இடுகைகள்

எதிர்காலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இல்லாமல் எ

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில் மக்

ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது! - டாக்டர் கேட் டார்லிங்

படம்
              டாக்டர் கேட் டார்லிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்     நாம் ரோபோக்களைப் பற்றி யோசிப்பதில் தவறு ஏதேனும் உள்ளதா ? நாம் எப்போது் மனிதர்கள் , செயற்கை நுண்ணறிவை ஒரே தட்டில் வைத்து சோதித்து வருகிறோம் . இந்த ஒப்பீடு , நமது கற்பனையை கட்டுப்படுத்துகிறது . இதில் விலங்குகள் எப்படி தொடர்புடையவையாக உள்ளன ? நாம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் நமக்கு பயன்பாடு உள்ளவை . இவற்றையும் ரோபோக்களையும் தொடர்புடையதாக கூற முடியாது . ஆனால் மனிதர்கள் ரோபோக்களுக்குமான தொடர்பில் விலங்குகள் முக்கியமானவை . இவற்றின் உடல் அசைவுகள் ஆராய்ச்சிக்கு முக்கியமானவை . பெரும்பாலான நிறுவனங்கள் மனிதர்கள் இல்லாமல் செயல்படக்கூடிய இயந்திரங்களைதயதாரித்து வருகிறார்கள் உதாரணத்திற்கு தானியங்கி கார் , ட்ரோன் டெலிவரி என . இதில் விலங்குகளின் தன்மைகளில் உருவாக்கப்படும் ரோபோக்கள் , ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவுமா ? மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு உள்ளது உண்மைதான் . ஆனால் அது ரோபோட்டுகளால் உருவாக்கப்படவில்லை . அதை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் அரசியல் , பொருளாதார விஷயங்களால் ஏற்படுவது இந்த

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

அப்பாவை அம்மா காதலிக்க வைக்க போராடும் மகனின் போராட்டம்! - பேக் டூ தி ப்யூச்சர்

படம்
                பேக் டூ தி ப்யூச்சர் முதல்பாகம் . Director: Robert Zemeckis Produced by: Bob Gale, Neil Canton Writer(s): Robert Zemeckis, Bob Gale இதில் மார்டி தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான எம்மட் தயாரித்த கால எந்திரத்தில் விபத்தாக பயணிக்கிறார் . அதுவும் கூட தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கத்தான் . இந்த கால எந்திரம் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது . எப்படியென்றால் , குறிப்பிட்ட மெஷின் என்றால் அதனை பயன்படுத்துவது கடினமாக இருக்கும் . ஆனால் படத்தில் அதனை காராக பயன்படுத்தி விட்டார்கள் . இதனால் வேறு காலத்திற்கும் அதனால் பயணிக்க முடியும் . இதனால் லாஜிக் பெரிதாக இடிக்கவில்லை . மார்ட்டியின் அப்பா கோழையாக இருக்கிறார் . அவரை அவரது உடன் படித்த நண்பர் பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார் . மார்டிக்கு தனது அம்மா எப்படி அப்பாவை திருமணம் செய்தார் என்பதே புரியமாட்டேன்கிறது . அந்தளவு அசடாக இருக்கிறார் அவரது அப்பா . 1985 லிருந்து ் 1955 ஆம் ஆண்டுக்கு செல்லும்போது அப்பா , அம்மாவுக்கு இடையிலான காதலை கண்டுபிடிக்கிறார் . இவர் அவர்களது காதல் நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னரே சென்று வ

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா

ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் .......

