இடுகைகள்

ஆராய்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’

படம்
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

ஆடுகளின் வலியை அறிந்து சிகிச்சையை பரிந்துரைக்கும் ஏஐ மாடல்!

படம்
 ஆடுகளின் வலியை அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கும் ஏஐ உடனே அந்த ஏஐ பெயரைக் கேட்காதீர்கள். ஆங்கில கட்டுரையை எழுதிய லூசி டு கூட கடைசிவரைக்கும் ஏஐ மாடலின் பெயரை கூறவே இல்லை. பொதுவாக மனிதர்களே மருத்துவரிடம் தன் உடல்நிலை பற்றிய அறிகுறிகளை நோயை முழுமையாக கூற மாட்டார்கள். அதற்கென சிறப்புக்காரணம் ஏதுமில்லை. சொல்ல மாட்டார்கள். கொஞ்சம் பேசினால் மட்டுமே சில அறிகுறிகளையாவது சொல்வார்கள். தோல் நோய் என்றால் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், பிற நோய்களை பற்றி நோயாளி சொன்னால்தானே தெரியும். ஆடுமாடுகளின் நோய்களை புகைப்படம் அல்லது காணொலி மூலமே மருத்துவர்கள் அடையாளம் கண்டு சிகிச்சை செய்து வந்தனர். இப்போது ஏஐ காலம் அல்லவா? விலங்குகளின் வலியை மனிதர்கள் முன்முடிவுகளோடு அணுகி சிகிச்சை செய்ய முற்படுகிறார்கள் என புளோரிடா கால்நடை அறிவியலாளர் லுடோவிகா சியாவேக்சினி கருத்து கூறுகிறார். இவர்தான் மேற்சொன்ன ஆய்வை செய்தவர். நாற்பது ஆடுகளை தேர்ந்தெடுத்து, அதை படம்பிடித்தனர். தங்களுடைய மருத்துவ அறிவை கணினிக்கு புகட்டி படங்களில் உள்ள ஆடுகளுக்கு நோய் உள்ளது, அல்லாதது என பிரித்திருக்கிறார்கள். இப்படித்தான் ஏஐ மாடல் உருவ...

புயல்களை துரத்திச் செல்வதன் பயன்?

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹபூப் என்றால் என்ன? மணல், தூசி கலந்த புயல் என்று ஹபூப்பைக் குறிக்கலாம். இதன் வேர்ச்சொல் அரபி மொழியில் இருந்து வந்தது. ஆப்பிரிக்காவின் சகாரா, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பாலைவனங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா ஆகியவற்றில் தீவிரமான புயல் வீசுவதைக் காணலாம். விண்ட் ஷியர் என்றால் என்ன? ஷியர் என்றால் காற்று மாறுபாடு என்று கொள்ளலாம். குறுகிய தொலைவில் காற்று வேகமாக சட்டென திசையில் மாறுபட்டு வீசும்.இடியுன் கூடிய மழையில் காற்று திடீரென திசை மாறி வீசுவதைக் காணலாம். அதேநேரம், விமானம் இச்சூழ்நிலையில் பயணிக்க நேர்ந்தால் ஆபத்து நேருவதற்கு வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலை முன்னரே உணர்ந்து விமானிகளை எச்சரிக்க, விமானநிலையங்களில் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. மைக்ரோ கிளைமேட் என்றால் என்ன? பெரிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பகுதியில் மட்டும் தட்பவெப்பநிலை, வீசும் காற்று, கருமேகங்கள் சூழ்வது என சூழல் மாறுவதை மைக்ரோகிளைமேட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.  கடற்கரைப்பகுதியில் இப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்க...

அகடெமியா வலைத்தளம் - அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான பொக்கிஷம்

    அகடெமியா இணையதளத்தில் அறிவியல் சார்ந்த ஏராளமான ஆய்வு அறிக்கை, ஆராய்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. அங்கு அறிவியல் சார்ந்த இரு மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆரா பிரஸ் சார்பாக பதிவேற்றப்பட்டுள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம். நன்றி!   https://independent.academia.edu/arasuk8

நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்

படம்
    நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...

அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை

படம்
இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க...

கணிதம் கற்க அபாகஸ் உதவுமா?

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் அறிவியல் சங்கம் எது? 1743ஆம் ஆண்டு, பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க பிலாசபிகல் சொசைட்டி என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இந்த அமைப்பு இயற்கை தத்துவங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் சங்கங்களில் குறிப்பிடத்தக்கது எது? ஏஏஏஎஸ் எனும் அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆப் சயின்ஸ் என்ற சங்கம். இந்த சங்கம், 1848ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர், வில்லியம் சார்லஸ் ரெட்பீல்ட். அறிவியல் துறையில் புதிய மேம்பாட்டை உருவாக்குவதே சங்கத்தின் நோக்கம். தொன்மையான அறிவியல் பத்திரிக்கை எது? தி பிலாசபிகல் டிரான்ஸ்சேக்‌ஷன் என்ற லண்டனின் ராயல் சொசைட்டி அமைப்பு வெளியிடும் பத்திரிகை தொன்மையானது. 1665ஆம் ஆண்டு, இப்பத்திரிகை ஜர்னல் டெஸ் ஸ்கேவன்ஸ் என பெயர் மாறி வெளிவரத் தொடங்கியது. இன்றுவரை இப்பத்திரிகை தொடரச்சியாக வெளியாகிறது. அறிவியல் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற நூல்? 1687ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன் பிலாசபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட...

அரிய நோய்களுக்கான மருந்துகள்!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஆர்பன் ட்ரக் என்றால் என்ன? மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது. ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்? செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.    

டெக் நிறுவனங்கள் அதீத பணபலத்தை வைத்து அரசை, ஒழுங்குமுறை அமைப்புகளை வளைத்து வருகின்றன!

படம்
      amba kak ai researcher இந்தியாவில் இணைய சமத்துவம், அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது ஏஐ தொடர்பான கொள்கையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறீர்கள். டைம் இதழின் ஏஐ செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறதா? தொழில்நுட்ப கொள்கை தொடர்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இப்போது என்னைப் பற்றி இதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதிய கொள்கையில் வேலை செய்கிறேன். ஏஐ நவ் இன்ஸ்டிடியூட், டெக் நிறுவன உரிமையாளர்களை நோக்கி கடுமையாக கேள்விகளை முன்வைத்துவருகிறது. பல்வேறு அரசுகளிடம் லாபி செய்து வருவதால், முறைப்படுத்தும் அமைப்புகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெக் உலகில் ஜனநாயகத்தன்மையை கொண்டு வர நினைக்கும் பலருடன் இணைந்து கொள்கைகளை வடிவமைக்க உழைத்து வருவதில் மகிழ்கிறேன். சாம் ஆல்ட்மனை, மேசியா என்று டெக் தளத்தில் புகழ்கிறார்களே? இங்கு நாம் ஓப்பன் ஏஐ பற்றி பேசவேண்டியதில்லை. மேசியா என ஒருவரை புகழ்வதெல்லாம் மார்க்கெட்டிங் உத்திகள்தான். டிரேட் கமிஷன்...

கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் இனி ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கவேண்டும்! - வரித் தீவிரவாதத்தின் அடுத்த கட்டம்

படம்
                ஆராய்ச்சிகளை நிலைகுலைய வைக்கும் வரி தீவிரவாதம் மாத சம்பளம் வாங்குபவர்களை வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி இப்போது ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களையும் வலதுசாரி மதவாதிகள் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நாட்டிலுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதுவரை பெற்ற மானியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சகம் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிலுவையில் உள்ள வரியைக் கட்டியே ஆகவேண்டுமாம். ஏற்கெனவே பணவீக்க நிலையில், ஆராய்ச்சிக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பெரியளவில் உயரவில்லை. அந்த நிலையிலும் கிடைக்கும் பணத்தை வைத்து ஆராய்ச்சிகளை மாணவர்கள் செய்து வந்தனர். மதவாத அரசு, நிதிநிலை அறிக்கையை அறிவிக்கும் போதெல்லாம் கல்விக்கான நிதியை குறைத்துக்கொண்டே வந்தனர். பொது நுழைவுத்தேர்வு என்று வைத்து, பயிற்சி மைய நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்களை கொள்ளையடித்து சம்பாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் பயிற்சி மையங்களின் வணிகம் ஆண்டுக்கு ஐம்பத்தெட்டாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டு...

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

விலங்குகளின் குணநலன்கள் என்ன?, நம் கண்களால் பார்க்க முடிந்த தொலைவு? - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              ஈத்தாலஜி என்பது என்ன? எதைப்பற்றியது? கிரேக்க மொழியில் இருந்து உருவான சொல் ஈத்தாலஜி. ஒருவரின் செயல், நடத்தை, அறம் ஆகியவற்றைக் குறிப்பது. தற்போது, விலங்கியல் பக்கம் நகர்ந்து விலங்கின் நடத்தை என்பதாக மாறிவிட்டது. 1872ஆம் ஆண்டு டார்வின், தி எக்ஸ்பிரஷன் ஆப் தி எமோஷன் என்ற நூலை எழுதினார். மனிதர்களின் உணர்வு வெளிப்பாட்டுத்தன்மை, விலங்குகளின் நடத்தைக்கு அடிப்படையாவதுஎப்படி என ஆய்வு செய்து எழுதியிருந்தார். 1950களில் விலங்குகளின் நடத்தை எப்படி மாறுகிறது என கான்ராட் லோரன்ஸ் என்பவர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அதில், விலங்குகளை தூண்டிவிடும் இயல்பு கொண்டதாக இனப்பெருக்க கால துணையின் நடனம், வாசனைகள் உள்ளன என கண்டறிந்தார். இப்போதும் தேனீக்கள், எறும்புகளைப் பார்த்தால் உலகில் அவை மட்டுமே உள்ளது என எண்ணுவதைப் போல குழுவாக எதிலும் மூக்கை நுழைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும். விலங்குகள் தனியாக செயல்படும்போது உற்பத்தி திறன் கொண்டவையாகவும், குழுவாக இருக்கும்போது பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் கூடுவதையும் ஆராய்ச்சிகள் காட்டின. இனக்குழுவின் நன்மைக்காக தன்...

