இடுகைகள்

மனப்பதற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் தேங்கியுள்ள மோசமான மனநல குறைபாட்டை, பதற்றத்தை தணிக்கும் உளவியல் சிகிச்சை முறை - ஜோசப் வோல்பே

படம்
  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் ஜோசப் வோல்பே. விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு ராணுவத்தில்சேர்ந்து பிடிஎஸ்டி குறைபாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இந்த குறைபாட்டை அப்போது வார் நியூரோசிஸ் என்று அழைத்தனர். நோயின் அறிகுறியை அறியாமல் மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க முயன்றார். இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பிறகு 1960ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு டெம்பிள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். குண இயல்பு சார்ந்த சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி எண்பத்திரெண்டு வயது வரையில் இயங்கினார். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.  முக்கியமான படைப்புகள்  1958 psychology by reciprocal inhibition 1969 practice of behavioral therapy 1988 life without fear இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல உளவியலாளர்களும் பிராய்ட் கூறிய மனப்பகுப்பாய்வு சார்ந்தவற்றில்தான் இயங்கினர். ஆழ்மனதில் உள்ள முரணான சக்திகளால் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்று கருதி வந்தனர். ஆழ்மனத்தில் உள்ள தன்ன

ஒலி என்ன செய்யும் தெரியுமா?

படம்
giphy.com சத்தம் என்ன செய்யும் என்பீர்கள். ஆனால் ஸ்லேட்டில் சாக்பீஸ் எழுதும் ஓசை, குழந்தை அழும் ஓசை ஆகியவை காது கூதும் ஓசைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரயிலில் கால் சிக்கும்போதும், குழந்தைகள் பசியில் அழும்போது வீறிட்டு அழுவதையும் நாம் குறை சொல்லப் போவதில்லை. இந்த ஒலிகள் ஏன் நமக்கு காது கூசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி மட்டுமே நான் பேச வருகிறேன். கரண்டியால் பீங்கான் டம்ளர்களில் மோதுவது மோசமான ஒலிகளில் ஒன்று. நம் காதுகளின் அமைப்பு குறிப்பிட்ட ஒழுங்கமைந்த ஒலிகளுக்கு பழகிவிடுகிறது. ஆனால் திடீரென ஒழுங்கற்ற ஏற்படும் விபத்து, கட்டிட உடைப்பு போன்ற ஒலிகளுக்கு காதுகள் இன்னும் பழக்கப்படவில்லை. காதுகளின் ஒலிஅளவுத் திறன் 2000 ஹெர்ட்ஸ் முதல் 4000 ஹெர்ட்ஸ்கள் வரை. பொதுவாக ஒலிகளை நீங்கள் கண்டுகொண்டாலும், பரவாயில்லை என சகித்துக்கொண்டாலும் அவை உளநிலையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பதற்றம், எரிச்சல், நிதானமிழப்பு, தூக்கமின்மை ஆகியவற்றை ஒளியை விட ஒலி எளிதில் ஏற்படுத்திவிடும். 2012 ஆம் ஆண்டு இதுபற்றி செய்த ஆய்வில் 74பேர் பங்கேற்றனர். இதில் பல்வேற