இடுகைகள்

வேலைவாய்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின பாகுபாட்டால் உதவித்தொகையைப் பெற முடியாமல் தவித்த நீச்சல்வீரர்

படம்
  அட்ரியானா பார்போஸா adriana barbosa பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோவில் வாழும் பெண்மணி. ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட தடுமாறும் பொருளாதார சூழ்நிலை. அவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வறுமையான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாட்டில், கருப்பினத்தவரை விட வெள்ளையர்கள் 74 சதவீத அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க - பிரேசிலியர்கள் வெள்ளையர்களைப் போல கல்வித்தகுதியைக் கொண்டிருந்தாலும் கூட சம்பள விஷயத்தில் 70 சதவீதம்தான் பெற்றுக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் அறிந்த அட்ரியானா, இருபது வயதில் கருப்பின மக்களுக்காக ஃபெய்ரா பிரேட்டா விழாவை உருவாக்கினார். இந்த விழாவில் இசை, நாடகம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளோடு சுயதொழில் முனைவோர் தங்களது பொருட்களையும் விற்கலாம்.  பல்வேறு தனியார் நிறுவன நன்கொடை மூலம் கருப்பினத்தவர் தொழில் செய்ய 2.2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி கருப்பின தொழிலதிபர்களுக்கு உதவும் பாதை எளிமையாக இல்லை. ஒருமுறை விழாவில் சேகரமான டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வெள்ளையர்கள் தங்கள் தெருவில் விழாவை நடத்தக்கூடாத

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

படம்
        விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்! காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலி

பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யவேண்டும் என்பது மூடநம்பிக்கை! பேராசிரியர் லிண்டா ஸ்காட்

படம்
              நேர்காணல் பேராசிரியர் லிண்டா ஸ்காட்   பொருளாதார வல்லுநர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன ? காரணம் , ஆண்களின் மேலாதிக்கம்தான் . பெண்கள் இத்துறையில் வளர்ந்து வந்தாலும் கூட அவர்களை கிண்டல் செய்து விரைவில் வெளியேற்றிவிடுகிறார்கள் . அலுவலகம் வீடு இரண்டையும் சமாளிப்பது என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்கள் கூறும் வார்த்தை முழுக்க பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது . இதில் நியாயமில்லை . ஆண்களுக்கும் , பெண்களுக்கு்ம் சமத்துவமாக வேலை வழங்கப்படாத நிலையில் இப்படி கேள்வி கேட்கப்படுவது தவறு . பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது , சம்பளம் உயர்த்தப்படாதபோது நீ்ங்கள் கூறிய வார்த்தை ஒரு மன்னிப்பாக கூறப்படுகிறது . குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் வீசப்ப்படுகின்றன . இந்தியாவில் பெண்களுடைய நிலைமை பற்றி தங்களுடைய கருத்து ? பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறைவு . பெண்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கள் கடத்தப்படுவது , பாலிய

புதிய மொழிகளைக் கற்றால்தான் கணினி உலகில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்! - பழைய மொழிகளால் ஏற்படும் பாதிப்புகள்

படம்
  காலாவதியாகி வரும் கணினி மொழிகள் ! கணினி உலகில் ஆயிரக்கணக்கான புதிய புரோகிராமிங் மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன . அவற்றைப் பயன்படுத்துவதில் அரசு , தனியார் நிறுவனங்களிடையே தயக்கம் நிலவுகிறது . இன்று உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அலுவலகம் என்பதைக் கடந்து வீடு நோக்கி நகர்ந்து வருகின்றன . அதேசமயம் கணினி புரோகிராம்கள் எழுதப்படும் மொழி என்பது பெரியளவு மாறுதலுக்கு உட்படவில்லை . கணினி புரோகிராம்களை நாம் மேம்படுத்தாதபோது அரசு அமைப்புகள் , மருத்துவமனைகள் , தனியார் நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது . குறிப்பிட்ட கணிதங்களை செய்யவும் , தகவல்களை உள்ளிடவும் மட்டுமே புரோகிராமிங் மொழிகளை பயன்படுத்தினால் அதில் முன்னேற்றம் காண்பது கடினம் . ’’ புதிய மொழிகளைக் கற்று செயல்படுத்துவதற்கான இடம் டெக் உலகில் நிறையவே உள்ளது’’ என்கிறார் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா லிஸ்கோவ் . டெக் நிறுவனங்களில் கூகுள் , கோ எனும் புரோகிராமிங் மொழியை மேம்படுத்தி வருகிறது . ஒரு கணினி மொழி பிரபலமாக அதற்கென பயன்பாடுகள் , தேவைகள் உருவாக்கப்படுவது அவசி

மத்திய பட்ஜெட் 2021-22 டேட்டா கார்னர்

படம்
            மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது . இதன் விசேஷன் அதன் அம்சங்களை விட தாக்கல் செய்யப்பட்ட முறையில் உள்ளது . இதுதான் இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் . நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி மூலமே பெற முடியும் . பட்ஜெட்டை அச்சிடுவது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் நிர்மலா சீதாராமன் கூட டேப்லெட்டில் பட்ஜெட்டை வைத்திருந்தார் . இதிலுள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இப்போது பார்ப்போம் . சுகாதாரம் 2,23, 846 கோடி நீர் , சுகாதாரத் திட்டங்களுக்காக இத்தொகை செலவிடப்படுகிறது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் . சந்தையில் பெறும் நிதி 9,67,708 சந்தையில் பற்றாக்குறைக்காக பெறவிருப்பதாக அரசு சொன்ன தொகை இது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் இத்தொகை அதிகரித்துள்ளது . பணப்பற்றாக்குறை சதவீதம் 6.8 சதவீதம் நடப்பு ஆண்டில் பணப்பற்றாக்குறை சதவீதம் 9.5 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது . காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 74 சதவீதமாக உள்ளது . சிறுகுறு தொழில்துறைக்கான ஒதுக்கீடு 15,7

அடுத்த ஆண்டில் 50ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சி புரோகிராமிங் மொழி! - மீண்டும் பிரபலமாவது எப்படி?

