இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.

நீரிழிவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க போராடும் விஞ்ஞானி! லெஜண்ட் - சரவணன் அருள், ஊர்வசி, கீத்திகா திவாரி

படம்
  கோமானே பாடல் - கீத்திகா திவாரி சரவணன் அருள்- தி லெஜண்ட் The லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி, ஊர்வசி ராய்ட்டலா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் இசை – ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் – ஜேடி –ஜெர்ரி   உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி, சரவணன். இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் தனது பால்ய நண்பனின் இறப்பால், பிறப்பிலேயே தொடங்கும் நீரிழிவு நோயைக் குணமாக முயல்கிறார். இந்த ஆராய்ச்சியால் உலகளவில் உள்ள மருத்துவ மாஃபியாக்கள் எரிச்சலாக, சரவணின் கருவுற்ற மனைவி கொல்லப்படுகிறார். இதனால் உடைந்துபோன சரவணன் சோகத்திலிருந்து மீண்டு தனது எதிரிகளை கண்டுபிடித்தாரா, நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்தை உருவாக்கி உலகுக்கு அளித்தாரா என்பதே கதை. நீரிழிவு நோயின் வகைகள், அதில் பாதிக்கப்படும் நோயாளிகள் என கதையை அமைத்து, அதில் மருந்து கண்டுபிடிப்பது, தனது ஆராய்ச்சியை மக்களின் நலனுக்கு அர்ப்பணிப்பது என்ற சமூக கருத்தை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சி செய்து அதை ராயல்டி – ஆதாய உரிமைப்பணம் வாங்காமல் ஒரு நாட்டின் அரசுக்கு ஒப்படைப்பதைத்தான் சரவணன் படம் நெடுக சொல்கிறாரா என தெளிவாக புரிந்துகொள்ள ம

மாணவர்களுக்கு கல்வெட்டுகளைப் படிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

படம்
  ராமநாதபுரத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜகுரு. ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். அதோடு நிற்கவில்லை என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுவதன் காரணமே… கொஞ்சம் எக்ஸ்ட்ரா விஷயங்களை செய்தார். என்ன செய்தார்? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளை படிப்பதில், ராஜகுரு அதிக ஆர்வம் காட்டுகிற ஆள். இதை பிறருக்கும் சொல்லித் தந்து வருகிறார். ஹெரிடேஜ் கிளப்பில் செயலாளராக இருப்பவர், ராமனாதபுரம் தொல்பொருள் ஆராய்ச்சி பவுண்டேஷனின்   தலைவராகவும் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். இந்த பவுண்டேஷன், சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. திருப்புல்லானியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி பதிமூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் கட்டுமானம், அவர்களின் மொழி, ஆகியவற்றை காக்கும் நோக்கத்தில்   கிளப் பேரார்வம் காண்பித்து வருகிறது. தொல்பொருள் சான்றுகளைப் பற்றி அறிவதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களை ராஜகுரு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். இதன்மூலம், ஆண்டுக்கு 25 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். அதாவது, ஆண்டுக்க

இந்து, தமிழ் ஆகிய கலாசாரங்களின் அழகிய பக்கங்களைக் காட்டுகிறேன் - சுந்தர் வி, தனிக்குரல் கலைஞர்

படம்
  சுந்தர் வி தனிக்குரல் கலைஞர் சுந்தர் வி கனடாவின் டொரண்டோ, லண்டன் என அலைந்து திரிந்து மக்களை தனது ஜோக்குகளால் மகிழ்வித்து வருபவர். வி.சுந்தர். சென்னையில் வந்து நிகழ்ச்சிகள் செய்யும்போது அவர் தவறாமல் பார்வையாளர்களிடம் கேட்கும் கேள்வி, என் தமிழ் விளங்குதா என்பதான். தொண்ணூறுகள், இரண்டாயிரத்தின் பாடல்களை அடிப்படையாக கொண்ட நகைச்சுவையை தனிக்குரல் நிகழ்ச்சியின் மையமாக கொண்டுள்ளார். இவர் பால்புதுமையினராவார். கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்துள்ளார் வி.சுந்தர். மும்பை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரிடம் பேசினோம். இந்தியாவில் உங்களுடைய தனிக்குரல் நிகழ்ச்சி எப்படி செல்கிறது? நான் வேறுவகையான சூழல்களில் வளர்ந்து வந்தவன்.. ஆனால் தமிழ் இனக்குழுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளை நான் நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறேன். அந்த ஒற்றுமைகள்தான் எங்களை ஒன்றாக இணைக்கிறது. இதனால்தான் கனடாவில் இருந்து வந்து பால்புதுமையினர்களை ஒன்றாக இணைத்துப் பார்த்து கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் நிகழ்ச்சி செய்வது, அதற்கு வரும் எதிர்வினைகளை

