இடுகைகள்

தண்டகாரண்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி, அரச பயங்கரவாதம் என இரண்டுக்கும் இடையில் உயிர்பிழைக்கப் போராடும் ஆதிவாசிகள்!

படம்
  வாழும் பிணங்களாகிவிட்ட ஆதிவாசி மக்களின் கதை மரணத்தின் கதை ஆசுதோஷ் பரத்வாஜ் தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பக்கம் 333. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், தண்டகாரண்யம் ஆகிய காட்டுப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எப்படி, மரணத்தின் கதையாக மாறியது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. இந்த நூல், அபுனைவு வகையைச் சேர்ந்தது. ஆனால் நூலை வாசிக்கும்போது அதை உணர முடியாது. புனைவு நூலின் மொழியில் அபுனைவு நூல் என புரிந்துகொள்ளுங்கள். தமிழில் அரவிந்தன் நூலை சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். ஆசுதோஷ் பரத்வாஜ், நேரடியாக களத்திற்கு சென்று செய்திக்கட்டுரைகளை எழுதி அனுப்பி பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு,  ஏராளமான வெளிநாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், நூல்களை சுட்டிக்காட்டி கட்டுரை நூலாக தொகுத்து எழுதியிருக்கிறார். அதுவே நூலுக்கு தனித்த தன்மையை அளிக்கிறது. 2000 தொடங்கி 2021 வரை ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். இவர் ஒரு பத்திரிகையாளர் என்றாலும் அதில் நடைபெறும் செயல்கள், துரோகங்கள், நக்சல் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகள், கிராமத்து செய்தியாளர்...

சுயநலமான மனிதர்கள், சமூகம், அரசியல்வாதிகளால் சுரண்டப்படும் உள்நாட்டு அகதியின் வாழ்க்கை!

படம்
        மனோரஞ்சன் பியாபாரி, எழுத்தாளர்     இன்ட்ரோகேட்டிங் மை சந்தால் லைஃப் மனோரஞ்சன் பியாபாரி சிறுவயதில் தான் பிறந்தவுடனே தனது நாக்கில் வைக்க வீட்டில் தேன் இல்லை என்று மனோரஞ்சன் கூறுகிறார் . அப்படி இனிப்பு வைக்கப்படும் குழந்தைக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை . நூலில் இந்த பகுதியை படிப்பவர்களுக்கு இது பெரிதானதாக தோன்றாது . ஆனால் மனோரஞ்சனின் வாழ்க்கை மோசமாகவே அமைகிறது . இனிப்பு என்ற சுவையே உண்ணாதவன் , அறியாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும் ? இவரது வாழ்க்கையும் அப்படித்தான் . இந்த சுயசரிதை பலரையும் அச்சப்படுத்தக்கூடியது . பீதியூட்டக்கூடியது . அந்தளவு சாதியால் , துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர் . மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மனோரஞ்சன் . இன்று அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார் . ஆனால் அவரது தொடக்க , மத்தியகால கட்ட வாழ்க்கை என்பது புழுத்த நாய் குறுக்கே போகாது என வசைபாடுவதைப் பற்றி தி . ஜா கூறுவார் . அதைப்போலத்தான் உள்ளது . அந்தளவு நெருக்கடிகள் . வறுமை , வேலை செய்து சம்பளம் கிடைக்காதது , ரயில்வே ஸ்டேஷனி...