இடுகைகள்

அடையாளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவனத்திற்கு நிரந்

சீரியல் கொலைகாரரின் மகன் தனது கணவனா என சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி - ஃபிளவர் ஆப் ஈவில்

படம்
  ஃபிளவர் ஆஃப் ஈவில் - கே டிராமா லீ காங் ஜி - மூன் சே வோன் - ஃபிளவர் ஆஃப் ஈவில் பிளவர் ஆஃப் ஈவில் கே டிராமா லீ காங் ஜி, மூன் சே வோன்   பே சியாங் என்பவர் தனது டிடெக்டிவ் மனைவி, மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பே சியாங்கிற்கு இரும்பு கைவினைப்பொருட்களை செய்வதுதான் வேலை. இந்த நேரத்தில், அவரை சந்திக்க டிவி நிருபர் வருகிறார். அவருக்கு பே சியாங்கின் கடந்த காலம் தெரியும். அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்குற்றம் பற்றி.. இதனால் நிருபவரை பே சியாங் தனது வீட்டில் கீழறையில் கட்டிப்போடுகிறார். இந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர், சீரியல் கொலைகாரர் டியோன் சிக் என்பவரின் முறையில் கொலையாகிறார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் இப்போது கொலைகளை செய்தவர், அவரின் மகன் டூ சூ என ஊடகம், காவல்துறை முடிவு செய்கிறது. பழைய வழக்குகளை கையில் எடுத்து குற்றவாளி டூவை தேடத் தொடங்குகிறது. உண்மையில் டூ சூ வழக்கை ஆராயும் டிடெக்டிவ் மனைவிற்கு, கொலைகளை செய்வது தனது கணவரோ என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவர் நள்ளிரவில் வெளியே சென்று வரும் நாளில்தான் கணவர் அணிந்துள்ள உடைபோல அணிந

தனிமையோ தனிமை - ஸிஸோய்ட் மனிதர்களின் அடையாளங்கள்

படம்
ராசிகளுக்கான பொதுபலன்களைப் போல் அல்லாமல் ஸிஸோய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் ஆட்களின் அறிகுறிகளைப் பார்ப்போமா? குடும்பம், அலுவலகம் என எங்குமே தனியாகத்தான் ஆவர்த்தனம் செய்வார்கள். இவர்களை குடும்ப நிகழ்ச்சி, சமூக குழு என எதிலும் ஒன்றாக சேர்க்க முடியாது. பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டார்கள். சமூக நிர்பந்தங்கள் அதிகரித்தால் வலியை மட்டும் உணர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள்.  காதலியுடன் வெளியே சுற்றுவது, டேட்டிங், மெழுகுவர்த்தியுடன் பாய் ஹோட்டலில் நெய்ச்சோறு என கனவுகண்டால் நடக்காது. திருமணம் செய்துகொள்வதிலும் ஆர்வம் இருக்காது. அப்படி வற்புறுத்தினாலும், உடலுறவு சார்ந்தும் பெரிய ஈடுபாடு இருக்காது. உணர்வுரீதியாக வற்றிப்போண கேணி போல இருப்பார்கள். எனவே, காதல், கல்யாணம் என பேசுவது நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி வேஸ்ட்தான்.  கடற்கரைக்கு செல்வது, அஸ்தமனச்சூரியன் பார்ப்பது, இனிப்புச்சோளத்தை நண்பனின் காசில் வாங்கி சப்பித் தின்பது என்பதை ஸிஸோய்ட் நோயாளிகள் விரும்பமாட்டார்கள். தங்களது உணர்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிக அரிது.  அப்படியென்றால் என்னதான் செய்வார்கள். அவர்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்கிக்க

மரங்களை அடையாளம் காணும் முறை!

படம்
  மறைந்திருக்கும் காடுகள்! பல்லாயிரக்கணக்கான மர இனங்கள், அறிவியலாளர்களால் இன்னும் அறியப்படாமல் உள்ளன.  மரங்களைப் பற்றிய பல்லுயிர்த்தன்மை ஆய்வுக்கட்டுரை , அறிவியல் இதழொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9,200 மர இனங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளது என கூறப்பட்டுள்ளது.  ”மரங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்வது கடினமான பணி. அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்தால் மட்டுமே வேறுபாடுகளை அறிய முடியும்”  என்றார் வேக் ஃபாரஸ்ட் சூழல் உயிரியலாளர் மைல்ஸ் சில்மன்.  புதிய ஆராய்ச்சியில் மரங்களை அடையாளம் காண இரு முறைகளைப் பின்பற்றியுள்ளனர். உலக காடுகள் பல்லுயிர்த்தன்மை திட்டம் மூலம், காடுகளில் உள்ள மர இனங்களை பதிவு செய்தனர். அடுத்து, ட்ரீசேஞ்ச் எனும் வழியில், தனியாக வளரும் மர இனங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இருமுறைகளிலும் சேர்த்து மொத்தமாக 64,100 மர இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆய்வில், 60 ஆயிரம் மரங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.  ”ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் கண்டறிய வேண்டிய மர இனங்களின் எண்ணிக்கை கூட குறைவுதான். 6 ஆயிரத்திற்கும் அதிகமான மர இனங்கள் நாம் இன்னும் அறியப்படாதவையாக இ

உடலை கீறி, துண்டாக நறுக்கி இன்பம் அனுபவித்த கொலைகாரர்கள்

படம்
        அடையாளம் , சடங்குகள் தனது மனதில் தோன்றும் கற்பனை , அதன் உந்துதலில் கிடைக்கும் வாய்ப்புகளால் ஒருவர் கொலை செய்கிறார் . அதேசமயம் ஏதாவது மெசேஜ் சொல்லியே ஆகவேண்டும் என யோசிக்கும் ஆட்களும் இந்தவகையில் உண்டு . இவர்கள் சாத்தானின் வடிவம் , கற்கள் , பேப்பர் என எதையாவது மடித்து கொலை செய்யப்பட்டவரின் உடலில் திணித்துவைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் . இவர்கள் , இதன் மூலம் காவல்துறைக்கு தங்களது அடையாளத்தை சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அடுத்து நடக்கும் கொலைகளையும் கூட ஒருவர் கண்டுபிடிக்கலாம் . இதெல்லாம் துப்பறியும் ஆட்களின் திறமையைப் பொறுத்தது . ஜோடியாக் கில்லர் என்பவர் வட்டம் வரைந்து அதில் சிலுவையை வரைந்து விட்டு சென்றார் . போஸ்டனைச் சேர்ந்த கொலைகாரர் பிறந்த நாள் ரிப்பன் வடிவத்தை வரைந்துவிட்டு செல்வது வழக்கம் . ராமிரெஸ் சாத்தானைக் குறிக்கும் அடையாளத்தை வரைந்தார் . க்ரீன் ரிவர் கில்லர் என்பவர் , பெண்களின் யோனியில் பிரமிட் வடிவ கற்களை திணித்து வைத்தார் . இப்படி வரைவது ஒருவகையில் இவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டவும் , ஊடகங்கள் நாயகர்களாக அல்லது தீய சக்தி என கூறப்படக்கூட காரண