படம்
                  கணினிமொழி சி ! அடுத்த ஆண்டு சி மொழி , கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றது . இன்று நாம் பயன்படுத்தும் டிவி , வாஷிங்மெஷின் , மைக்ரோவேவ் ஓவன் , ஸ்மார்ட் பல்புகள் , காரின் டாஷ்போ்ர்டு ஐஓஎஸ் , ஆண்ட்ராய்ட் ஓஎஸ்கள் அனைத்துக்குமே அடிப்படை சி மொழிதான் . 2015 ஆம் ஆண்டு ஜாவா மொழியிடம் தனது பிரபலத்தை சி மொழி பறிகொடுத்து தற்போது மீண்டிருக்கிறது . இணையம் சார்ந்த கருவிகளின் விளைவாக 2017 வாக்கில் சி மொழி முன்னுக்கு வந்திருக்கிறது . 1972 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த டென்னிஸ் ரிட்சி என்பவர் சி மொழியைக் கண்டுபிடித்தார் . 1980 வாக்கில் சி மொழி வணிகத்திற்கு கூட பயன்படத் தொடங்கிவிட்டது . இதனை லோலெவல் லாங்குவேஜ் என்று கூறுகிறார்கள் . அப்போது ஹை லெவல் என்றால் ஜாவா , பைத்தான் ஆகியவை வரும் . கணினியின் கெர்னல் எனும் பகுதி சி மொழியால் எழுதப்பட்டு வருகிறது . இன்று ரஸ்ட் , சி பிளஸ் பிளஸ் மொழியில் பல்வேற பரிசோதனை முயற்சிகளை புரோகிராமர்கள் செய்து வருகிறார்கள் . ஆனாலும் கூட சி மொழியின் எளிமையும் திறனு்ம் அதற்கு கைகூடவில்லை . ஒரு செயலை செய்வதற்கான கோடிங்கை சி மொழி

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்

படம்
      நேர்காணல் பிரனாப் சென் பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர் . அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது ? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது . கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது . வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம் . பிற இழப்பு தொழில்துறை , நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம் . இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம் . தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது . காரணம் , மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை . திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு . எனவே மெல்ல நிலை மாறி வருகிறது . ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான் . இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது .

பெண்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் பெண்களின் குழு - கூல் கன்யா

படம்
நம்பிக்கை மனிதர்கள் வனிஸ்கா கோயங்கா (vaniska goenka) “ எனக்கு திடீரென ஒரு உண்மை தெரிந்தது . பல்வேறு அலுவலகங்களிலும் கூட பெண்களின் சதவீதம் குறைவுதான் . எனவே அவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன் . அதற்காகவே அவர்களுக்கான பணி ஆலோசனைகளை வழங்க கூல் கன்யா (Kool Kanya) என்ற அமைப்பைத் தொடங்கினேன் .” என்று உற்சாகமாக பேசுகிறார் வனிஸ்கா . ஒருமுறை வனிஸ்காவின் வீட்டில் குடும்ப வியாபாரத்தை அவருடைய தந்தைக்கு பிறகு யார் பார்த்துக்கொள்வது என்று பேசிக்கொண்டிருந்தனர் . அவருடைய தந்தைக்கு இரு மகள்தான் இருந்தனர் . அதுதான் , நான் இருக்கிறேனே என்று வனிஸ்கா நினைத்தார் . ஆனால் அவரை பொருட்டாகவே குடும்பத்தினர் கருதவில்லை . பின்னாளில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை வனிஸ்கா நிர்வாகம் செய்தார் . அப்போது தன்னைச் சுற்றிலும் பார்த்தபோதுதான் குடும்பத்தினர் அப்படி கவலைப்பட்டு பேசியதன் காரணம் புரிந்தது . அவர் அலுவலகத்தில் அவர் மட்டும்தான் ஒரே பெண் . அனைவரும் ஆண்களாகவே இருந்தனர் . 2019 இல் கூல் கன்யா என்ற நிறுவனம் தொடங்கியபோது , அந்த நிறுவனம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளை

வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்! - டான் ஸ்வாபெய்

படம்
எதிர்கால வேலை என்பது டிஜிட்டலாகவே இருக்கும்! எழுத்தாளர் டான் ஸ்வாபெய் ஆங்கிலத்தில்: மாலினி கோயல் டான் ஸ்வாபெய் எழுத்தாளர் என்பதோடு மனிதவளத்துறை ஆலோசகர் மற்றும் வொர்க்பிளேஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ஆரக்கிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரான்ஸ்டாட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது இப்போதைய நிலைமையாக இருக்கிறது. இதில் பணியாளர்கள் அதிகம் உணர வாய்ப்பிருக்கிறதே? உலகில் இப்போதைய நிலைமையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையில் இணையம் சார்ந்துதான் பணியாற்றி வருகின்றனர். நேருக்கு நேராக சந்தித்து பேசுவது என்பதற்கு இணையம் வழியாக சந்தித்து பேசுவது மாற்று கிடையாது. இன்றுள்ள டிஜிட்டல் கருவிகள், மூளையில் டோபமைனை சுரக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் பெருந்தொற்று சூழ்நிலையில் இருநபர்களுக்கான சந்திப்பும் கூட வேறுபட்டுத்தான் அமைய வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான ஏற்பாடுகள் மெல்ல இயல்பாகிவருகிறது. இந்த பணித்தன்மைக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது? எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் என்பது ஆட