அமெரிக்கா - தாலிபான் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு முக்கியப் பங்குண்டு!
express tribune அமெரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான தூதராக ஜல்மய் காலிஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொது முடக்க காலத்திலும் கூட டில்லிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு பற்றி அவரிடம் பேசினோம். உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது? அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் தோகாவில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆப்கன் அரசும், தாலிபான்களும் தங்களுடைய தரப்பில் கைதாகியுள்ள வீரர்களை விடுவிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை தீவிரவாத செயல்பாடுகளை அந்நாட்டிற்கு எதிராக செய்யக்கூடாது. போர் நிறுத்தம் அரசு, தாலிபன் ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான அம்சங்கள். இந்தியா இந்த ஒப்பந்தம் சார்ந்து முக்கியமான பாத்திரத்தை வகிப்பதால், டில்லியில் இதுபற்றிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவிற்கான பங்கு என்பது வெறும் பேச்சு அளவில் மட்டும்தானா? செயல்பாடுகள் அளவில் இந்தியாவ