்!

படம்
  பாரம் ஏந்திய பயணம்! சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றிருந்தேன். அங்குதான் குருவி என்ற  அமைப்பில் முன்னர் கிடைத்த நட்புகள் இருந்தன். முன்னர் வேலை செய்யும்போது நிறைய பேர் நட்பில் இருந்தாலும் என்னால் அதில் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது தினேஷ் என்பவரைத்தான். அதாவது ஒருவரைத்தான்.  இவர் தொழில்முறையில் புகைப்படக்காரர். இப்போது மெல்ல வீடியோக்களையும் பதிவு செய்துவருகிறார். தினேஷ் அண்ணாவிடம் பேசுவது தொடர்புகொள்வது தவம் செய்யும் முனிவரிடம் அனுமதி கேட்டு சந்திப்பது போலத்தான். போன் செய்தால் பெரும்பாலும் எடுக்கமாட்டார். அப்படி எடுக்கும்போதும் நிறைய வேலைகள் இருப்பதாக சொல்லிவிடுவார். அவுட்கோயிங்கிற்கு அவசியமில்லை. இன்கம்மிற்கு ரெஸ்பான்ஸ் இல்லை என காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு படத்தில் சொல்லுவார். அதே கேரக்டர்தான் அவர்.  அப்புறம் எப்படி அவரைப் போய் பார்ப்பது? சரியான பதில் கிடைக்காததால்இதனால் சில வாரங்களாக திருவண்ணாமலை செல்லும் திட்டம் தடங்கலாகி நின்றுகொண்டே இருந்தது.  சென்னையில் விடியல் முழக்க முதல் அமைச்சர் எப்போது என்ன சொல்லுவார் என்றே பீதியாக பலரும் வீட்டில் வேலை செய்கிறோம் என்று சொல்லி

புத்தக வாசிப்பு வட்டமா? அப்ஸ்காண்ட் ஆயிருங்க ப்ரோ!- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! நமக்கான பிரச்னைகள் நாம் செய்யும் செயலால் உருவாகிறது என்று சொல்லுவார்கள். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. என்ன அதன் டிசைன்தான் கொஞ்சம் வேறுவடிவில் இருக்கிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தக வாசிப்பு, விமர்சன கூட்டங்களுக்கு போவது வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். அதற்கு காரணம், அரைகுறையாக படித்துவிட்டு அந்த கூட்டத்திற்கு வருபவர்களும், எழுத்தாளரை கேள்வி கேட்டால்போதும் அவரை மடக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சினிமாவில் இயங்கும் உதவி இயக்குநர்களும்தான். இப்படி இலக்கிய அக்கறையைக் காட்டிக்கொண்டாலும் இவர்கள் படம் எடுக்கும்போது கதை என்ற தலைப்பில் தனது பெயரை மட்டுமே போட்டுக்கொள்வார்கள் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. எங்கேயோ சிக்கிக்கொண்ட கதையைத்தானே சொல்ல வருகிறாய் என இந்நேரம் யோசித்திருப்பீர்கள். அதேதான். மோசமான டைமிங்கில் மாட்டிக்கொண்ட சம்பவம். எனது மடிக்கணினி அடிக்கடி பிடிவாதம் பிடித்த குழந்தையாக வேலை செய்யமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனவே இதனை வாங்கிக்கொடுத்த டெக் நண்பரிடம் உதவி கேட்டேன். அவரைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு விஷயமா என்ற ரீதியில் எனது

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின.  மயிலாப்பூரில் லக்கி என்ற ஸ்டேசனரி கடை உண்டு. அங

சார் பேரு செப்பன்டையா.....

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் சார் பேரு செப்பன்டையா.... பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், புரோவிசன் கடைகள், ஃபேன்சி கிப்ட் கடைகள் அதிகமாகியுள்ளன. இதை யாருமே மறுக்க முடியாது. பெரும்பாலான திறன் சார்ந்த கடைகளை விட சேவை சார்ந்த துறை அதிக பங்களிப்பு கொண்டதாக மாறியுள்ளது.  ஆனால் இவற்றில் நடந்துகொள்ளும் முறை மாறியிருக்கிறதா என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது என முழிக்க வேண்டிவரும். வாடிக்கையாளர் சார்ந்த அக்கறை முன்பிருந்ததை விட இன்று குறைந்துவிட்டது. மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் இரண்டாவது முறை சென்று வாங்கியபோதும் அழுகிய காய்கறிகளை போடுவதற்கு கடைக்காரர் தயங்குவதில்லை. முதல்முறை அவர் அழுகல் காய்கறிகளை போட்டபோதும் அவர் கவனமாக இல்லாமல் வேலை அவசரத்தில் அதை செய்திருப்பார் என நினைத்தேன்.  ஆனால் இரண்டாவது முறையும் கர்த்தரை கும்பிட்டுவிட்டு தக்காளியை எடுத்துப்போட்டபோது நான் அவரை நம்பினேன். கர்த்தர் அவரைக் காப்பாற்றினாலும்,  என்னைக் கைவிட்டுவிட்டார். அறைக்கு வந்தபிறகு ஆறு தக்காளிகளில் இரண்டை உடனடியாக குப்பைத்தொட்டிக்கு

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

மயிலாப்பூர் டைம்ஸ் - பிச்சைக்கு இரங்கேல்!

