இடுகைகள்

சாலி சலான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம்- சாலி சலான்

அசுரகுலம் -  சேலி சலான் சேலி சலான் ஒன்றும் செய்யவில்லை. கணவரை சுத்தியால் இருபதுமுறை தலையில் அடித்து கொன்றார். அப்புறம் குற்ற உணர்வு தாங்காமல் தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீஸ் அவரை கைது செய்தது. அவருக்கு மனநிலை பிரச்னை உள்ளதா என்று சோதித்தது. இறுதியில் தந்தையைக் கொன்றதைக் கண்டுகொள்ளாமல் அவரது மகன்களே தாயை பிணையில் எடுக்க முயற்சித்தனர். நடந்தது என்ன? சாலி தன் பதினைந்து வயதில் 22 வயதான ரிச்சர்டைச் சந்தித்தார். பேசினார்கள், பழகினார்கள். உள்ளம் கலந்தால் அப்புறம் என்ன அச்சம்? திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பிள்ளைகளும் தாம்பத்திய சந்தோஷத்தின் அடையாளமாக கிடைத்தார்கள். 31 ஆண்டுகள் ஆனபிறகு கருத்து வேறுபாடு ஏற்பட ஓராண்டு இருவரும் பிரிந்து இருந்தனர். பின்னர் சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவங்களை நான் உங்களுக்கு சொல்லுவது 2010 ஆண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது இருவரும் சாலியின் பெற்றோர் வீடு அருகே சந்தித்தனர். அந்த வீட்டை விற்றுவிட ரிச்சர்டு விரும்பினார். சாலியும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அந்த வீட்டில் தங்கிய ரிச்சர்டு மனைவியிடம் பன்றி இறைச்சியும் முட்டையும் சமைத்து