இடுகைகள்

சைக்கோ டைரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோ டைரி நூல் வெளியீடு- தரவிறக்கும் முகவரி இதோ!

படம்
  பொதுவாக குற்றங்களை பற்றிய நூல்கள் தமிழில் குறைவு. உளவியல் சார்ந்த கோணத்தில் குற்றங்களை பார்ப்பது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கில நூல்கள், நாளிதழ் செய்திகள் ஆகியவற்றை தழுவியே நூல் எழுதப்பட்டுள்ளது. குற்றம், அதுதொடர்பான உணர்ச்சிகள், பின்விளைவுகள் ஆகியவற்றை பற்றிய மனதிற்குள் எழும் ஏராளமான கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கும் என நம்புகிறோம். நூலை தரவிறக்கி வாசியுங்கள்.  நூல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது. இதனை வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. மற்றபடி நூலை படிக்கலாம் பகிரலாம் பரவசமாகலாம்.  சைக்கோ டைரி நூலின் பிடிஎப் முகவரி https://www.mediafire.com/file/83wrallx78g3ipc/psycho_diary_boo k_pdf.pdf/file மொபி கோப்பை தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/v1qrnxr9shsk5ol/psycho_diary.mobi/file இபப் கோப்பைத் தரவிறக்கும் முகவரி https://www.mediafire.com/file/7o6kxokcqvxgl15/psycho_diary.epub/file கோமாளிமேடை டீம் 

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்

இலவச மின்னூல் அறிவிப்பு - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ கொலைகாரர்கள், சீரியல் கொலைகாரர்கள் பற்றி நமது மனதிற்குள் நிறைய கேள்விகள் இருக்கும். கூடவே எப்படி அவர்களின் மனநிலை இப்படி குரூரமாக வன்ம மாக மாறியது என தெரிந்துகொள்ளும் ஆவலும் இருக்கும். அதற்கான பதில்களை இந்த நூல் அளிக்கும். விரைவில் இலவச நூலாக வெளியிடப்படும் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! கோமாளிமேடை டீம் 

வீட்டை கொலைசெய்த பெண்களின் உடல் உறுப்புகளால் அலங்கரித்த கொலைகாரர்

படம்
  மோசமான கொலைகாரர் ஜெப்ரி டாமரை இப்படி கூறலாம். இவரைப் பார்க்கும் யாரும் கொலைகளை இந்தளவு கொடூரமாக செய்திருப்பாரா என்று கூறவே முடியாது. ஒருவரைக் கொன்று பிறகு அவர்களோடு உடலுறவு செய்வது இவரது வழக்கம். கூடுதலாக உடல் உறுப்புகளை வெட்டி சாப்பிடுவது, அதனை குறிப்பிட்ட வகையில் ஜி.வெங்கட்ராம் புகைப்படம் போல அழகுபடுத்தி வைப்பது ஆகியவற்றை செய்திருக்கிறார்.  இவருக்கு அடுத்து இன்னொருவரைக் கூறலாம் என்றால் நேராக ஜப்பானுக்கு போக வேண்டும். அங்கு வாழ்ந்த இசெய் சகவா முக்கியமான கொலைகார ர். இவர் பிரெஞ்சு பெண்ணை கொலை செய்து அவரது முழு உடலையும் மெல்ல உணவாக்கி சாப்பிட்டார். பிறகு சாப்பிட்ட அனுபவத்தை நூலாக எழுதி மக்களுக்கு கொடுத்தார். எதற்கு.. யான் பெற்ற இன்பத்தை... அதேதான். இதற்காக அரசு இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. வெளியே வந்தவர் ஏதாவது குற்றங்கள் செய்தாரா என்பது தெரியவில்லை.  வெறுக்க கூடிய கொலைகாரர் கார்ல் பன்ஸ்ராம். இவர் நான் கொலை செய்ய நினைப்பவர்களை கொல்வதுதான் திருப்தி தருகிறது. ஒட்டுமொத்த மனித இனத்தையே நான் வெறுக்கிறேன். கொள்ளை, கொலை, அழிப்பது, கொல்வது என்பதை நான் செய்ய நினைக்கிறேன். நான

குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?

படம்
குற்றங்களை ஆவணப்படுத்துதல் குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.   ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன்

குற்றங்களை எப்படி தடுப்பது?

