இடுகைகள்

மந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூஜை செய்வதும், மந்திரங்கள் ஓதுவதும் ஏற்படுத்தும் விளைவுகள்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் கல்லூரி முதல்வர் அதற்கு மறுக்கிறார். நான் அவர் கூறியதை மறுத்தால் நிறைய பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதேசமயம் நான் அவர் கூறியதைப் பின்பற்றினால், எனது இதயம் உடைந்துபோகும். இப்போது நான் என்ன செய்வது? நீங்கள் உங்களின் பிரச்னையான நிலையை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல நம்பிக்கை இல்லாத நிலையைப்   பற்றி கூறுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவரிடம் உங்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். நீங்கள் உங்களது நிலையைப் பற்றிக் கூறியும் கூட அவர்   தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவரிடம்தான் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அப்படி உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு கூட அவரிடம் சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் கண்டறிய வேண்டும். இங்கு இருதரப்பிலும் நம்பிக்கை தேவைப்படுகிறது. முதல்வர், மாணவரான நீங்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை வேண்டும்.   வாழ்க்கை என்பது ஒரு பக்கம் சார்ந்த உறவு கிடையாது. முதல்வர், மாணவர் என நீங்கள் இருவருமே மனிதர்கள். எனவே இருவருமே தவறு செய்ய வாய்ப்புள்ளவர்கள்தான

குழந்தைகளுக்கான வாசிக்க அற்புதமான மர்ம நூல்கள் !

படம்
  குழந்தைகளுக்கான நூல்கள்  பேட் கய்ஸ் ஆரோன் பிளாபே ஸ்காலஸ்டிக் பிரஸ் பதினைந்து புத்தகங்களைக் கொண்ட தொகுப்பு. அனைத்திலும் சுறா தான், குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்களைப் போல பேசி பல்வேறு குற்றங்களை கண்டறிந்து தவறை ஏற்க வைக்கிறது.  ஃபிரம் தி டெஸ்க் ஆஃப் ஜோ வாஷிங்டன்  ஜேன் மார்க்ஸ்  காத்தரின் டேகன் புக்ஸ்  12 வயது சிறுமி தன் தந்தை குற்றம் செய்யாதவர் என்பதை நிரூபிக்க என்னென்ன விஷயங்களை செய்கிறாள் என்பதே கதை. உணர்ச்சிகரமான சம்பவங்கள் நூலில் நிறையவே உள்ளன.  தி மேஜிக் மிஸ்ஃபிட்ஸ் நீல் பேட்ரிக் ஹாரிஸ்  ஓவியம் - லிஸி மர்லின், கைல் ஹில்டன் லிட்டில் ப்ரௌன் புக்ஸ் கார்டர் மற்றும் ஐந்த டீனேஜ் மந்திரவித்தை கலைஞர்கள் சேர்ந்து உலகின் பெரிய வைரத்தை கொள்ளையிலிருந்து எப்படி தப்புவிக்கிறார்கள் என்பதே கதை. நிறைய ஜோக்குகள், மந்திர வித்தைகள் என படிக்க சுவாரசியமான கதைகளைக் கொண்டுள்ள நூல் இது.  தி மிஸ்டீரியஸ் பெனடிக்ட் சொசைட்டி டிரென்டன் லீ ஸ்டீவர்ட் ஓவியம் - கார்சன் எல்ஸ்  லிட்டில் ப்ரௌன் புக்ஸ் ஆதரவற்ற சிறுவர்கள், தங்கள் பள்ளியில் முதல்வராக உள்ள தீய சக்தியை எப்படி துப்பறிகிறார்கள், அவர் செய்யும் செயல்க