பிறரது வாழ்க்கை அனுபவங்களின் வழியே துக்கத்தை மறக்கும் அகவயமானவனின் கதை! நித்தம் ஒரு வானம் -ரா கார்த்திக்

படம்
  நித்தம் ஒரு வானம் நித்தம் ஒரு வானம்  நித்தம் ஒரு வானம் இயக்கம் – ரா கார்த்திக் பாடல் – கோபி சுந்தர் பின்னணி தரண் குமார் பாடல்கள் கிருத்திகா நெல்சன் படத்தில் பாடல்கள் தனியாக தனியிசை ஆல்பம் போல இருக்கிறது. அதனால் அதை தனியாக நிதானமாக பாடல் வரிகளை அசைபோட்டு கேட்கலாம். அகவயமான இளைஞர் வாழ்க்கை, திருமணம் நின்றுபோனதால் எப்படி பிரச்னைகளுக்குள்ளாகிறது. அதை அவன் எப்படி எதிர்கொண்டு மீள்கிறான் என்பதே கதை. ஓசிடி உள்ள அதிகம் பேசாத ஆள். அவனுக்கும் காதல் வருகிறது. அவனை மணக்க பெண் சம்மதிக்கிறாள். ஆனால் அவளது காதல் மீண்டும் மனதிற்குள் வரும்போது என்னாகிறது? அர்ஜூனை விட்டு கல்யாணப் பெண் தனது முன்னாள் காதலனைத் தேடி செல்கிறாள். இந்த நேரத்தில் அர்ஜூன் கிடைத்த கல்யாண வாழ்க்கையும் கைவிட்டு போகிறது என நொந்துபோகிறான். அந்த மன அழுத்த த்திலிருந்து தப்ப உறவினரான மருத்துவரின் உதவியை நாடுகிறான். அவர் அவனுக்கு இரண்டு ஜோடியின் கதைகளைக் கொடுக்கிறார். அந்த கதைகளை படிக்கிறான். அதில் இறுதிப்பக்கங்கள் இல்லை. அதைத் தேடி மேற்குவங்கம், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கு பயணிக்கிறான். உண்மையை அவன் கண்டுபிடித

பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தந்திர இளைஞர் கூட்டத்தை தேடும் போலீஸ்காரர்! 100 - சாம் ஆண்டன்

படம்
  அதர்வா, ஹன்சிகா - 100 படத்தில் -இயக்கம் சாம் ஆண்டன் இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் அதர்வா 100 இயக்கம் சாம் ஆண்டன் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ஆடுகளம் நரேன், யோகிபாபு களத்தில் வேலை செய்ய நினைக்கும் நாயகனை கட்டுப்பாட்டு அறையில் உட்கார வைத்தால் என்னாகும் என்பதுதான் கதை.   காவல்துறையில் வேலை பார்க்க நினைக்கும் நாயகனுக்கு கிடைக்கும் வேலை என்னமோ கட்டுப்பாட்டு அறையில் அழைப்புகளை எடுத்து பேசுவதுதான். அந்த அழைப்புகளை வைத்து அவர் களத்தில் ரகசியமாக இறங்கி பெண்களை விபச்சாரத்தில் இறக்கும் இளைஞர் கூட்டத்தை பிடித்து, குற்றவாளியை கொல்கிறார். படம் தொடக்கம் முதலே ஆட்கள் காணாமல் போய் பிறகு கொலை செய்யப்பட்டு அந்த வழக்கு முடிந்ததாக காவல்நிலையத்தில் முடித்துவைக்கப்படும் காட்சியோடு தொடங்குகிறது. இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பெண்களை கடத்தி அதை காதல் போல நாடகமாடி அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த கதையில் கட்டுப்பாட்டு அறை, அதன் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கிறார்கள். அதுதானே படத்தின் தலைப்பு. படத்தில் வரும் காதலை வெட்டி எடுத்துவிட்டால் எந்த சேதாரமும் இல்லை.