படம்
    cc       தற்போது 50 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். 2100ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பெரு நகரங்கள் அடைந்தால் என்னென்ன விஷயங்கள் மேம்படும் என்பதைப் பார்ப்போம். போக்குவரத்து நெரிசல் இப்போது சீனாவில் தெரு விளக்குகள் ஏறத்தாழ மக்களைக் கண்காணிக்கும் சென்சார்களைக் கொண்டுள்ளன. இதே பாணியில் நகரங்களில் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை பதிவு செய்து தலைமை கணினிக்கு அனுப்பும் வசதி உருவாகியிருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் யாரும் போன் செய்யாமலேயே உதவிகள் கிடைக்கும். போக்குவரத்து நெருக்கடிகளை விரைவில் தீர்க்க காவல்துறையினரும் அங்கு வருவார்கள் அல்லது அதனை தீர்க்க ரோபோக்கள் செயல்பாட்டுக்கு வரும். வண்டி நிறுத்தங்கள் வண்டி நிறுத்தங்கள் எங்கே உள்ளன என்பதை திறன்பேசி செயலி மூலம் அறிய முடியும். இதனால் இடத்தை தேடி அலையாமல் திறன்பேசி மூலமே இருந்த இடத்திலேயே அறியலாம். இதனை தெருவிளக்கில் பொருத்தப்பட்ட ரேடார்கள் கண்காணித்து இத்தகவலை திறன்பேசியிலுள்ள செயலிக்கு அனுப்புகிறது. மக்கள் சக்தி இதன் அர்த்தம் அவர்கள் நிறைய இடங்களில் போராட்டம்

எதிர்காலத்தில் நாம் வாழும் வீடுகளில் இந்த வசதிகள் கண்டிப்பாக இருக்கும்! - என்னென்ன வசதிகள் தெரியுமா?

படம்
        cc         வீடு தூக்கம் என்பது இனி மாறும் . முதலில் சாப்பிட்டுவிட்டு வெளிச்சம் வரும் ஜன்னலின் திரையை இழுத்துவிட்டால் போதும் . ஆனால் இனிமேல் உங்களை தூக்கத்தை ஸ்மார்ட் மெத்தைகளே பார்த்துக்கொள்ளும் . உடலின் தூக்கம் கலையாதவாறு வெளியில் மழை பெய்தால் அதற்கேற்ப படுக்கை வெப்பமாகும் . வறண்ட காற்று வீசினால் படுக்கை அதற்கேற்ப நெகிழ்ந்துகொடுத்து தூங்க வைக்கும் . அறை புழுங்கினால் , படுக்கை குளிர்ந்த தன்மைக்கு மாறும் . படுக்கையில் படுக்கும் தம்பதியர் இருவரின் தூக்கங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும் என்பது சிறப்பு . மேலும் விளக்குகள் சூழ்நிலைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ள முடியும் . படுக்கை அறையை வெளிப்புறத்தில் உள்ள ஒலிகள் பாதிக்காதவாறு சவுண்ட்ப்ரூப் அல்லது இரைச்சல் குறைப்பு வசதிகள் செய்துகொள்ளும் வாய்ப்பும் கூடிவரும் . மேசை நாற்காலிகள் இவை அனைத்திலும் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகள் உண்டு . ஐகியா என்ற நிறுவனம் ஏற்கெனவே இந்த வசதியை செய்து மேசைகளை விற்று வருகிறது . ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கடைகளில் இந்த வசதியை செய்து வருகிறது . கண்ணாடி

அரசியல்வாதிகள் தம் பொறுப்பை உணர வேண்டும்!

படம்
          ”சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது   அரசியல்வாதிகள்தான்” உலக வங்கியின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலைகள் ஆகிய பிரிவின் இயக்குநர் மைக்கேல் ருட்கோவ்ஸ்கி. அவரிடம் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி பேசினோம். ஆங்கிலத்தில் - சுரோஜித் குப்தா வேலைவாய்ப்பு சந்தையில்   அரசியல்வாதிகளின் பங்கு என்ன? மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, செல்வம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவர்களே இதற்கு பொறுப்பு. உங்களது தாத்தா காலத்து வேலை வாய்ப்புச் சந்தை தற்போது கிடையாது. எதிர்காலத்தில் இந்த சந்தைக்கு மதிப்பும், பாதுகாப்பும் ஏற்படுத்துவது முக்கியம். இவற்றை பிரபலப்படுத்தி தொழில்முனைவோர்களை ஈர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு. எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி நான் நம்பிக்கையுடனே இருக்கிறேன். காரணம் தொழில்நுட்ப பாய்ச்சல் உலகில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே நுழையும் போது வேலையிழப்பு பற்றிய அச்சம் இருக்கும். ஆனால் பின்னாளில் அதே தொழில்நுட்பத்தால் அதிகவேலைவாய்ப்புகள் ஏற

தானியங்கி கார்களின் ஆண்டு தொடங்குமா?