படம்
  பெண்கள் குற்றங்களை ஆவணப்படுத்துபவராக செயல்பட முடியுமா? ஏன் முடியாது. செய்யும் வேலை என்னவென்று ஒருவருக்கு தெரிந்துவிட்டால் போதுமானது. இதில் ஆண், பெண் என தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. முதலிலேயே கூறியதுபோல இது குற்றம் தொடர்பான வேலை. இங்கு தனிப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை கவனித்து அடிப்படையான மனிதர்களின் குணங்களை பார்ப்பது முக்கியமானது.  குற்றவாளிகளுக்கு நெருக்கமாக... குற்றங்களை ஆவணப்படுத்துபவர் சிறைக்கு சென்று குற்றவாளிகளை நேர்காணல் செய்பவர். இப்படி பலமுறை அவர் குற்றவாளிகளை சந்தித்ததால், அவர் அவர்களின் நண்பராகிவிடுவாரா என்ன? உடனே மயிலை பிரியாணியில் பிரியாணியும், அஸ்மா மெஸ்சில் பத்து ரூபாய் பிரிஞ்சியும் சாப்பிட்டு நெருக்கமாகி பீச்சுக்கு கால்நடையாக நடந்துசெல்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.  இருவரும் சந்திக்கும்போது சிறைக்கம்பிகள் இருப்பது போலவே, நேரில் சந்தித்தாலும் இடைவெளி இருக்கும். குற்றவாளியின் மனநிலை, அவர் அடுத்து என்ன செய்வார், எப்படி யோசிப்பார் என்பது வரையிலான விஷயங்களை குற்றங்களை ஆவணப்படுத்துபவர்

ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும்.  வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது.  ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா அப்படி ஒரு சக்தியை குற்றங்களை ஆவ

குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார்.  அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.  தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்? குற்றங்களை செய்யும் மனம் குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சே

கொலைகாரர்கள் மீது வரும் காதல்!

படம்
  கொலையை நிறுத்த முடியுமா? அதற்கு வாய்ப்பு குறைவு. ஒருமுறை கொலைகளை கற்பனை செய்து செய்யத் தொடங்கினால் அதனை நிறுத்துவது கடினம். கொலையாளிகளுக்கு உடல்நலக்குறைவு, சிறைக்கு செல்வது, வாய்ப்பு கிடைக்காத து என சில காரணங்கள் மட்டுமே கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.  கொலைகளை செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. கொலைகளை திட்டமிட்டு செய்துவிட்டு உடலை மிகச்சரியாக மறைத்து வைக்க வேண்டும். தடயங்களை அழிக்க வேண்டும். வல்லுறவு செய்து பெண்களை உயிரோடு விடுவதிலும் சிக்கல் உள்ளது. அவர் எங்காவது சென்று உண்மையைச் சொன்னால் உப்புக்கண்டம் போட்டுவிடுவார்களே! இதனால்தான் பெரும்பாலும் வல்லுறவு செய்த பெண்களை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம்மைப் பற்றி புகார் கொடுத்துவிடுவாளோ என்று எவ்வளவு நேரம் பயத்திலேயே வாழ்வது சொல்லுங்கள். இதனையும் சீரியல் கொலைகார ர்கள் யோசிக்கிறார்கள். இப்படி ஐன்ஸ்டீன் அளவுக்கு யோசிக்கும்போது கொலையின் இடைவெளி கூடலாம்.  கொலைகாரர்கள் மீது வரும் காதல் உலகமே வெறுக்கும் ஆண்களைக் கூட சில பெண்களுக்கு பிடித்துவிடுகிறது. எப்படி என்று பலருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி

குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?

படம்
  குற்றங்களின் விவரிப்பு கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.  ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.  விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது

சீரியல் கொலைகாரர்கள் புத்தகம் எழுதுவது இதற்காகத்தான்!

படம்
  குற்றவுணர்ச்சி  சீரியல் கொலைகார ர்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது குற்றவுணர்ச்சி பற்றி கேட்டால் என்ன சொல்வது? குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அவர்களின் மூளையில் தேய்ந்துபோயிருக்கும். காவல்துறையில் பிடிபட்டு தூக்கு தண்டனை கொடுக்கும்போது மட்டுமே இனிமேல் கொலைகள் செய்ய முடியாது என கர்த்தரே, பாலாஜி, அல்லா என அலறுவார்கள். ஆனால் சாட்சிகள் கான்க்ரீட்டாக இருந்தால் என்ன செய்வது? உறுதியாக சாவுதான்.  மன்னிப்பு கூட கேட்கமாட்டார்களா என்றால் அதுவும் கூட கிடையாதுதான். அவர்கள் மன்னிப்பு கேட்பதே இன்னும் கொடூரமாக இருக்கும். உங்கள் மகள் இறக்கும்போது வலியாலும், பயத்தாலும் கத்தியது எனக்கு வேடிக்கையாக இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் மன்னிப்பாக ஏற்பீர்களா? குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விடுவார்கள். அந்தளவில் சிறைக்கு சென்றாலும் கூட நான்தான் அதனை செய்தேன் என்று ஏற்கமாட்டார்கள். அதனை கடவுள் வந்து கட்டளையாக செய்யச் சொன்னார் என புருடா விட்டு எரிச்சலை கிளப்புவார்கள். இதெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேசுவதுதான்.  புத்தக எழு

