இடுகைகள்

மனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரதிர்ச்சி நினைவுகள்

theconversation.com அதிர்ச்சிகரமான நினைவுகள் பெரும்பாலும் துண்டு துண்டானவை – ஒரு உளவியலாளர் அது எப்படி, ஏன் நிகழ்கிறது என்பதை விளக்குகிறார் மிச்சேல் பேட்டர்சன் ஃபோர்டு அதிர்ச்சியிலிருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது, அவர்கள் தங்கள் கதைகளை எவ்வாறு சொல்கிறார்கள் என்பதன் காரணமாக அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்கள். என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வதில் அவர்களுக்கு சிக்கல்கள் இருக்கலாம், அல்லது அவர்களின் நினைவுகள் குழப்பமாக அல்லது முரண்பாடாக கூட இருக்கலாம். அந்தக் கதைகளைக் கேட்கும் நபர்கள் – வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது நண்பர்கள் – தெளிவான, நேரியல் விவரிப்பை எதிர்பார்க்கலாம். அதிர்ச்சியால் பாதிக்கப்படாதவர்கள், அந்த நேரத்தில் அந்த நபர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதைக் கேட்டு ஆச்சரியப்படலாம். அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்வை அனுபவிக்கும் ஒருவருக்கு "போராடு அல்லது ஓடு" பதில் இருக்கும் என்று கருதுவது எளிது, உள்ளுணர்வாக ஒரு குற்றவாளியை எதிர்த்துப் போராடுவது அல்லது காட்சியிலிருந்து தப்பித்து ஓடுவது – ஆனால் அது அவ்வாறு இல்லாமல் இருக்கல...

தனிமை சூழல்

காலநிலை மாற்றம் நம்மை மேலும் தனிமைப்படுத்தக்கூடும்: வெப்ப அலைகள் மற்றும் தீவிர வானிலை அனைவரும் நம்பியிருக்கும் சமூக தொடர்புகளை எவ்வாறு சீர்குலைக்கிறது ஃபியோனா டோஹெர்டி --- கடுமையான புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ ஆகியவை ஒரு சமூகத்தின் சமூக வாழ்க்கையை முடக்கி, திருவிழாக்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, சமூக நிகழ்வுகளை ரத்து செய்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கும். காலநிலை மாற்றம் நாம் அனைவரும் வாழும் சூழலை மாற்றுவது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் இணைந்து கொள்ளும் நமது திறனையும் தடைசெய்கிறது என்பதற்கான சான்றுகளும் அவையே. உலகளவில், சமூக தொடர்பு என்பது தனிநபர் மற்றும் கூட்டு நல்வாழ்வுக்கு இன்றியமையாததாக increasingly அங்கீகரிக்கப்படுகிறது. இது நமது மூளையை செயலில் வைத்திருக்கும் மற்றும் மன அழுத்த அளவுகளைக் குறைக்கும். அவசரகாலங்களில், சமூக பிணைப்புகள் உயிர்களைக் கூட காப்பாற்றும். உறவுகள் சரியான நேரத்தில் தகவல் பகிர்வு, பரஸ்பர உதவி மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான வழிகளாகும். வெப்பநிலை உயரும் போது, நண்பர்களும் அயலவர்களும் வெப்ப எச்சரிக்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், வயதானவர்கள் அல...

குளிர்பானமா? மதுபானமா?

படம்
B fizz குளிர்பானம் பற்றி....### நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். பார்லே அக்ரோவின் "பி ஃபிஷ்" குளிர்பானத்தின் மார்க்கெட்டிங், மது அல்லாத ஒரு பானத்தை "பீர் போன்ற சுவை" என்று விளம்பரப்படுத்துவது, **சரியான விளம்பரமா? (Misleading Advertisement)** என்கிற பெரிய கேள்வியை எழுப்புகிறது. 'மால்ட் பேஸ்டு' (மால்ட் - தானிய முளைப்பு சாரம்) என்று சொன்னாலே போதும்; அது ஒரு சத்தான, இனிப்பான பானம் என்று புரிந்து கொள்ளலாம். அதை நேரடியாக "பீர்" உடன் ஒப்பிட்டு, **பீர் கோப்பை படத்தை** போடுவது, **குழப்பத்தை ஏற்படுத்தும் (Ambiguity)** நோக்கத்தையே காட்டுகிறது. ### 1. FSSAI-யின் விதிகள் என்ன சொல்கின்றன? FSSAI (Food Safety and Standards Authority of India) விதிகள் மிகத் தெளிவானவை: - **தவறான விளம்பரத்திற்குத் தடை:** எந்த ஒரு உணவுப் பொருளின் விளம்பரமும் **தவறானதாகவோ (False)** அல்லது **தவறாக வழிநடத்தக்கூடியதாகவோ (Misleading)** இருக்கக் கூடாது . - **மது பானங்களுக்கான சிறப்பு விதி:** **0.5%** அளவுக்கு மேல் ஆல்கஹால் உள்ள பானங்கள் மட்டுமே 'மது பானங்கள்' என வகைப்படு...

