காதலர் தினத்திற்கு சாக்லெட்டுகள் எதற்கு தருகிறார்கள் தெரியுமா?





i love you GIF
giphy





மிஸ்டர் ரோனி

காதலர் தினத்திற்கு சாக்லெட் கொடுப்பது எதற்கு?

முக்கியமான தினத்தில் ரோஜா பூக்களை கொடுப்பது ஒருவகை. ஆனால் இன்றுதான் நெஸ்லே, ஐடிசி முதற்கொண்டு கடைவிரித்து சல்லீசு ரேட்டில் சாக்லெட்டுகளை விற்கிறார்கள். அப்புறமென்ன சாப்பாட்டு பிரியைகளான பெண்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? வரலாறைப் பார்ப்போம். கி.மு. 500இல் மாயன்கள் காலத்திலேயே காபி கொட்டைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தனர். மாயன்களின் திருமணத்தில் இந்த சூடான சாக்லெட் பானங்களை திருமணமான தம்பதிகள் குடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.


ஆஸ்டெக் இன மன்னரான இரண்டாம் மான்டெசுமா, கைத்தொழில் மன்னனாக படுக்கையில் பெண்களை வீழ்த்தி சிருங்கார சாகசங்களை செய்திருக்கிறார். இதற்காக காபி கொட்டைகளை அரைத்து குடித்து களித்திருக்கிறார். இதில் உள்ள ட்ரிப்டோபான், பெனிலெத்திலாமைன் ஆகிய பொருட்கள் காதல் உணர்வு, காம உணர்வு இரண்டையும் இமயமலை உயரத்திற்கு எழுப்பும் என்று அவர் நம்பினார். ஆனால் பின்னாளில் ஆராய்ச்சியாளர்கள் அப்படியெல்லாம் கிடையாது. அந்தளவுக்கு இந்த வேதிப்பொருட்கள் இப்பொருளில் இல்லை என அறிக்கை விட்டனர்.


1861ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று கேட்பரி நிறுவனம் இதயவடிவிலான அட்டைப்பெட்டியில் சாக்லெட்டுகளை அடைத்து பரிசு தருவதற்கான வகையில் வெளியிட்டது. செம சேல்ஸ். கிடைச்சிருச்சு ஐடியா என உள்ளூர், வெளியூர் கம்பெனிகள் இதய வடிவில் பெட்டிகளையும் சாக்லெட்டுகளையும் தயாரித்து விற்கத் தொடங்கினர். காதல் மட்டுமல்ல நன்றிக்கடனை உணர்த்துவதற்கும் சாக்லெட்டுகள் உதவுகின்றன. ஜப்பானில் பெண்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கு ஆண்களுக்கு சாக்லெட்டுகளை வாங்கித்தருவது வழக்கத்தில் உள்ளது.

நன்றி -  மென்டல் ஃபிலாஸ்