குற்றங்களை ஆவணப்படுத்துபவருக்கும் போலீசாருக்குமான வேறுபாடு!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துதல் காவல்துறை குழு, சிறந்த குழுவை கொண்டிருக்கவேண்டியது அவசியம். அதாவது, விருப்பு வெறுப்பு ஈகோ இல்லாமல் கொலை நடந்த இடத்தில் உள்ள விஷயங்களை காரண காரியத்தோடு ஆராயும் தன்மை  தேவை. அப்போதுதான் அவர்கள் குற்றங்களை ஆவணப்படுத்துவர் சொல்லும் தகவல்களை சரியாக உள்வாங்கி வேலை செய்யவேண்டும்.  குற்றங்களை ஆவணப்படுத்துபவர் பல்வேறு தகவல்களை சேகரிப்பார். அவற்றில் காவல்துறைக்கு எது பயன்படுமோ அதை மட்டுமே அவர்களுக்கு கோப்பாக எழுதி கொடுப்பார். அதை வைத்து உடனே குற்றவாளியை  பிடித்து வந்துவிட முடியாது. காவல்குழு துடிப்பான ஆட்களை கொண்டிருந்தால் குற்றவாளியை செவுளிலேயே போட்டு இழுத்து வந்துவிட முடியும். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், கொலை, கொலைக்கான காரண காரியங்கள் ஆகியவற்றை வைத்து விசாரணைக்கு உதவும்படியான விஷயங்களை தொகுத்து வைத்திருப்பவர் என்று கூறலாம்.அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டே உடனே குற்றவாளியின் வீடு தேடி போலீஸ் பேட்ரோல் காரை அனுப்பி வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  குற்ற ஆவணப்படுத்தல் வல்லுநருக்கும் காவல்துறையினருக்குமான வேறுபாடு இன்ஸ்பெக்டர், குற்றங்களை ஆவணப்

கொலையாளியின் இடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்!

படம்
  ஒரு கொலையை சீரியல் கொலைகாரர் செய்துள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்..... மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க என ஹெக்கிமோக்ளு டிவி தொடரில் டாக்டர் அட்டீஸ் அடிக்கடி சொல்லுவார். அதே பஞ்ச்தான்.கொலை செய்யப்பட்டவர், கொலையான விதம், அதில் கிடைக்கும் தகவல்கள் என ஆராய்ந்து பார்த்துத்தான் முடிவுக்கு வரவேண்டும்.  இதனை சரியாக உணராமல் ஒருவர் முடிவெடுத்தால், கொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். போலீசாரும் வலையை வீசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். குற்றவாளியை பிடிப்பது கடினம்.  கொலைசெய்யப்பட்டவர் கூடுதல் போனஸாக வல்லுறவு செய்யப்பட்டிருந்தால் அதனை சீரியல் கொலைகார ர் செய்துள்ளார் என தீர்மானிக்கலாம். அல்லது கொல்லப்பட்டவரின் உடலில் ஏதாவது குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச்செல்லலாம். குறிப்பிட்ட காவல்நிலைய  எல்லை தாண்டிக் கூட இதுபோல கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். எனவே, வேறு காவல் நிலையங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களின் வரலாற்றையும் ஆராய வேண்டும். இதெல்லாம் சந்தேகத்தில்தான் செய்யவேண்டும். அடுத்த கொலை நடக்கும் வரை காத்திருந்தால் எளிதாக குற்றவாளியை பிடித்து விடலாம்.  கொலையாளியின் வசிப்ப

குற்றவாளியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது எப்படி?