வைரம் திருடிய சிறுமியைக் காக்க ஒன்று கூடும் பெண்கள் படை - ஹார்லி குயின் பேர்ட்ஸ் ஆப் பிரே - மார்கட் ராபி

படம்
  ஹார்லி குயின் – பேர்ட்ஸ் ஆப் பிரே தயாரிப்பு – நடிப்பு – மார்கட் ராபி தமிழ் டப் – ரசிகர்களின் டப்பிங்   இன்று குறிப்பிட்ட காமிக்ஸ் பாத்திரம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அதில் நடித்து புகழும் கிடைத்தால், பிறகு அந்த நடிகர் தானே தயாரிப்பாளராக அதே பாத்திரத்தை மேம்படுத்தி நடிக்கத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இப்போதைய ஆங்கிலப் படங்களின் டிரெண்ட். மார்வெல்லில் ரியான் ரெனால்ட்ஸ் அப்படித்தான் நடித்து வருகிறார். ஹார்லி குயின் படத்தில் மார்கட் ராபி தானே தயாரித்து கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். கதையில் பெரிய திருப்பம் என்று ஏதும் கிடையாது. படத்தில் ஹார்லியை முட்டாள் கோமாளியான ஜோக்கர், தன் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இதனால் மனமுடைந்து போன ஹார்ட்லி, டாக் என்பவரின் வீட்டில் அமைதியாக மறைந்து வாழ்கிறாள். மேலும் ஜோக்கரின் மீதுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதேசமயம், பார், பப் என சென்று அங்கிருப்பவர்களை எப்போதும் போல வம்புக்கு இழுக்கிறாள். இப்படியிருக்கும்   வாழ்வில்தான் சிறு திருட்டுகளை செய்யும் சிறுமி ஒருத்தி வருகிறாள். இவள் எதேச்சையாக பிக்பாக்கெட் அடிக்கும்போது

பழங்குடி மனிதன் குல்லுபாயை துரத்த அலையும் மாபியா குழு! குலு குலு - ரத்னகுமார்

படம்
  குலுகுலு சந்தானம், பிரதீப் ராவத், தீனா இசை சந்தோஷ் நாராயணன் இயக்கம் ரத்னகுமார் மதிமாறன் என்ற இளைஞன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வருகிறான். அவனுக்கு அப்பா தன் மீது பாசம் காட்டவில்லை என்று வருத்தம். இதனால் தான் கடத்தப்பட்டது போல நாடகமாடுகிறான். இதில், ஏற்படும் குளறுபடிகளால் மதிமாறனை இலங்கை தமிழ் ஆட்கள் கடத்திப் போகிறார்கள். இவர்களை மீட்க ஊருக்கே உதவி செய்யும் கூகுள் என்பவரை மதிமாறனின் நண்பர்கள் தேடிப்போகிறார்கள். அதேநேரம் டேவிட், ராபர்ட் என்ற மாபியா கும்பல், இறந்துபோன தந்தைக்கு பிறந்த பெண்ணை அதாவது அவர்களது தங்கையை தேடிப்பிடித்து கொல்ல  நினைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.   கூகுள் என்ற குல்லு பாய் ஆக சந்தானம் நடித்திருக்கிறார். படம் நெடுக அவல நகைச்சுவை அதிகம். அதில் பெரும்பகுதி குல்லு பாயின் செயல்களை ஒட்டித்தான் நடக்கிறது. அமேசான் மழைக்காட்டிலிருந்து வந்த பழங்குடி மனிதன். மொழியை தொலைத்துவிட்டு அந்த வருத்தம் தாளாமல் மதிமாறனின் நண்பர்களோடு அழுவது உருக்கமான காட்சி. பாடல்களில் எல்லாம் வெடிக்கும் நகைச்சுவை  இசைக்கு சந்தோஷ் நார

குழந்தை கடத்தலைத் தடுத்து அப்பாவின் களங்க கறையைத் துடைக்கும் மகன் - ட்ரிகர் - அதர்வா, தான்யா - சாம் ஆண்டன்

படம்
  ட்ரிகர் இயக்கம் சாம் ஆண்டன் நடிப்பு அதர்வா, தான்யா பாலச்சந்திரன், முனீஸ்காந்த், சின்னிஜெயந்த் இசை ஜிப்ரான்   அப்பாவின் கடந்த கால அவமானத்தை துடைக்கப் போராடும் மகனின் கதை. அல்சீமரால் அதர்வாவின் அப்பா அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் நினைவு எல்லாம் தான் ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த தகவல்கள் மட்டுமே. அதை மட்டுமே காகிதத்தில் கிறுக்கி சுவற்றில் மறக்கக் கூடாது என ஒட்டி வைத்திருக்கிறார். அதை அதர்வா பார்த்து அதில் உள்ள மர்மம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்கான வாய்ப்பு இயல்பாகவே அவருக்கு ஆயுதக்கடத்தல் மூலமாக கிடைக்கிறது. அந்த வழக்கை ஆராயும்போது அதர்வாவுக்கு வழக்கின் அடிப்படை விஷயமாக பேரல்லல் கிரைம் என்பது புரிய வருகிறது. இதை வைத்து வழக்கை எப்படி தீர்த்தார் என்பதே படம்.   வேகமாக காட்சிகள் நகரவேண்டிய படம். அதை ஒளிப்பதிவாளரும், சண்டைப்பயிற்சி கலைஞரான திலீப் சுப்பராயனும் புரிந்துகொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் சண்டைக்காட்சிகள் என வரும்போது   பார்ப்பவர்கள் வயிற்றில் அட்ரினலின்   சுரக்கிறது. சாம் ஆண்டனின் இயக்கத்தில் ஹ