படம்
giphy 2020 கேள்வி பதில்கள் தானியங்கி கார்கள் சாலையைத் தொடுமா? கூகுளின் வேமோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் இதில் இன்னும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. பயணிகளை சரியானபடி கவனித்து கார்கள் செல்லவேண்டியதில் பயிற்சி தேவைப்படுகிறது. இல்லாதபோது விபத்துகளை சந்திக்கவேண்டும். இந்த ஆண்டில் சாலைக்கு வர தானியங்கி கார்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஆராய்ச்சிகள் வேகம் பிடித்துள்ளதுதான் காரணம். தகவல்களை பாதுகாப்பதில் இனி டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுமா? நமது தகவல்கள் பாதுகாக்கப்படுமா? இணைய உலகில் இப்படியொரு கேள்வியா?இலவசம் என்று வரும் சேவைகள் எப்படி தகவல்களை பாதுகாப்பவையாக இருக்கும் என நம்புகிறீர்கள். ஐரோப்பிய யூனியன் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.விதிமுறைகளை கடைபிடித்தால்தானே அவையெல்லாம் நடைமுறைக்கு வரும். டெக் நிறுவனங்கள் அடிக்கடி அபராத பிரச்னையில் மாட்டுவதே விதிகளை கடைபிடிக்காத மூர்க்கமான வியாபார வெறிக்காகத்தான். பிரைவசி செட்டிங்குகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். நிறுவனங்களை அந்தளவுக்கு மட்டுமே நம்பலாம்.

சிறைவாதிகளுக்கு பயிற்சி தரும் பின்லாந்து அரசு!

படம்
giphy.com சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வெளி

மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?

படம்
  மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை,  மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்

செக்ஸ் பாட்டுடன் செக்ஸ் சாத்தியமா?

படம்
செக்ஸ்பாட்டுடன் செக்ஸ் சாத்தியமாகுமா? இன்று கடைகளில் செக்ஸ்பாட்கள் விலைக்கு கிடைக்கும் வகையில் பிரபலமாகிவிட்டன. உடனே அவற்றை பலர் வாங்கத் தயங்கினாலும் விரைவில்(50 ஆண்டுகளில்) இவை நாடெங்கும் பரவலாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இது ரகசியமாக நடைபெறும். செக்ஸி ரோபோ, அல்லது செக்ஸ் பொம்மைகளா எப்படி அழைப்பது என பலருக்கும்  குழப்பம் உள்ளது. ஆனால் சிப் பொருத்தப்பட்ட செக்ஸ் ரோபோக்கள் அந்த உபயோகத்தையும் தாண்டியவை. செயற்கை அறிவு அப்டேட் கொண்டவை மனிதர்களின் உணர்ச்சிகளையும் கற்கத் தொடங்கியுள்ளன. ஸ்கேர்லட் ஜோகன்சன் உருவத்தில் மார்க் 1 ரோபோவை செய்தவர். ரிக்கி மா ஹேங், அவர், இதனை செக்ஸ் ரோபோ என்பதை விட பல்வேறு வேலைகளை செய்யும் ரோபோவாக பார்க்கிறார். இதனை எப்படி இயக்குவது, குழந்தைகளுடன் இருக்கும்போது அம்மா மோடும், இரவு வந்தால் காதலி மோடும் மாற்றிக்கொள்ள முடியுமா? நன்றி: கான்வர்சேஷன்