இடுகைகள்

நீதிபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.  கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.  நன்றி! அன்பரசு  11.12.2021 ------------------ அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் ப

ஓராண்டிற்கு பிறகு பதவியை ஏற்றால் ஒப்புக்கொள்வீர்களா? ரஞ்சன் கோகய்

படம்
தேசபிமானி நேர்காணல் ரஞ்சன் கோகய், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் /வஜிரம்  அண்ட் ரவி   980 × 549 ரஞ்சன் கோகய், தனது நேர்மையான செயல்பாடுகளுக்காக கடந்த காலத்தில் பாராட்டப்பட்டவர். பின்னர், பாஜக அரசில் தலைமை நீதிபதியான பிறகு, அவரின் நேர்மையான செயல்பாடுகள் கேள்விக்குள்ளாயின. அவரின் மீது அவரது உதவியாளர் பாலியல் தொல்லை என்று வழக்கு தொடுத்தார். பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு அவரின் தலைமையிலான நீதிபதிகள் குழு அயோத்தி வழக்கில் பாஜக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பினை அளித்தது. தலைமை நீதிபதிக்காலம் முடிந்தபிறகு, பாஜக அரசு கோகய்க்கு ராஜயசபை உறுப்பினர் பதவியை அளித்து கௌரவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நீதியை குழிதோண்டி கோகய் புதைத்துவிட்டார் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி கோகய்யிடம் பேசினோம். தலைமை நீதிபதியாக இருந்தீர்கள். அந்த பதவியிலிருந்து விலகியதும் குடியரசுத்தலைவரின் பரிந்துரையில் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியைப் பெற்றிருக்கிறீர்களே ஏன்? அரசமைப்புச்சட்டம் 80படி, குடியரசுத்தலைவர் ராஜ்ய சபை பதவியை அளித்துள்ளார். நான் ஏன் மறுக்கவேண்டும்? நாட்டிற்