இருளில் இரு கண்கள் - மின்னூல் வெளியீடு

படம்
Kobo - smash words

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...

காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?

படம்
  காதல் மீட்டர்  4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும்.  டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும்.  சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...

காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?

படம்
  காதல் மீட்டர்  2 ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது? ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை ...

அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட்  என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன.  தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன்.  அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரி...

லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் = கடந்த காலத்தை கடந்துவிடுங்கள்!

 love for imperfect things buddhist monk haemin sunim penguin லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் பெங்குவின்  ப.276 துறவி ஒருவர் தன்னுடைய சொந்த அனுபவம், பார்த்த நண்பர்களின் வாழ்க்கை பற்றி பேசி அதற்கான தீர்வுகளை முன் வைக்கிறார். நூலின் அத்தியாயங்கள் சிறியவை. அத்தியாயங்கள் முடிந்தவுடன் மேற்கோள்கள் அறிவுறுத்தல்கள் தனியாக இடம்பெறுகின்றன. நூலை இணையத்தில் பார்த்து எப்படிப்பட்ட நூல் என்று கூட பார்க்கவில்லை. நூலின் தலைப்பைப் பார்த்தவுடனே தரவிறக்கி விட்டேன். அப்புறம் பார்த்தால், நூலின் உள்ளடக்கம் எதிர்பார்க்காதபடி சிறப்பாக இருந்தது.  கொரியாவைச் சேர்ந்த புத்த துறவி ஹாமின் சுனிம். இவர் அமெரிக்காவில் உள்ள யுசி பெர்க்லி, ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். அப்போதுதான் புத்தமதத்தில் ஆர்வம் உருவாகி துறவி ஆகியிருக்கிறார்.தென்கொரியாவில் தன்னார்வ அமைப்பை நடத்தி, மக்களுக்கு குழு தெரபி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர், ஆன்மிக வழிகாட்டல்களைக் கொண்டு எழுதும் இரண்டாவது நூல் இது. நூலின் சிறப்பு என்னவென்றால், தான் துறவியாகிய வாழ்க்கையில் செய்த தவறுகள், தடுமாற்ற...

பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்

 பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர் சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள்.  அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்...

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

பாயக் காத்திருக்கும் ஓநாய் - அப்பாஸ் கியாரோஸ்தமி

 பாயக் காத்திருக்கும் ஓநாய் அப்பாஸ் கியாரோஸ்தமி மொழிபெயர்ப்பு மோகனரங்கன் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்தமி எழுதியுள்ள கவிதை நூல். நூலை தமிழில் மோகனரங்கன் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பலவும் தனிமை, அடையாள சிக்கல், காலம், விரக்தி, அன்பு, பிரிவு என பல்வேறு உணர்வுகளை மிகச்சிறிய சொற்களில் கூறமுயன்றுள்ளன. வாசிக்கும்போது உங்களுக்கு அவை சிறந்த சொற்கள் என நம்பமுடியும் அளவுக்கு கவிதைகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன.  நூலை வெளியிட்ட பதிப்பகம் கவிதைகளை தொடர் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. நல்ல முயற்சி. சிறப்பான மொழிபெயர்ப்பு காரணமாக கவிதைகள் சிறிய சொற்களிலும் கூர்மை மழுங்காமல் உள்ளன. அவை சொல்லவரும் பொருளை உறுதியாக உரைக்கின்றன 'சொர்க்கத்தை சென்றடைய ஒருவர் நடக்கவேண்டும் நரகத்தின் பாதையில்' என்ற கவிதையை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டலாம்.  இயற்கை அழிவது பற்றிய அக்கறை குரலை எழுப்பும் கவிதைகள் உள்ளன. பிரிவை சொல்லும் கவிதைகளில் 'நின்றுபோனது கடிகாரம்' என்ற கவிதை வரிகளில் இருந்து மீளவே முடியவில்லை. இனி எப்போது சந்திப்போம் என ஆண் கேட்கிறான். அவள், இனி எப்போதுமி...

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!

படம்
    உளவியல் மிஸ்டர் ரோனி ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார். ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது. கார்ல் ...

விரைவில் - மின்னூல் வெளியீடு - உபசாந்தம் - உளவியல் நூல் - இராம பாரதி

படம்
 

தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

படம்
       காமசூத்திரம் நாராயண ரெட்டி விகடன் பிரசுரம் ப.1000க்கும் மேல் விலை 230 நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம். வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம். காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ ...

சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

படம்
      12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...