படம்
  நீதி கிடைக்குமா? தனிப்பட்டவருக்கு, சமூகத்திற்கு என நீதி கிடைக்க கொலை வழக்குகளில் தாமதமாகும். குறிப்பிட்ட வழக்குக்கு என சில மாதங்களை ஒதுக்கி வேலை செய்வார்கள். மற்றபடி ஏராளமான வழக்குகள், குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது குறிப்பிட்ட வழக்கில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது கடினம். பா.ரா சொல்வது போல பல்வேறு வழக்குகளைக் கூட இன்ஸ்பெக்டர் கையாள முடியும். அந்த நேரத்தில் அந்த வழக்கு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பிறழ்வு , சாட்சிகளே இல்லாமல் இருப்பது, ஆதாரங்களில் அழிவது, பல்வேறு வழக்குகளை இணைத்து பார்க்காமல் வழக்குகளை பதிவது என நிறைய பிரச்னைகள் உள்ளன. குற்றவாளியைப் பற்றிய தடயங்கள் 1940-1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நியூயார்க் நகரத்தில் வெடிகுண்டு பீதி நிலவியது. அங்கு தி மேட் பாமர் என்ற மர்ம நபர், மரப்பெட்டியில் குண்டுகளை நிரப்பி கூடவே குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தார். காவல்துறை வேகமாக செயல்பட்டு குண்டுகளை வெடிப்பதற்கு முன்பே கையகப்படுத்தியது. குறிப்பில் கான் எடிசன் க்ரூக்ஸ் இது உனக்காகவே என்று எழுதியிருந்தது. இதில் ஒரு

கொலைகாரர்களை பின்தொடரும் உளவியல் சக்தி! -ரீலா? ரியலா?

படம்
  சாட்சிகளின் பிழை சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை சாட்சிகள் அதிகளவு பயன்பாடு கொண்டவர்கள் கிடையாது. யாராவது இதுபோன்ற லாரியைப் பார்த்தீர்களா என போலீசார் கொலைகார ர் ஒட்டி வந்த வண்டியைப் பற்றி கேட்பார்கள். அதற்கு நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அத்தனையும் ஒன்றுபோல பார்த்தேன் சார். ரிவார்டு எப்போ கொடுப்பீங்க என்றுதான் இருக்கும். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேர் லாரியைப் பார்த்திருப்பார்கள் என்ற லாஜிக் கேள்வியைக் கேட்டால் அனைத்து விஷயங்களும் அடிபட்டு போய்விடும்.  மேலும் கொலைகாரர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க சொன்னால், இதுபோல இப்படித்தான் இருந்திருக்கும் என குத்துமதிப்பான விஷயங்களை சொல்லுவார்கள். இதை வைத்து என்ன செய்வது? தந்தியில் செய்தியாளர்களை விட்டு குறிப்புகளை கொடுத்து கட்டுரை எழுத வைக்கலாம். அவ்வளவுதான்.  உளவியல் சக்தி தம்மண்ண செட்டியார் எழுதிய புத்தகத்தை கண்கள் சிவக்க படித்தவர் வேண்டுமானால் கீழ் வரும் விஷயத்தை நம்பலாம். வேறு யாரும் நம்ப மாட்டார்கள். உளவியல் சக்தி கொண்டவர்களை காவல்துறை சில சமயங்களில் பயன்படுத்துகிறது. இவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்த்து அமிதா பா  என மந்திர

பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது?

படம்
  குற்றத்தை ஒப்புக்கொள்ளுவார்களா? சாதாரணமாக நாம் செய்த தவறுகளைக் கூட ஈகோ பார்த்து நானா, செய்யவேயில்லையே என கூறுவோம். வேறுவழியின்றி அதனை நிரூபித்தால் இதற்காகத்தான் செய்தேன் என்று கூறுவதுதானே உலக வழக்கம். இந்தவகையில் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை குற்றம் செய்த உணர்ச்சிகள் இருக்காது. காவல்துறையினர் கடுமையாக முயற்சி செய்து தந்திரங்கள் செய்து அவர்களை விசாரணையால் மிரட்டலாம். அதில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தை உணர்ந்தால் அவர்களே நான் தான் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்வார்கள். அப்படியில்லாதபோது எளிதில் தங்களை காவல்துறையில் ஒப்படைக்க மறுப்பார்கள்.  என்னதான் குற்றங்களை செய்தாலும் கூட காவல்துறை அதில் பெரிய ஈடுபாடு எடுத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதபோது யாருக்குமே போரடிக்குமே? மேலும் சீரியல் கொலைகார ர்களுக்கு தாங்கள் செய்த பல்வேறு விஷயங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமென நினைப்பு வேறு இருக்கும். இதனால் காவல்துறையில் தானாகவே சரண்டர் ஆவது நடைபெறும். இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி பிரபலம் ஆன கதைகளும் உண்டு.  பொய் சொல்லச் சொல்லாதே ஒருவர் உண்மை பேசுகிறாரா, அல்

காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு!

