இடுகைகள்

தெரட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வசியம் வைத்து பெண்ணை மயக்கலாம்! - கடிதங்கள்

படம்
        6 வசியம் வைப்போமா? வடக்குப்புதுப்பாளையம் 16.1.2021 அன்புள்ள தோழர் சபாபதிக்கு வணக்கம் . எப்படி இருக்கிறீர்கள் ? எங்கள் ஊரில் ஒருவழியாக மேகமூட்டம் விலகி இப்போதுதான் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது . அண்மையில் எங்கள் சின்ன மாமாவைப் பார்க்க போயிருந்தோம் . சிவகிரியில் டூவீலர் மெக்கானிக்காக உள்ளார் . அவர் கொடுத்த டீ , காபி காக்டெயில் பானத்தை விட கசப்பாக இருந்தது அவர் அறிமுகப்படுத்திய விஷயங்கள்தான் . எனது ஜாதகத்தை தாந்த்ரீகர் ஒருவரிடம் கொடுத்து பேச சொன்னார் . அவர் லூனாவில் வந்திறங்கி மாமாவின் வீட்டுக்கு வந்தது முதல் வினோதமாக இருந்தது . வம்சாவளியாக பில்லி , சூனியம் , வசியம் வைக்கிற ஆள் என்று அவராகவே சொல்லிக்கொண்டார் . எனக்கு அவர் சொல்ல சொல்ல வயிற்றுக்குள் ஏதோ உருண்டு புரள்கிற அவஸ்தை தொடங்கியது . அம்மா எப்போதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் எப்போதும் பேசுபவர் அமைதியாகிவிடுவார் . பெண்ணைப் பிடித்திருந்தால் சொல்லுங்ளள் வசியம் செய்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார் . எனக்கு இதுபோன்ற விஷயங்களை கோட்டயம் புஷ்பநாத் நாவலில் படிக்க ப