படம்
giphy.com பிச்சை கேட்பதை வள்ளுவர் மட்டுமல்ல, சங்க காலம் முதற்கொண்டு தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறார்கள். பிச்சையை எப்படி கூறுகிறார்கள் என்றால் தங்கம், வெள்ளி நாணயம் மட்டுமல்ல, ஒருவர் வளர்க்கும் கால்நடைகளின் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது கூட தவறு என்று வரையறுக்கிறார்கள். நமக்கு வந்து சேர்பவர்கள் வேறு ரகமாக இருக்கிறார்கள். பள்ளி தொடங்கி வேலை பார்க்கும் இடம் வரை நான் பெரும்பாலான இடங்களில் இளிச்சவாயனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு அர்த்தம் நான் பொருட்களை ஒருவருக்கு கொடுத்துவிடுகிறேன் என்பதல்ல. அதை தெரிந்தே செய்கிறேன் என்பதுதான்.  இன்று பாருங்கள். எங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையான ஓட்டுநர் எப்போதும் பதினொரு மணிக்கு அங்குள்ள திண்ணையை யாருக்கும் தரமாட்டேன் என கிடையைப் போட்டு படுத்துவிடுவார். அவருக்கு அடுத்து இருக்கும் இடத்தில் பெண் நாய் ஒன்று படுத்திருக்கும். இல்லையென்றால்  இங்குள்ள இழுத்து மூடப்பட்ட சிறப்பு அங்காடிக்கு காவல் காக்கும் வெள்ளை நிற நாய் ஒன்று படுத்துவிடும். பெரும்பாலும் திண்ணைக்கு இவர்கள்தான் ஓனர்கள் போல. எனவே புதிதாக வந்து நின்ற டாடா டியாகோ கார் அருகே இ

வியாபார மனிதர்களும் - மாறி வரும் காலமும்- மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சென்னைக்கு வந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் நம்பவே முடியவில்லை. அப்போது இங்கே எனது சகோதரர் பணிசெய்துகொண்டிருந்தார். குறைந்த சம்பளம்தான் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் கம்பெனி பெத்த கம்பெனி. அவர் கொடுத்த குருட்டு தைரியத்தில் நான் இங்கே வந்தேன். அதிலும் முடிவெடுப்பது என்பதில் இந்தியர்கள் பெரும்பாலும் மட்டம்தான். நான் பெரும்பாலும் முடிவெடுப்பது வரும்போது அந்த வாய்ப்பை பிறருக்கு வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம். இதனை கையில் எடுத்துக்கொண்ட சகோதரர் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு கிடைத்த சம்பளம் போதவில்லை. நான் கூட வந்தால் வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள் இல்லையா அதனை பயன்படுத்தி சொகுசாக இருக்க நினைத்தார். அப்படித்தான் இருந்தார். அப்போது மயிலாப்பூரில் கோலவழி அம்மன் கோவில் அருகே தூத்துக்குடிகாரர்  வைத்திருந்த கடை இருந்தது. இன்று அவர் சில மோசடி ஆட்களால் ஏமாற்றப்பட்டு, சிரமப்பட்டு  கடையை மாற்றிக்கொண்டு வேறுபக்கம் சென்றுவிட்டார். ஆனால் அன்று இருந்த இறுமாப்பு அந்தப்பக்கம் இருந்த கடைக்கார ர்களிடம் இன்று வெகுவாக குறைந்துவிட்டது. பின்ன

அறையில் சுயாதீனச்சமையல் செய்தபோது - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சுயாதீன சமையல் மயிலாப்பூரில் நீங்கள் கரண்டி பிடிக்காமலிருக்க நிறைய இதயங்கள் உதவும். ஜன்னல் கடை, பாரதி மெஸ், தேரடி பஜ்ஜிக்கடை, காளத்தி ரோஸ்மில்க், செந்தில்நாதன் மெஸ் என நிறைய உணவுக்கடைகளும், தின்பண்டக் கடைகளும் நிறைந்துள்ளன. எல்லாம் எதற்கு வாங்கித் தின்று இந்தியாவை வளர்த்தத்தான். டீ என்ற வார்த்தையை இங்கு கேட்க முடியாது. எங்கெங்கு காணினும் காபிதான். மகாத்மா காந்தி சிலையை ஒட்டி இப்போது கோத்தாஸ் காபிக்கடை வேறு தொடங்கியிருக்கிறார்கள். அம்பிகா சிறப்பங்காடியை ஒட்டி இயங்குவது லியோ காபி, முதலில் மோசமாக இருந்த காபி நேற்று குடித்தபோது இனித்தது. உபயம் யார் நமது தினகரன் குழும முன்னாள் தாயாதிகள்தான். வந்த நண்பர்களுக்கு  மயிலாப்பூரை கிரிவலம் கூட்டிச்சென்றேன். ஒருகட்டத்தில் நண்பர்,  தம்பி எங்களை எங்கே கூட்டிட்டிப்போற என்றார். ரைட் அதுதான் நான் விடைபெற்றுக்கொள்ளும் இடம் கூட. கபாலி காலில் விழுந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்ணே என்று சொல்லி கைகுலுக்கு ஜப்பானிய முறையில் இடுப்பு வளைத்து வணங்கி விடைப்பெற்றேன். ஜப்பானிய முறை வணக்கம் சிறப்பானதுதான். ஆனால் என்னவோ இம்முறையி