படம்
  காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா? சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு.  ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர்  இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது.  இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆ

காவல்துறையை குழப்பும் கொலையாளிகள்!

படம்
  தடயமே இல்லாமல் கொல்! நீங்கள் எங்கு சென்றாலும் உங்களில் ஒரு பகுதியை பழைய இடத்தில் விட்டுச்செல்கிறீர்கள் என்று அழகான தியரி ஒன்றை  சொல்வார்கள். குற்றங்களைப் பொறுத்தவரை இந்த தியரி பொருந்தாது. கொலையாளி, கொலைக்கான திட்டமிடலை முன்னமே செய்துவிடுவதால், பெரியளவு ஆதாரங்கள் கொலை நடந்த இடத்தில் கிடைக்காது.  சீரியல் கொலைகார ர் தலை வழுக்கையாக இருக்கலாம். தொப்பி போட்டிருக்கலாம். கையில் க்ளவுஸ் இருக்கலாம். இதனால் முடியோ, கைரேகையோ கிடைக்காது. அவர் கொலை மட்டும்தான் செய்கிறார் என்றால் பிற சமாச்சாரங்கள் ஏதும் கிடைக்காது. வல்லுறவு செய்தாலும் கூட ஆணுறையைப் பயன்படுத்திவிட்டு அதனை சரியானபடி அவர் தூக்கியெறிந்திருக்கலாம். மேலும் கொலையின்போது அணிந்திருந்த உடையைக் கூட அவர் தீவைத்து கொளுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது.  குழப்ப குருமா காவல்துறையைப் பொறுத்தவரை அவர்களாகவே குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைப்பது என்பது அரிதானது. ஆனால் அதிலும் சின்சியராக உழைக்கும் அதிகாரி இருந்தால் என்ன செய்வது? இதனால் அவர்களை குழப்ப வேறு ஒருவரின் முடி, விந்தணு, ரத்தம் ஆகியவற்றை கொலை நடந்த இடத்தில் கலந்துவிட்டு

கொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ!

படம்
  சீரியல் கொலைகாரர்களை  பிடிக்க முடியாதா? பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை.  ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா? இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது.  இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்பவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந

கொலைகாரர்களிடம் குற்றவுணர்ச்சி இருக்குமா?

படம்
  கொலைக்கு முன்னும் பின்னும் கொலை செய்தபிறகு சீரியல் கொலைகார ர்கள் அதை நினைத்து வருந்துவார்கள். அவர்களின் உடல் எடை குறையும். ஜேக் டேனியலை சரண்டைவார்கள் என மென்மையான விக்ரமன் பட பார்வையாளர்கள் நினைப்பார்கள். உண்மை அப்படியல்ல. கஃபே ஃபிரெஷ்ஷில் ஃபிரெஞ்சு ஃபிரை ஆர்டர் செய்து கோக்கை சுவைத்தபடி சாப்பிடுவார்கள்.  கொலைக்கு முன்னிருந்த ஆவேசமும் இப்போது இருக்காது. அமைதியாக காணப்படுவார்கள். மற்றபடி ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் எம்எக்ஸ் பிளேயரில் வெப் சீரிஸ் பார்ப்பது, குழந்தைகளோடு விளையாடுவது என்பது போலத்தான் சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை இருக்கும். பெரிதாக கொலையை நினைத்து வருத்தமெல்லாம் படமாட்டார்கள். முதல் இரண்டு கொலைகளுக்கு சற்று பதற்றமான சூழலில் அவர்களின் உடல்மொழி இருக்கும். பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடுவார்கள்.  ஆதாரங்களை அழிக்கும் முயற்சி குற்றங்களை பிறர் பார்க்கும் வரை செய்யவேயில்லை என்று சாதிப்பவர்கள்தான் இங்கு அதிகம். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலைகளை செய்தாலும் கூட அவர்கள் தங்களை அங்கிருந்து தப்பிக்க வைக்கும் விஷயங்களை செய்வார்கள்.  கைரேகைகளை அழிப்பார்கள், தங்களது பொருட்க