இடுகைகள்

பரிசோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி பேசுகிறார்கள் . ஆனால் ரகுராம் சற்று மன

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

முழங்காலில் வழியாக உடலெங்கும் பாயும் மின்சாரம்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  அம்மா மற்றும் தங்களின் நலம் நாடுகிறேன். இந்த வாரம் நோய்களின் வாரம் என்றே சொல்லவேண்டும். ஆண்டுக்காக கண் பரிசோதனைக்கு ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அங்குள்ள உதி அறக்கட்டளை நடத்தும் உதி மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சோதனை செய்து வருகிறேன். கண்கள் வறண்டு வருகிறது. சில ஆண்டுகளில் காட்சியைப் பார்க்கும்போது மின்னல் வெட்டு, கரும்புள்ளி தோன்றினால் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் ஷெரின் ரவீந்திரன் கூறினார். இதில் பெண் மருத்துவரான அன்பரசி கூறியதும் சோதித்ததும் எனக்கு திருப்தியாக இல்லை. இவர் மருத்துவமனையில் உள்ள லேசிக், கான்டாக்ட் லென்ஸ் திட்டங்களை ஒப்பித்தார். மற்றபடி கண்களில் உள்ள பவர், மூன்று ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது.  மருத்துவமனை போய்விட்டு வரும்போது எங்கு கால்களை ஊன்றினேனோ, கால் தசை பிசகிவிட்டது. முழங்காலில் மின்சாரம் பாய்வது போன்று வலி கடுமையாக இருக்கிறது. ஆபீசிற்கு காலை நொண்டிக்கொண்டுதான் சென்று வந்தேன். மயிலாப்பூரில் உள்ள சம்பத் மருத்துவமனைக்கு சென்றேன். வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். மரு

2020 ஆம் ஆண்டின் பரிசோதனை முயற்சி படங்கள்! - ஓடிடியை சுவாரசியப்படுத்தும் புதிய இயக்குநர்கள்

படம்
              ஓடிடியாகட்டும் சினிமாவாகட்டும் சோதனை முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும் . இந்த படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஐடியாரீதியாக நிறைய முயற்சிகள் செய்திருப்பார்கள் . இன்று ஓடிடி தளம் இதற்கான வாய்ப்பாக உள்ளது . அப்படி வந்த படங்களைப் பார்ப்போம் . கார்கோ இறந்துபோனவர்களை திரும்ப பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை நாயகன் செய்துவருகிறார் . அவருக்கு உதவும் உதவியாளர் கூட அப்படி பூமிக்கு வந்தவர்தான் . பட்ஜெட் குறைவுதான் என்றாலும் அறிவியல் கான்செப்டிக் இந்திய புராண சமாச்சாரங்களை கலக்கி சிறப்பாக செய்திருக்கிறார்கள் . விக்ரம் மாசே , சுவேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் வேண்டாம் என தூக்கியெறிந்தவைதான் . அதையெல்லாம் கவலைப்படாமல் படத்தைப் பார்த்தால் ரசிக்கலாம் . டைஸ் பிஜய் நம்பியார் இதற்கு முன்னர் எடுத்த படங்கள் எப்படியோ அப்படித்தான் இந்தபடமும் . புல்கித் சாம்ராட் , ஹர்ஸ்வர்த்தன் ரானே ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள்தான் படம் . படத்தின் இசை , காட்சிக்கோப்பு என அனைத்துமே பரிசோதனை முயற்சிதான் . படத

வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!

படம்
pixabay அகஸ்டோ போல் மார்ச் 16,1931 பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார். தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16,1995 இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நோர்பட் இல்லியக்ஸ் மார்ச் 17, 1806 நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார். ரிச்சர்ட் பி ஸ்ட்ராங் மார்ச் 18, 1872 அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள