இடுகைகள்

அக்வாஃபில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் இழையால் தயாரிக்கப்படும் ஆடைகள்!

படம்
  சூழலைப் பாதிக்காத உடைகள் 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு லஷ்மி சத்யநாராயணன் இடம்பெயர்ந்துவிட்டார். இவர், அதுவரை கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார். ஆனால் அமெரிக்காவிற்கு சென்றபிறகு அதுபோன்ற ஆடைகளை தொடர்ச்சியாக வாங்க முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு மறுசுழற்சி செய்த பாலிஸ்டர் ஆடைகளைப் பற்றி தெரிய வந்தது.  இவற்றை ஆன்லைனில் வாங்கத் தொடங்கினார்.  செயற்கை இழைகள் என்பது உண்மை என்றாலும் இதனை கழிவாக எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து மறுசுழற்சி எடுத்து சேலையாக நெய்கிறார்கள் என்பது அவரை ஈர்த்திருக்கிறது.  உலகளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் பொருட்களை இத்தாலி நிறுவனமான அக்வாஃபில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், மறுசுழற்சி நைலானில் செய்யப்பட்ட உடைகளை சந்தையில் விற்கிறது. இதில் குப்பைகளாக எஞ்சுவதை மீன்பிடிக்கும் வலைகளாக மாற்றி விற்கிறது. அதற்கும் மேல் கழிவுகளாக மிஞ்சுவதை, உடைத்து இழைகளாக மாற்றுகிறது. இதைத்தான் இகோநைல் இழை என்கிறார்கள்.    இந்திய தலைநகரான டெல்லியில் ப்ளோனி என்ற நிறுவனம் இப்படி மறுசுழற்சி செய்த ஆடைகளை விற்கிறது. உலகில் ஃபேஷன் துறையில்தான் அதிகளவு நுகர்வு இருக்கிறத