இடுகைகள்

மனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆராய்ச்சியை செய்த ஜீன் பியாஜெட்

படம்
  ஸ்விட்சர்லாந்தின் நியூசாடல் என்ற நகரில் பிறந்தார். இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். தனது பதினொன்று வயதில் தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கை எழுத தொடங்கிய மேதாவி. மனித குணங்கள், இயற்கை அறிவியல் பற்றிய பாடங்களை எடுத்து படித்தார். இருபத்தி இரண்டு வயதில் நியூசாடல் பல்கலையில் முனைவர் பட்டம் வென்றார். உளவியலில் ஆர்வம் வந்தது பிற்காலங்களில்தான். பிரான்சில் உளவியல் ஆய்வுகள் பற்றி படித்தார். 1921ஆம் ஆண்டு ஜீன் ஜாக்குயிஸ் ரூஸ்யூ என்ற ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்பில் சேர்ந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வைத்து குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தார். 1955ஆம் ஆண்டு, மனித அறிவு, குணங்கள் பற்றிய மையத்தை தொடங்கினார். இறக்கும் காலம் வரை அதன் தலைவராக இயங்கினார். உலகம் முழுக்க உள்ள கல்வி அமைப்புகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.  முக்கிய படைப்புகள் 1932 தி மாரல் ஜட்ஜ்மென்ட் ஆஃப் தி சைல்ட்  1951 தி சைக்காலஜி ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் 1952 தி ஒரிஜின்ஸ் ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் இன் சில்ட்ரன் 1962 தி சைக்காலஜி ஆஃப் தி சைல்ட் 

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்

படம்
  மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.  இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.  ஒருவர

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ர

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

படம்
  கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான்.  பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான்

சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமா? அதை மாற்ற முயலுங்கள் போதும்!

படம்
  கர்ட் லெவின்  ஜெர்மனிய - அமெரிக்க உளவியலாளர். 1890ஆம் ஆண்டு போலந்தில் உள்ள மொகில்னோ என்ற நகரில் மத்தியதரவர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1905ஆம் ஆண்டு குடும்பம், பெர்லினுக்கு இடம்பெயர்ந்தது. ஃப்ரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு, முனிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து சேவை செய்தார். ஆனால் காயம்பட்டதால் நாடு திரும்பியவர், முனைவர் படிப்பை முடித்தார். பெர்லினில் உள்ள உளவியல் மையத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். யூதர் என்பதால் வேலையை விட்டு விலகுமாறு அச்சுறுத்தப்பட்டார். எனவே, ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். முதலில் கார்னல் பல்கலைக்கழகத்தி்ல் வேலை செய்துவிட்டு பிறகு ஐவோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். எம்ஐடிக்கு சொந்தமான குரூப் டைனமிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதயபாதிப்பு ஏற்பட்டு காலமானார்.  முக்கிய படைப்புகள் 1935 எ டைனமிக் தியரி ஆஃப் பர்சனாலிட்டி 1948 ரிசால்விங் சோசியல் கான்ஃபிலிக்ட்ஸ் 1951 ஃபீல்ட் தியரி இன் சோசியல் allaboutpsychology.com

ஒருவரை மிரள வைக்கும் பயங்கள் நான்கு!

படம்
  ஒருவரின் பிள்ளை, அவரின் அப்பாவை இரண்டு விதமாக புகழ்பெறச்செய்யலாம். அவரை விட மோசம். அவரே பரவாயில்லைப்பா என இரண்டு விதமாக தனதுசெயல்களை அமைத்துக்கொள்ளலாம். நல்லவிதமாக இயங்கலாம். கெட்டவிதமாகவும் செயல்படலாம். இதெல்லாம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? அவரின் மரபணுவா, அல்லது அவர் வளர்ந்த சூழ்நிலையா? இந்த விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. பரிணாம உளவியலில் இதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்தான், கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்டீவன் பிங்கர். இவர் மனிதர்களுக்குள் உள்ள நான்கு பயங்களை சுட்டிக்காட்டினார். அதில் முதலாவதாக வருவது பாகுபாடு. ஒருவர் உலகில் குழந்தையாக பிறக்கும்போது அவர் மனது எழுதப்படாத சிலேட் பலகையாக உள்ளது. அனைவரும் ஒன்றானவர்களாக இருக்கிறார்கள். பிறகுதான் அவரின் குடும்பம், பணம், அரசியல் கருத்தியல் என வேறுபாடு தொடங்குகிறது.  இரண்டாவது, சீரற்ற தன்மை. அனைவரும் ஒன்று போலவே நகலெடுத்த சீனப்பொருட்கள் போல இருப்பதில்லை. பற்றாக்குறை, போதாமை கொண்டவர்களாக உள்ளனர். இப்படி உள்ளவர்கள் தங்களை மாற்றங்களுக்கு தயார்படுத்திக்கொள்வதில்லை. இவர்கள் அதிகாரத்தில் உள்ளபோது ச