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்

சர்ச்சையான விஷயங்களை கலந்து பேசுவோம் வாங்க! - வீனா பாட்காஸ்ட்

படம்
  வீனா பாட்காஸ்ட்  வீனா பாட்காஸ்டைக் கேட்கும்போது தோன்றுவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்ளும் முறைதான். அதில் ஒருவர் என்ன பெறுகிறார் என்பது கேட்பவரின் விருப்பம் சார்ந்தது.  வீனா பாட்காஸ்ட் ஐடியா சென்னையில் ஐடி வேலை பார்க்கும் வினுஷ்குமாரின் மூளையில்தான் உதித்திருக்கிறது. இவரும் இவரது நண்பரான நவீனும் போனிலேயே ஏராளமான விஷயங்களை பேசி தீர்த்திருக்கிறார்கள். இப்படி பேசுவதை நாம் ஏன் பாட்காஸ்ட் வழியாக செய்யக்கூடாது என யோசித்து 2020 இல் தொடங்கியதுதான் வீனா பாட்காஸ்ட்.  பொதுவாக, பொது இடங்களில் சில விஷயங்களைப் பேசக்கூடாது என நாம் நினைப்போம். சிலர் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட விஷயங்களைத் தேடி தேடி பேசுகிறார்கள் இரு நண்பர்களும். வினுஷ்குமார் சென்னையில் இருக்கிறார். நவீன் ஜெர்மனியில் வாழ்கிறார். இணையத்தில் கலந்துகொண்டு பாட்காஸ்ட் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள்.  வினுஷ்குமார், நவீன் பேசிய  இன்னும் யார் சார் சாதி பாக்குறா என்ற பாட்காஸ்டைக் கேட்டோம். அதில் வினுஷ்குமார், சாதி சார்ந்த தனது சொந்த அனுபவங்க

சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!

படம்
  pixabay 1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும்.  பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.  தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.  இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.  பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.  2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தலைப்பில் நூல்கள் விற்பனையில் இருந்த

குடல் புற்றுநோயை வென்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரி ஆடிய இரண்டாம் சுற்று! - இரண்டாம் சுற்று - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
  இரண்டாம் சுற்று -ஆர்.பாலகிருஷ்ணன் இரண்டாம் சுற்று ஆர். பாலகிருஷ்ணன் எஸ்ஆர்வி பதிப்பகம் இந்த நூலை எஸ்ஆர்வி பள்ளியின் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதன் பெயர் இரண்டாம் சுற்று என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. எழுத்தாளர், குடலில் புற்றுநோய் வந்து குணமான பிறகு நூலை எழுதியிருக்கிறார்.  ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறகுக்குள் வானம் போலவே இந்த நூலும் முக்கியமானது. மாணவர்களுக்கான நூல்தான். ஆனால் இம்முறை பணி சார்ந்த பல்வேறு ஆழமான அனுபவங்களை வாசகர்கள் படிக்க முடியும். நூலின் வடிவம் கட்டுரை, கவிதை என்று அமைந்துள்ளது.  இதில் ஒடிசா மாநிலத்திற்கு தேர்வாகி செல்வது, அங்கு தொலைதூர கிராமத்திற்கு செல்வதும், வளர்ச்சிப்பணிகளைப் பற்றிச்சொல்வது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நவடா என்ற கிராமத்திற்கு அரசு அதிகாரிகளே செல்லாதபோது, வளர்ச்சிப் பணிக்காக ஆர். பி அங்கு செல்கிறார். இதன் விளைவாக அந்த கிராமத்தினருக்கு கவனம் கிடைக்கிறது. பிந்தைய ஆண்டுகளில் வளர்ச்சிப் பணி காரணமாக மீண்டும், கிராமத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த கிராமத்தினருக்கும் அரசின் திட்டங்கள் மெல்ல சென்று சேருகின்றன.  சாலைத்திட்டங்கள், குடிநீர் வ