இடுகைகள்

மோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் கார

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

படம்
  கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி பத்திரிகையாளர் கரண் தாப்பர்  இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா? இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,   ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர். பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் கேள்விகளைப் பா

ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு நிறுவனம் - மோசடி மன்னன் அதானி - பகுதி 6

படம்
  பகுதி ஐந்தில் விடுபட்டு போன மின்னஞ்சல்  ஓபல் நிறுவனம் குருநால் நிறுவனம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69% பங்குகள் அல்லது பத்தொன்பது சதவீத பங்குகளை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனை கூட மொரிஷியஸிலுள்ள பிற நிதி நிறுவனங்களைப் போலவே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஓபல் இன்வெஸ்ட்மென்ட் என்பது மொரிஷியஸைச் சேர்ந்த போலி நிறுவனம். அங்குள்ள, பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்ததில் ஓபலின் நிறுவனத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஓபல் நிதி நிறுவனம் பற்றிய செய்திக்கட்டுரைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த நிதி நிறுவனம் எப்படி அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவு வாங்கியது என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. ஓபல் நிதி நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமும் இல்லை. அதன் பணியாளர்கள் பற்றிய தகவல்களும் கூட லிங்க்டு இன் தளத்தில் இடம்பெறவில்லை. முதலீடு தொடர்பான மாநாட்டில் நிறுவனம் பங்கேற்றதிற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஓபல் நிறுவனம், பன்மைத்தன்மையோடு பல்வேறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய

மோடி அரசு 2.0 - நிர்மலா சீதாராமன், அமித் ஷா செய்ததும், காத்திருக்கும் சவால்களும்!

படம்
  பாஜக அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி! மோடி 2.0 நிதித்துறையில் செய்தது என்ன? 2019ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக நிர்மலா பதவியேற்றார். அப்போது பொருளாதாரம், சற்று தேக்கத்தில் இருந்தது. உள்நாட்டு தேவை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் சுணக்கம் காணப்பட்டது. எந்த நிதியமைச்சரும் சந்திக்காத சவால்களை நிர்மலா எதிர்கொண்டிருக்கிறார். முக்கியமாக கோவிட் 19. 2020ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று லாக்டௌன் அமலுக்கு வந்தது. இதனால் இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை ஜிடிபி வளர்ச்சி காணப்பட்டது.  உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கின. இதை நிர்மலா சற்று மாற்றியோசித்து செயல்படுத்தினார். பலவீனமாக உள்ள பிரிவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். சிறுகுறு தொழில்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்தார்.  இப்போது அவர் செய்த செயல்பாடு, திட்டங்களைப் பார்ப்போம். சுருக்கமாகத்தான்.  செய்தது! மே 2020ஆம் ஆண்டு 20 லட்சரூபாய் மானிய உதவிகளை வழங்கியது இந்திய  அரசு சிறு குறு தொழில்களுக்கான அவசரநிலை கடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது.  2019-20, 2024-25 காலகட்டங்களில் தேசிய அடிப்படை கட்டும

நலத்திட்ட உதவிகள்தான் சிறந்த அரசியல் ஆயுதம்! - பிரசாந்த் கிஷோர், தேர்தல் திட்ட வல்லுநர்

படம்
  பிரசாந்த் கிஷோர்  தேர்தல் திட்ட வல்லுநர் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எது? - ஆம் ஆத்மி அல்லது ஃபிளிப்கார்ட்? ஃபிளிப்கார்ட் பாஜகவின் சிறந்த சொத்து எது? அமைப்பு பலம் தான்.  பாஜகவின் பலவீனம் என்ன? மோடியை மட்டுமே நம்பியிருப்பது அரசியல் அல்லது கொள்கை இதில் நீங்கள் அதிகம் விரும்புவது எது? கொள்கை தான். அரசியல்  என்பது அதன் பிறகு வருவதுதான்.  காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? அதன் பாரம்பரியம்.  அதன் பலவீனம்? செயலற்ற தன்மை  அடையாள அரசியல் அல்லது நலத்திட்டங்கள் இவற்றில் எது சிறந்த அரசியல் ஆயுதம்? நலத்திட்ட உதவிகள்தான்.  2024ஆம் ஆண்டு எந்த கட்சி இந்தியாவை வழிநடத்தும் என நினைக்கிறீர்கள்? அதை மக்கள் தீர்மானிக்க விட்டுவிடலாம்.  அரசியல் வல்லுநர்களில் யாரேனும் ஒருவர். அவர் வாழலாம் அல்லது மரணித்தும் இருக்கலாம். உங்களின் முன்மாதிரி ஒருவரைக் கூற முடியுமா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருந்தாலும் எனக்கு யாரையும் தெரியாது. அப்படி அரசியல் வல்லுநர்களைப் பற்றி நான் படித்ததும் கேள்விப்பட்டதும் கிடையாது.  நீங்கள் மதிக்கும் இந்திய அரசியல்வாதி, அவர் இன்று உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலு

விவசாயிகள், மத, ஜாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து வென்றிருக்கிறார்கள்! - சதேந்திரகுமார்

படம்
  சதேந்திர குமார் சமூகவியலாளர் இவர் ஜிபி பான்ட் சமூக அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இக்கழகம் அலகாபாத் பல்கலையின் ஓர் அங்கமாக உள்ளது.  வேளாண்மை சட்டங்கள் மூன்றுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. விவசாய அமைப்புகளின் போராட்டம் வெற்றி பெற என்ன காரணம்?  இந்த வெற்றிக்கு காரணம் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்தான். அமைப்பை நிர்வாகம் செய்த தலைவர்களின் அணுகுமுறை, தகவல் தொடர்பு ஆகியவை முக்கியமான காரணம். நகரம் மட்டுமன்றி, கிராமப்புற  விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தது முக்கியமானது. இந்த போராட்டத்தில் இளைஞர்களும் பெண்களும் பங்கெடுத்தனர். விவசாயிகள் போராட்டங்களில் இருந்தபோது, வீட்டிலுள்ள பிற குடும்ப உறுப்பினர்கள் நிலங்களில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். இதுதான் போராட்டத்தை பெரும் ஊக்கமாக எடுத்துச்செல்ல உதவியது. பல்வேறு குரல்கள் ஒலிக்கும்படியான தேசிய அளவிலான இயக்கமாக விவசாயிகளின்போராட்டம் மாறியது இதனால்தான்.  கொரோனா பெருந்தொற்று போராட்டத்தை பாதித்ததா? நகரங்களில் வேலை பார்த்து வந்த இளைஞர்கள், பெருந்தொற்று காரணமாக வேலைகளை இழந்தனர். இவர்களுக்கும் வி