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலா

கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
ஆதிக்கவாதியாக ஒருவர் செயல்பட முடிவெடுத்துவிட்டார். சரி, ஆனால், அவர் முதலில் சில கேள்விகளை அவராக கேட்டுப் பார்த்து அதற்கான பதில்களைப் பெறவேண்டும். அப்போதுதான் தான் ஏற்கவேண்டிய பொறுப்பு பற்றி தெளிவாக அறிய முடியும். இப்போது கேள்விகளைப் பார்ப்போம். நீங்கள் குரூரமான அல்லது இரக்கம் கொண்ட ஆதிக்கவாதியா? நீங்கள் சாடிஸ்டா? ஆம் எனில் உங்களை எப்படி வரையறை செய்வீர்கள்? உங்கள் இணையர் மாசோசிஸ்டாக இருந்தால் அது உங்களை பாதிக்குமா? ஒரு இணை அல்லது பல இணையர்களை பயன்படுத்துபவரா? பல இணையர்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் கட்டுப்பாடுகளைக் கொண்டவரா? உங்கள் இணையர்களுக்கான விசுவாச விதிகளை தனியாக வகுத்து வைத்தீர்களா? அது உங்களுடையதிலிருந்து மாறுபடுமா? ஆதிக்கவாதியாக இருப்பது பிறரை விட உங்களை தனித்து காட்டுவதாக நினைக்கிறீர்களா? ஒரு உறவுக்குள் குறிப்பிட்ட விதிமுறைகளை மதித்து நடப்பது என்பது எந்தவகையில் முக்கியமானது? கீழ்படிபவரைத் தண்டிப்பது உண்டா? ஆம் என்றால் எப்படி? இணையர்களுக்குள் முரண்பாடு வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்? உங்களுக்கு சட்டென கோபம் வருமா? அப்படி வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? ஒரு மாசோசி

அவதாரம் 3 - மனமும் ஆய்வுகளும் நூல் அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது!

படம்
  அவதாரம் தொடர்வரிசை நூலின் மூன்றாவது நூல். இந்தவகையில் தொடரின் இறுதி நூலும் இதுதான். வெகுநாட்களாக உளவியல் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்ற நூல்களில் எழுத முடிந்ததே ஒழிய அவற்றை முழுமையாக எழுத முடியவில்லை. அதற்கான நல்வாய்ப்பாக அவதாரம் நூல்கள் அமைந்தன. இதற்கென ஆங்கில நூல்களும், மாத இதழ்களும் கூட கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் வரிசைதான் அவதாரம்.  மூன்றாவது நூலில் உளவியலாளர்கள் பெரும்பாலானோரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதில், யாரேனும் விலகியிருந்தால், அவர்களைப் பற்றி வலைப்பூவில் எழுத முயற்சி மேற்கொள்ளப்படும். உளவியல் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு அவதாரம் 3 நூல், ஆச்சரியம் தரும். இதில், அந்தளவு உளவியலாளர்கள். அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை என பலவும் பேசப்படுகிறது. நூலைப் படியுங்கள். பிடித்திருந்தால் ஒத்த ஆர்வமுள்ளவர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலை எழுதும்போது எனக்கு ஊக்கமூட்டுதலாக இருந்த ஒரே ஆன்மா நண்பர் மெய்யருள் அவர்கள். அவர்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கிறேன்.  Please click the link for read the book https://www.amazon.in/dp/B0CPKTBF2X

அவதாரம் 3 - மின்னூல் அட்டைப்படம் வெளியீடு -

படம்
  மின்னூல் விரைவில் வெளியீடு.... சமர்ப்பணம் வடிவமைப்பாளர் வெள்ளோடு மெய்யருள் அவர்களுக்கு...

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்கள். அவர்

உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம்.  மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை.  டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற மாயக்காட்சிகளை

வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

படம்
  வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார்.  விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள் இறந்துபோனால் என்ன

முன்முடிவுகளின்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே ஆனந்தம்தான்!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனநல குறைபாடு என்பது சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. அதனை எதிர்மறையாகவே மருத்துவர்களும், மக்களும் புரிந்துகொண்டனர். அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தனர். மனநல குறைபாடு என்றால் இதுதான் என்று  வரையறைகளும், அதை தீர்ப்பதற்கான முறைகளும் கூறப்பட்டன.  மனிதர்களுக்கு ஏற்படும் மனநல குறைபாடு என்பது பன்மைத்தன்மையானது. அதை குறிப்பிட்ட இறுக்கமான வரையறைக்குள் அடைப்பது சரியானது அல்ல என்ற கருத்தை அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் கொண்டிருந்தார். மனநிலையை குறிப்பிட்ட வரையறைக்குள் அடைப்பதை அவர் ஏற்கவில்லை. நல்ல மனநிலையை ஒருவர் அடைவதற்கு குறிப்பிட்ட செயல்நிலைகள் கிடையாது என கூறினார். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டே இருக்கிறது. நாமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். அதன் வழியாக அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. எனவே, மனநிலை சீர்கெட்டு உள்ளதாகவும், அதை ஒருவர் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதையும் ரோஜர்ஸ் ஏற்கவில்லை.  நல்ல வாழ்க்கையை ஒருவர் வாழ அவர் புதிய அனுபவங்களுக்கு தனது மனதை திறந்து வைக்க தயாராக இருக்கவேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.

தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

படம்
  ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார்.  இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பல

தன்னைப் பற்றி உணர உதவும் உளவியல் சிகிச்சை முறை

படம்
  கெஸ்சால்ட் தெரபி என்பது நிகழ்காலத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவர் தனது உணர்ச்சிகளை கையில் கையாளத் தெரிந்துகொண்டாலே எளிதாக பிரச்னைகளிலிருந்து வெளியே வரமுடியும். தனது மனதில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதே இதில் உணரவேண்டியது. இப்படி உணர்ந்துகொண்டால் ஒருவரால் கவனமாக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளலாம்.  உணர்ச்சிகளின் மீதான கவனத்தை ஒருவர் கொண்டிருப்பது, கூறுவதைப்போல எளிதானது அல்ல. கடினமானது. இதை நிகழில் வாழ்தல் என்று கூறுவார்கள். இதை ஒருவர் மெல்ல பழகினால் எளிதாக தனது சூழல், அதில் அவரது அனுபவம் என இரண்டையும் மெல்ல மாற்றிக்கொள்ள முடியும். கெஸ்சால்ட் தெரபியில் என்னால் முடியாது என்று கூறுவதை நான் அதை செய்ய விரும்பவில்லை என மாற்றிச்சொல்ல வைக்கிறார்கள். செயல்பட வைக்கிறார்கள். முதலில் பேசவேண்டும். பிறகு அதுவே செயலாகிறது. அதாவது, நான் என்ற தன்மை மாறுதல் அடைகிறது. விஷயங்களை வாய்ப்பாக பார்க்கும் குணம் கூடுகிறது. குறிப்பிட்ட சூழல் காரணமாக அல்லது அதை காரணம் காட்டி தன்னை பாதிக்கப்பட்டவர்கள

மனிதர்களைப் பற்றிய கருத்துகளை வலிந்து உருவாக்கும் சமூகம்!

படம்
  பள்ளி, கல்லூரி, சமூகம், குடும்பம், இணையம் என பார்த்தால் ஒருவரின் மனதிலுள்ள கருத்தை எந்த அம்சம் உருவாக்குகிறது என கண்டுபிடித்துவிடலாம். இன்றைய காலத்தில் இணையம் குறிப்பிட்ட கருத்துகளை வலிந்து உருவாக்குகிறது. அதை வைத்து சமூகத்தில் உள்ள ஒருவரை எளிதாக அவதூறு செய்து கீழிறக்கமுடியும். குடும்பம், அலுவலகம், இணையம் ஆகிய இடங்களில் இதுபோல நச்சை உருவாக்குகிற இயல்பு கொண்ட மனிதர்களை ஒருவர் எளிதாக சந்திக்கலாம். இந்த மனிதர்கள் தனக்கு அங்கீகாரமும் , அதிகாரமும் வேண்டும் என பேராசை கொண்டிருப்பார்கள். அதை அடைய பல்வேறு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்வார்கள். தன்னை மட்டுமே மையப்படுத்திய சிந்தனை கொண்டவர்கள், நடைமுறை பிரச்னையில் தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் நச்சு பிரசாரங்களை செய்வார்கள். தங்களின் தகுதியின்மை, திறனின்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.  வரலாற்றில் மிக மோசமான நேரத்தில் பணவீக்கம் வருகிறது, வருமானம் போதவில்லை எனும்போது ஒருவர் பொன்னியின் செல்வன் நூலை எடுத்து வைத்து படித்து கனவில் ஆழ்வதைப் போன்ற குணம் மனிதர்களுக்கு உண்டு. அன்றைய காலத்தை நினைத்து

ஆசைகளை மனதில் மறைத்து வைத்தால் ஏற்படும் ஆபத்தான நிலைமை!

படம்
  உளவியலில் தன்னுணர்வற்ற நிலை என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை என்பது ஒருவரின் வாழ்பனுவத்தைக் கடந்த இயல்புடையது. கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. தன்னுணர்வற்ற நிலையில் நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள் சேகரமாகின்றன. இதனால்தான் இந்த கருத்து மீது ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் சிக்மண்ட் உளவியலாளர் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அன்றைய காலத்தில் தன்னுணர்வற்ற நிலை பற்றிய ஆராய்ச்சி, வேகமாக நடைபெறவில்லை. இந்த காலத்தில் ஃபிராய்ட் செய்த ஆராய்ச்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அவர் ஒருவரின் சிந்தனை, அனுபவம் ஆகியவை தன்னுணர்வு, தன்னுணர்வற்ற நிலை ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்கினார்.  சார்கட்டிடம் பணியாற்றும்போது, ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கு ஹிப்னாசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுவை ஃபிராய்ட் கவனித்தார். நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளால் ஹிஸ்டீரியா குறைபாடு ஏற்படுகிறது என சார்கட் கருதினார். பிறகு வியன்னா திரும்பிய சிக்மண்ட் ஃபிராய்ட், ஹிஸ்டீரியாவுக்கான சரியான சிகிச்சை முறையைக் கண்டறிய முயன்றார். அப்போது அங்கு புகழ்பெற்றிருந