பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!




Image result for tamil sex books


மயிலாப்பூர் டைம்ஸ்!

பாமா.... படிக்கலாமா?


நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான்.

சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர்.

அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான் முதலிரவும், விளக்கை தடாலென அணைப்பதும். என் நண்பன் ராமமூர்த்தி, கிறுக்குப் பயலா இருக்கானே, கண்ணு தெரியாம அங்க பண்ண முடியும் எனக் கேட்டான். சரியோ, தப்போ எங்க குழுவில் தைரியமான முட்டாள்தனமாக கேள்விகளை அவன்தான் கேட்டான்னு இப்பத்தான் எங்களுக்கு தெரிகிறது. அவன் தன் புத்திசாலித்தனத்தை கைவிடால் கிரானைட் ஓனர் பெண்ணை கல்யாணம் செய்து மாமியார் வீட்டோடு செட்டில் ஆகிவிட்டான்.

முதலிரவு இருட்டு மர்மத்தை கண்டுபிடிக்கத்தான் என்னென்னோ முயற்சிகள் செய்தோம். இணையம் பரவல் ஆகாத காலம் என்பதால், புத்தகங்கள்தான் ஒரே துணையாக இருந்தன. கல்லூரி படிக்கும்போது சின்னத்தம்பி என்ற தோழன் புத்தகத்தில் ஒளித்து வைத்திருந்ததை கணினி அறிவியல் விஜிலென்ஸ் குழு கண்டுபிடித்தது. உடனே அவன் மீது ஈரச்சாக்கு போட்டு புத்தகத்தை பிடிங்கினோம். பார்த்தால் அனைத்தும் கருப்பு வெள்ளைப்படம். ஆனால் கதை எழுதியவரின் ஞானம் எங்களை திகைக்க வைத்தது.

எப்படி மோடி - ட்ரம்ப் சந்திப்பை விட 3500 ஆபாச வலைத்தளங்கள் அரசு மூடியது நமக்கு அதிர்ச்சியான செய்தியோ அதேபோலத்தான் அந்தப்புத்தகம் இருந்தது. ஆனால் இன்ப அதிர்ச்சி. என் பெயர் என்று தான் கதைகள் தொடங்கும். விடுங்கள். கதையின் நடுவில் வரும் ட்விஸ்டுகள், இறுதி கிளைமேக்ஸ்.. ஆகா...

 கதையை ஆர்வமாக நண்பன் பழனி காந்தர்வக் குரலில் படிக்க ஆருயிர் நண்பர்கள் பலர்  பாத்ரூம் போகவேண்டியிருந்தது. பழனி, துணிக்கடை பொம்மையைக் கூட மேடாக இருக்குது அழுத்திப் பார்க்கட்டா என கடை ஆன்ட்டியை கேட்டு அலற வைத்தவன். அவன் வசதியான ஆள் என்பதால், கில்மா சிடி, டிவிடிகளை பார்த்துவிட்டு வந்து அப்படியே நடித்துக்காட்டுவான். எங்களுக்கு அப்படியே ஜிலுஜிலுவென்றிருக்கும். இப்போது பள்ளி குழந்தைகளுக்கு எ ஏ, பி பீ சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை ஓட்டுகிறான்.

உண்மையில் எப்படி ஒரு எழுத்தாளரால் இப்படி சரோஜாதேவி கதைகளை எழுத முடிகிறது? சொந்த அனுபவம் கூட ஒரு மட்டுதானே போரடித்துவிடுமே என நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது பத்திரிக்கை நண்பர் சொன்னார். நாங்கள் இதுபோல எழுதும் ஒரு ஆளை பின்தொடர்ந்தோம். ஒரு கட்டுரைக்காகத்தான். நகரில் சில கடைகளில் மட்டும் ஆபாச புத்தகங்கள் கிடைக்குது. நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும். அதுவும் ஒரே மாதிரியான கதைகள் வேறு வேறு அட்டைகளில் கிடைக்கும்.  எங்கிருந்து வருதுன்னு சந்தேகம். சின்ன சின்ன துப்பு கெடைச்சு போய் பார்த்தா, லாஸ்டா ஆளைக் கண்டுபிடிச்சிட்டோம்.
போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்லித்தான் பேசுனாப்ல. எனக்கு வந்த டவுட்டு என்னன்னா, எப்படி இந்த விஷயத்துல தெளிவாக இருக்கீங்க அப்படிங்கறதுதான். உடனே அவரு, உடனே சிடில படத்தைப் போட்டு பார்த்து போஸை மட்டும் எடுத்துக்கிட்டு நம்ம மொழியில் எழுதிட வேண்டியதுதான் என்றார்.

உண்மையிலேயே என் நண்பர் அங்கு சொல்லியிருக்கவேண்டிய வார்த்தை கலைஞன்டா.... நீ கலைஞன்டா என்பதுதான்.

தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தமில்லை என்று யோசிக்கிற பாக்கியவான்களே.... கல்லூரியில் நான் படித்த செக்ஸ் புத்தகத்தின் பெயர்தான் பாமா......

கா.சி.வின்சென்ட்