டைம் 100 - நீரிழிவு, உடல் பருமன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்

படம்
              ஸ்வெட்லானா மோஜ்சோவ், ஜோயல் ஹேபனர், டான் டிரக்கர் ஆராய்ச்சியாளர்கள் svetlana mojsov joel habener dan drucker நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான விஷயம் என்றால், அந்நோய் காரணமாக அதிகரிக்கும் உடல் எடை இன்னொரு பெரிய பிரச்னை. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது பற்றி அமெரிக்கா, ஐரோப்பா என உலகமெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீரிழிவு நோய்க்கும் அதோடு தொடர்புடைய இன்சுலின், இன்கிரிடின்ஸ் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் வழியாக குளுகாகோன்ஸ் என்ற ஹார்மோனுக்கும் உடல் எடைக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் குடல் அறுவை சிகிச்சையொன்று நடைபெற்றது. அதில், குளுகாகோன், இன்சுலின் அளவை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர் ஜென்ஸ் ஜூல் ஹோஸ்ட் அடையாளம் கண்டார். இந்த நேரத்தில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த டான் டிரக்கர், ஜோயல் ஹேபனர் ஆகியோர் ஜிஎல்பி -1 எனும் குளுகாகோன் வடிவத்தைக் கண்டறிந்தனர். டிரக்கர், ஜிஎல்பி-1 வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து இன்சுலினை அதிகரிப்பத...

Time 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர்!

படம்
           யோசுவா பென்ஜியோ செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் yoshua bengio யோசுவா, 2018ஆம் ஆண்டு டூரிங் விருதை தனது செயற்கை நுண்ணறிவு விருதுக்காக பெற்றார். இவருடன் ஹின்டன், யான் லெகன் ஆகியோரும் இந்த விருதை இணைந்து பெற்றனர். யோசுவா, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக, ஆழ்கற்றல் நுட்பம் புகழ்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு வெகுஜனத்தன்மை கொண்டதாக மாறுவதில் யோசுவா முக்கிய பங்காற்றியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை செய்துவிட்டு புகழ்பெற்றுவிட்டு விருதுகளைப் பெற்றுவிட்டு சென்றுவிடவில்லை. அதன் இன்னொரு பக்கம், பாதகமான விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்து வருகிறார். இந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமைக்கப்பட்ட மாநாடுகளுக்குக் கூட பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். டைம் 100 ஜியோஃப்ரீ ஹின்டன்

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 ...

chapter 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்!

படம்
  அத்தியாயம் 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள் உலகம் முழுக்கவே அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியை வழங்குவது போல தெரிந்தாலும் அதெல்லாம் வெளிப்படையான விஷயம் அல்ல. பெரும்பாலான தொழிலதிபர்கள், அவர்களது அறக்கட்டளை வழியாகவே நிதியை மடைமாற்றம் செய்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். விருதுகளை உருவாக்கி வழங்கினாலும் கூட சிறந்த சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்களை தங்களது நிறுவனத்திற்கென பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, பணத்தை நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான், இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கவேண்டும்.  ஹே ஷியாங்ஜியான் வயது 81 மிடியா குழுமம் சீனா பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் சீன தொழிலதிபர். 410 மில்லியன் டாலர்களை தனது ஹே சயின்ஸ் பவுண்டேஷன் வழியாக அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட முன்வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, உடல்நலம், காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிதியின் வழியாக நடைபெறவிருக்கிறது. 21.7 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர், தனது ஆராய்ச்சியின் வழியாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும்...

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்க...

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

படம்
  மோரி சாக்கோ, சமையல் கலைஞர் கலாசாரத்தை சமைக்கும் கலைஞர் மோரி சாக்கோ 30 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார். மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர். ஓமர் சை   மீரா முராட்டி 34 செயற்கை நுண்ணறிவில் தேடல் மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமை...