இடுகைகள்

ஈராக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

படம்
  நாடியா முராத் nadia murad நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.  2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார்.  2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார். நியூயார்க் டை

ஈரானின் வெளிநாட்டு படைகளை வழிநடத்தியவர் க்வாசிம் சோலெய்மானி!

படம்
the print ஈரான் படைத்தலைவர் க்வாசிம் சோலெய்மானி, பாக்தாத் விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளார். கார் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் கார் முழுவதும் எரிந்துபோனது. சொக்கப்பனையாக எரிந்து உயிரை விட்ட இவரது இடத்தில் இவருக்கு அடுத்தபணி நிலையில் இருந்த இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடை அச்சுறுத்தல்களையும் தாங்கி நின்ற நம்பிக்கையான ஆளுமை இவர். சிரியாவில் அதிபர் பசார் ஆசாத்தின் பின்னே ஈரானின் படைகள் நின்றதால், அமெரிக்க படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து  வந்தன. 1980இல் ஈராக்குடன் நடந்த இஸ்லாமிய குடியரசு தொடர்பான போர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் க்வாசிம் சோலெய்மானி. 2003ஆம் ஆண்டு வரை க்வாசிம் யாருக்கும் தெரியாமல் தன் உத்தரவுகளை இட்டு ஏராளமான அமெரிக்கர்களை கொன்று கொண்டிருந்தனர். பின்னர்தான் அமெரிக்க உளவுப்படை, க்வாசிமை முக்கியமான தளபதி என அடையாளம் கண்டு அவரை கொல்வதற்கான முன்தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டது. அரசியலுக்கு பலரும் இவரை அழைத்தனர். ஆனால் தனக்கு ராணுவ விஷயங்களே போதும் என்று

நாயைப் போல இறந்தார் ஐஎஸ் தீவிரவாதித் தலைவர் அல் பக்தாதி!

படம்
புஷ் சதாமை ஒழித்தார். பாரக் ஒபாமா, பின்லேடனை தீர்த்து கட்டினார். இந்த வரிசையில் டிரம்ப், அல் பக்தாதியை நாயைப்போல சுட்டு கொன்றிருக்கிறார். நாய் வார்த்தை நாம் கூறியதல்ல. டிரம்பே தன் ஸ்டைலில் சொன்ன வார்த்தை. ஞாயிற்றுக்கிழமை. நாம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த போது, 8 அமெரிக்க  விமானங்கள் ஈராக்கின் விமானத்தளத்திலிருந்து கிளம்பின. அவை நேராக சிரியாவை நோக்கி சென்றன. 70 நிமிஷ பயணத்தில் மேற்கு சிரியாவிலுள்ள பாரிஷா எனுமிடத்தை அடைந்தன. டெல்டா ஃபோர்ஸ் படையின் ஆதரவுடன் அமெரிக்க விமானங்கள் பக்தாதி பதுங்கியிருந்த இடத்தை நோக்கி தாக்கத் தொடங்கின. கமாண்டோக்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அல் பக்தாதி தன் மூன்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தரைக்கு கீழே இருந்த பதுங்குமிடத்திற்கு சென்றார். அவர் தற்கொலை குண்டுகளைக் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கிறாரோ என கமாண்டோக்கள் அஞ்சினர். இதனை அறிய  ராணுவ நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறுதியில் தப்பிக்க முடியாத பக்தாதி, குண்டுகளை வெடிக்க வைத்து தன் மகன்களோடு தற்கொலை செய்துகொண்டார். அல் பக்தாதி கொலைத் திட்டத்திற்

ஈராக் -2 போர் தொடக்கமா?

படம்
அமெரிக்கா - ஈரான் போரா, வணிகமா? அமெரிக்கா தொடர்ந்து எண்ணெய் வளத்திற்காக மத்தியகிழக்கு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ஈராக்குடன் நடந்த போரின் தொடக்க காலப்போக்கை நினைவுப்படுத்துவதாகவே ஈரானுடன் நடக்கும் வார்த்தை யுத்தங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்டகனில் ஈராக்கிலிருந்து ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை டொனால்டு ரம்ஸ்ஃபீல்டு பத்திரிகையாளர்களிடம் வார்த்தை விளையாட்டு மூலம் தெரிவித்தார். இப்போது ஈரானுடனான அணு ஒப்பந்தம் கைவிடல் ஆகியவையும் ஈராக் -2 ரகத்தில் அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கிரெய்க் தியல்மன் கூறுகிறார். இது பற்றி காங்கிரசில் விவாதிக்காமல் எப்படி அரசு முடிவெடுக்க முடியும என்று கேட்கும் இவரது கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, ட்ரம்ப் உடனே மறுப்பு தெரிவித்தார். அது போலிச்செய்தி. அவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை நாங்கள் ஈராக்குக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். எங்களுக்கு அப்படியொரு திட்டம் இல்லை. அனுப்புவதாக இருந்தாலும் இன்னும் அதிக படையி