புத்தகங்களை பாதுகாக்கும் பேசும் பூனை! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  பீஸ்ட்ஸ் ஆப் லிட்டில் லேண்ட் ஜூகியா கிம் ஒன்வேர்ல்ட் ரூ.499 1917 ஆம் ஆண்டு ஜேட் என்ற கொரியப் பெண், மிஸ் சில்வர் என்ற பெண்ணின் பள்ளிக்கு வேலைக்காக விற்கப்படுகிறாள். அதன்பிறகு கொரியாவில் ஜப்பானியப்படை போர்த் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்  ஜேட் என்ற பெண், ஜங் ஜோ என்ற இன்னுமொரு ஆதரவற்ற சிறுவனைப் பார்க்கிறாள். இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆனால் வாழ்க்கை ஒருகட்டத்தில் இருவரையும் எதிரெதிரான நிலையில் நிறுத்துகிறது.  தி கேட் ஹூ சேவ்டு புக்ஸ் சூசுகே நட்சுகாவா, ட்ரஸ் லூயிஸ் ஹீல் கவாய் பிகாடர் ரூ. 334 தாத்தா விட்டுப்போன புத்தக கடையை பேரன் நட்சுகி பார்த்துக்கொள்கிறார். கையில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது நூல்களை பாதுகாக்கும் பேசும் பூனை ஒன்றை சந்திக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்களைப் பற்றித்தான் நூல் பேசுகிறது.  அட்லஸ் சிக்ஸ் ஆலிவியா பிளாக் டோர் ரூ.699 ஒரு ரகசியமான இயக்கத்தில் சேர மாயமந்திரக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பாரம்பரியான இயக்கத்தில் சேருவது யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அதேசமயம்

கோப்ளின் அரசரின் மகளை மீட்கும் ஸ்கூபி டூ குழு! - ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்

படம்
                ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங் அனிமேஷன் படம் வார்னர் பிரதர்ஸ் - ஹன்னா பார்பரா இந்த படம் மாயாஜால மந்திரங்களைக் கொண்டது . கோப்ளின் அரசரின் மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் சக்தியைப் பெற்று அனைவரையும் அடக்கியாள நினைக்கும் மேஜிக் கலைஞரை எப்படி ஸ்கூபி டூ , சேகி தோற்கடிக்கிறது என்பதுதான் கதை .    இந்த கதையில் வெல்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டதால் முழுக்கதையையும் தங்கள் பாணியில் ரகளையாக நகர்த்திச்செல்வது ஸ்கூபி டூ மற்றும் சேகி இணைதான் . கோப்ளின் அரசரின் இளவரசி , தோற்றுப்போன மாய தந்திரக்கலைஞரை நையாண்டி செய்கிறது . அதனை பிடித்துவிட்ட அவர் , அதன் சக்தியை வைத்து பிற மந்திரப் பொருட்களை வயதான கலைஞர் ஒருவரிடமிருந்து பெறுகிறார் . குறிப்பிட்ட தினத்தில் கோப்ளின் அரசரையும் அவரது கூட்டத்தையும் உயிர்பெறச்செய்து , அவரின் கையில் உள்ள ஆயுதத்தைப் பெற்றால் உலகத்தை ஆள முடியும் என்பது மாய தந்திரக்கலைஞரின் பேராசை . இதனை படாதபாடுபட்டு அறியும் சேகி , ஸ்கூபிடூ இணை பூசணிக்காய் ஒன்றின் உதவியுடன் சூனியக்காரிகளை சந்திக்கின்றனர் . அவர்களின் பறக்கும் துடைப்பத்தைப்

சதியால் அக்காவை கொன்றவர்களை மறுபிறவி எடுத்து வந்து பழிதீர்க்கும் தங்கத் தம்பியின் கதை! அன்டேம்டு- சீன தொடர்

படம்
              அன்டேம்டு சீன தொடர் 51 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சதிக்குள்ளாகி தனது குடும்பத்தை தொலைத்த வீரன் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்து எதிரிகளை அடித்து நொறுக்குவதுதான் கதை . சீனாவில் புகழ்பெற்ற நடிகர்களாக வாங் யிபோ , ஷியாபோ ஷான் ஆகிய இருவர்தான் தொடரை பார்க்கவேண்டும் என ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் . இவர்களைச் சுற்றியுள்ள நட்பும் , அதைத்தாண்டிய நம்பிக்கையும் , பெண்களே பொறாமைப்படும் அழகும் தொடரை 2019 ஆம் ஆண்டின் முக்கியமான தொடராக மாற்றியுள்ளது . தொடர் தொடங்கும்போது மூ என்ற மூகமூடி அணிந்த ஒருவனின் உடலில் ஆவி ஒன்று அனுமதி கேட்டு நுழைகிறது . அதனை கண்டுபிடிக்கும் கோசு குல சீடர்கள் அதனை விரட்ட நினைக்கின்றனர் . மூவின் உடலில் ஏராளமான ரத்தக்காயங்கள் உள்ளன . அதனை குணமாக்க அதற்கு காரணமானவர்களை பழிவாங்கவேண்டும் . எனவே வே வூ ஷனின் ஆவி அதற்கான வேலையில் இறங்குகிறது . அப்போதுதான் சீடர்களின் பணிக்கு உதவியாக கோசு குலத்தைச் சேர்ந்த லான்சன் வருகிறான் . அவன் வேறு யாருமில்லை . இப்போது மூ உடலில் ஆவியாக வந்துள்ள வே வூ ஷனின் நெருக்க

போர்க்கலையைக் கற்ற பெண்ணை அலைகழிக்கும் ஆண்களை மையப்படுத்திய சீன சமூகம்! முலன் 2020

படம்
                முலன்    Director: Niki Caro Produced by: Chris Bender, Jake Weiner, Jason T. Reed Screenplay by: Rick Jaffa, Amanda Silver, Lauren Hynek, Elizabeth Martin ஆண்களுக்கு நிகரான தனது மூத்த பெண்ணுக்கு முன்னாள் போர் வீரர் பயிற்சி கொடுக்கிறார் . அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உயிர்சக்தி வலிமையாக உள்ளது . ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவள் பெண் என்பதற்காக அவமானப்படுத்துகிறார்கள் . இதனை எதிர்த்து அவள் எப்படி தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்துகிறாள் , தனது சுற்றியுள்ள உறவினர்களுக்கு தன்னை எப்படி புரிய வைக்கிறாள் என்பதுதான் படத்தின் மையக்கதை . படத்தை பார்ப்பவர்களுக்கு சீனத்தின் எப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை செக்சுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்பதே மனதில் ஓடும் . காரணம் , அந்த நாடு மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் பெண்களை அந்த காலத்தில் அப்படித்தான் ஒடுக்கினார்கள் . முலன் கோழியை எப்படி பஞ்சாரத்தில் அடைக்கிறாள் என்பதைக் காட்டும் காட்சியில் அவளது மன வலிமை , உடல் வலிமை , பெற்ற பயிற்சி என அனைத்தையும் காட்டி விடுகிறார்கள் .

பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009

படம்
      மேஜிக் ட்ரீ மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம். குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நின

சிவன் ஆடும் தாண்டவம்! - கோட்டயம் புஷ்பநாத் ஸ்பெஷல்!

படம்
தாண்டவம் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் ஹரி கிருஷ்ணன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனது அப்பா காசிக்கு போகும்முன்பு கொடுத்த ஓலைச்சுவடிகளை வாசிக்கிறான். அதில் எழிமலைக்காவு கோவில் பற்றி தகவல்கள் இருக்கின்றன. அங்கு போகவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது. அந்த ஊருக்குச் சென்றால் தங்குமிடம் கறையான்கள் அரித்துக் கிடக்கிறது. அங்கு சென்று மோகினிகளோடு சேர்ந்து துர் மந்திரவாதிகளோடு போரிட்டு தேவியை வெளியே கொண்டு வருவதுதான். கதை. ஸ்பெஷல் என்ன? கோபிகா, ஸ்ரீதேவிக்குட்டி, நாகவதி, விஷ்ணுப்பிரியா ஆகியோர்தான் ஹரி கிருஷ்ணனின் இன்ஸ்டன்ட் காதலிகள். இதில் நாகவதிக்கு இடம் அதிகம். நாகவதியும் பெண் கிடையாது என்பது ட்விஸ்ட். புஷ்பநாத் பொதுவாக சர்ச், லூசிபர் என்றால் கதையை மேலே நகர்த்த தடுமாறுகிறார். ஆனால் தறவாடு, கோவிலகம், பகவதி என்றால் கையில் கூடுதல் பலம் வருகிறது. மோகினிகள், பைசாச சக்திகள், கருடன், யட்சினி, தேவி ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி பரவசத்தைத் தருகிறார். இதில் ஹரிக்கு வில்லன்கள் அதிகம். அதேசமயம் ஹரி தன் செய்யும் உதவிக்கு பரிகாரமாக மோகினிகளின் பாலைப்பூ, தாமரைப்பூ

மாந்த்ரீகனுக்கு எதிராக காதல் மந்திரம் - கோட்டயம் புஷ்பநாத்தின் சூப்பர் நாவல்!

படம்
புத்தக விமர்சனம் காதல் மந்திரம் கோட்டயம் புஷ்பநாத்! தமிழில்: சிவன் உதயநல்லூர் என்ற ஊரில் நடக்கும் மாந்த்ரீகச்சண்டை. அங்கு அரண்மனையில் வாழும் கார்த்தியாயினி எனும் இளவரசிக்கும், பிரம்ம தத்தன் என்ற நம்பூதிரி வம்சத்திற்கு பழங்கால பகை உள்ளது. இளவரசி முந்நூறு ஆண்டுகளாக பிரம்ம தத்தனை பழிவாங்கி தேவியின் கையிலுள்ள ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நினைக்கிறாள். பிரம்ம த த்தனுக்கும் அதே ஆசைதான். ஆனால் அது நிறைவேறுவதற்கான வழி இளவரசிக்கு தெரியவில்லை. ஆனால் பிரம்ம த த்தன், இளம்பெண்களை பலியிட்டு அந்த வழியை சென்றடை முயற்சிக்கிறார். ஊரில் இருக்கும் பெண்களை பலாத்கார வல்லுறவு செய்து கொன்று துர்சக்திகளுக்கு பலியிடுகிறார். நாற்பது பெண்களை பலியிட்டால் நான் வில்லாதி வில்லன், மகா மாந்த்ரீகன் என கொக்கரிக்கிறார் பிரம்ம த த்தன். அவருக்கு தன்னார்வமாக வந்து உன்னைக் கொல்வேன் என்கிறார் கேசவன் குட்டி. ராகவன் குறுப்பு என்பவரின் மருமகன். நகரத்தில் படித்தவன். ஆச்சா? இனி கதையை நான் சொல்ல வேண்டுமா? அதேதான். பிரம்ம த த்தனின் மருமகளை கர்ப்பவதியாக்கி பிரம்ம த த்தனை கூண்டோடு பொலி போட்டு, தேவியிடம் ஆசிர்வாதம் வாங

அதிரவைக்கும் பழிக்குப்பழி - இது கோட்டயம் புஷ்பநாத் கோட்டா!

படம்
பிரம்ம ரட்சஸ் கோட்டயம் புஷ்பநாத் தமிழில் - சிவன் திருமகள் புத்தக நிலையம் தறவாட்டில் வாழும் ராஜ வம்ச பெண் கார்த்திகா அந்தர்ஜனம். அங்கு பணியாற்றும் வாசுதேவன் தம்பி, அவளை திருமணம் செய்வதாக கூறி சொத்துக்களை ஏமாற்றப் பார்க்கிறான். அதனை தேவி கார்த்திகாவிடம் கூறிவிட, அவள் அவனை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறாள். ஆனால் வாசுதேவன் தன் நண்பர்களுடன் எழுமாற்றூர் அரண்மனைக்குச் சென்று அவளை பலாத்காரம் செய்து கொல்கிறான். அவளது உடலை குளத்தில் மிதக்கவிடுகின்றனர். ஊரே வாசுதேவனின் செல்வாக்குக்கு முன்பு ஒன்றும் செய்யமுடியாமல் பதுங்குகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அல்லவா? வாசுதேவன் நல்ல வரும்படியான இடத்தில் கல்யாணம் முடிக்கிறார். அதற்காக காத்திருந்த கார்த்திகா, பிரம்ம ரட்சஸாக எழுந்து வாசுதேவனை பழிவாங்க புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எழுகிறார். அவர் ஆடும் ரிவென்ஞ் ஆட்டம்தான் பிரம்ம ரட்சஸ். காதல், துரோகம், பேராசை, நிரம்ப காமம் என அனைத்துமே இதில் உண்டு. தன் பழிக்குப்பழி வாங்குவதற்கு திருமேனி ஒருவர் தேவை என கார்த்திகா உணரும்போது அங்கு மாந்த்ரீகம் கற்க வருகிறார் விஜயதேவன். முதலில்