இடுகைகள்

பால் வியாபாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடிநீர் தேடி அலையும் விலங்குகளுக்கு உதவும் சூழல் மனிதர் - ராதாஷ்யாம் பிஷ்னோய்

படம்
  விலங்குகளின் குடிநீர் தாகம் தீர்க்கும் மனிதர்!  ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வாழும் விலங்கினங்களுக்கு கோடைக்காலம் கடினமானது. அப்போது, நீர்வேட்கையில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துதான் தாகத்தை தணித்து வந்தன. தற்போது, அப்படி அலையும் விலங்குகளுக்காக குளங்களில் நீரை நிரப்பி வருகிறார் சூழலியலாள் ராதேஸ்யாம் பிஷ்னோய்.  ராஜஸ்தானின் தோலியா கிராமத்தைச் சேர்ந்தவர், பிஷ்னோய். இனிப்புகளில் சேர்க்கப்படும் கோயா எனும் பால் பௌடரைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார். காயம்பட்ட விலங்கினங்களை மீட்டு சிகிச்சை அளிப்பதோடு, அவற்றைப் பாதுகாப்பது பற்றிய பிரசாரத்தையும் செய்து வருகிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடைக்காலமான  ஏப்ரல், ஜூன் மாதங்களில் விலங்கினங்களுக்காக குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளைச் செய்து வருகிறார். தோலியா கிராமத்தோடு அருகிலுள்ள  கேடோலி கிராமத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார்.  இதன் மூலம், பாலைவன  நரி, பூனை, சின்காரா மான், கழுகுகள் ஆகியவை பயன்பெற்று வருகின்றன. ”2017ஆம் ஆண்டு நீர்தேட