இடுகைகள்

மீனவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

போலீஸ் இன்ஸ்பெக்டர், ரௌடி, ஓட்டுநர் என மூவருக்கும் இடையிலான ஈகோ மோதல் - கோர மீனு - ஆனந்த் ரவி, கிஷோரி, ஷத்ரு, ஹரீஷ் உத்தமன்

படம்
  கோரமீனு தெலுங்கு ஷத்ரு, ஹரீஷ் உத்தமன், ஆனந்த் ரவி கதை, திரைக்கதை, வசனம் ஆனந்த் ரவி இயக்கம் ஶ்ரீபதி   விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் ஊர். அங்கு மீசை ராஜூ என்பவர் பணி மாறுதலில் வருகிறார். வந்த உடனே அவரை புகாரின் பேரில் அழைக்கிற சிலர், பலவந்தமாக அவரின் அடையாளமான மீசையை மழித்து எடுக்கிறார்கள். இதனால் மீசை ராஜூ தனது வெளியுலக   அடையாளமான மீசையை இழந்து ஊனமாகிறார். அவரின் ஈகோ காயப்படுகிறது. இதற்கு காரணம் யார் என தேடும்போது, அங்குள்ள மீன் வணிகம் செய்யும் அதன் வழியாக போதைப்பொருட்களை கடத்தும் தாதாவான கருணா கிடைக்கிறார். அவரைக் குறி வைக்கிறார். உண்மையில் கருணா யார், அவர் ஏன் போலீஸ் அதிகாரி ராஜூவை மீசையை மழித்து அவமானப்படுத்துகிறார் என்பதற்கான விடை படத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறது. தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆனால், படம் எடுக்கப்பட்டது மலையாளப் படத்தின் இயல்பில் என்பதால் நிதானமாகவே பார்வையாளர்ளுக்கு யார், எதற்கு, ஏன், எப்படி என்பதற்கான விடைகள் கிடைக்கிறது. மீனவ மக்கள் வாழும் சேரிப்பகுதி. அங்குள்ள மக்களைப் பயன்படுத்தி ஏமாற்றி தொழில் செய்யும் இருவர். அப்பா, மகன். அப்பா,