இடுகைகள்

புவிசார் குறியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவிசார் குறியீடு வென்ற ஈரோடு

படம்
the hindu ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு இந்தியாவில் மகாராஷ்டிரம், தெலங்கானா, ஈரோடு ஆகிய மாநிலங்களில் பெருமளவு மஞ்சள் சாகுபடி ஆகிறது. ஈரோட்டில் தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, கோபிசெட்டி பாளையம், அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகள் ஈரோட்டில் மஞ்சள் விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. மாநில அரசு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது. ஏறத்தாழ 25 ஆயிரம் விவசாயிகள் மஞ்சள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது சரியான விலை கிடைக்காததால் அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. ஈரோட்டில் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி செலவிடும் தோராயத் தொகை 1.72 லட்சம். ஆனால் கிடைப்பது அதற்கும் குறைவு என்றால் எப்படி விவசாயம் செழிக்கும்? தெலங்கான, மகாராஷ்டிரத்தை விட உற்பத்திச் செலவு ஈரோட்டில் அதிகம். நன்றி: TOI