இடுகைகள்

நினைவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

படம்
                  இறுதியாத்திரை எம் . டி . வாசுதேவன் நாயர் கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர் , திருமணம் முடிக்கிறார் . தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார் . அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர் . அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி , மகள் உண்டு . இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார் . அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர் . இதில் அப்பு , குட்டேட்டன் , ராஜேட்டன் , உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல் . தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது . எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம் . பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது . அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை . மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை , ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக

போதைப்பொருட்களை மருத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        நியூரோமாடுலேஷன் என்றால் என்ன ? நியூரோமாடுலேஷன் என்பதில் நிறைய பிரிவுகள் உண்டு . புரியும்படி சொன்னால் , தேவையான நினைவுகளை வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை மூளையில் இருந்து அகற்றுவது என கூறலாம் . எம்ஐபி படத்தில் மக்களின் நினைவிலிருந்து நினைவுகளை வில் ஸ்மித் சிம்பிளாக ஒரே ஃபிளாஷில் நீக்குவாரில்லையா ? அதேதான் . டிரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் எனும் முறையில் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி , மூளையில் நடைபெறும் நியூரான் தகவல்தொடர்பை மாற்றி நினைவுகளை அழிப்பதுதான் இதன் நுட்பம் . பொதுவாக இதன்மூலம் நினைவுகளை அழிப்பது மட்டுமன்றி , மூளையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை கட்டுக்குள் கொண்டுவரலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன . மேலும் , மூளைக்கு அதிக திறனில்லாத மின்சாரத்தை பயன்படுத்தி , செல்களை ஊக்கப்படுத்தும் ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன . இதனால் எதிர்காலத்தில் கிரியேட்டிவிட்டி இப்படியும் தூண்டிவிடப்படலாம் . மருத்துவத்திற்கு பயன்படும் போதைப்பொருட்கள் உள்ளனவா ? சட்டவிரோதமாக விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் மருத்துவத்தில்பயன்படுத்தப்படுபவைதான் . அதில் சிலவற்ற