இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உடலைக் கிழித்து, எலும்பை உடைத்து இன்பம் அனுபவித்தால் சுகம்! - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவது எது? மிக்சிங்கிற்காக பயன்படுத்தும் பொடாரன் கம்பெனியின் பச்சை டிலோ என்று பதில் சொல்லக்கூடாது. அப்படி கலந்து குடித்தால் மகிழ்ச்சி. அதுதான் மகிழ்ச்சி என மனம் கற்பனை செய்கிறதே அதுதான். அந்த கற்பனைதான் வாழ்க்கை, வறட்டென காய்ந்த தேங்காய் நார் போல இழுத்தாலும் இசைவாக நம்மை வாழ வைக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் இறந்தகாலத்தின் சுவடுகள் உண்டு. அந்த அனுபவங்களை வைத்துத்தான் நிகழ்காலத்தை அணுகுகிறோம். இதை ஓஷோ, ஜேகே என அனைவருமே தவறு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அப்படி எளிதாக நினைவுகளை, கற்பனைகளை கழற்றி எறிவது சாத்தியமானதாக என்ன? சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் கற்பனை மகிழ்ச்சி குறைந்துபோய் லைவாக செய்யலாமே என நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஆசை என்பது படங்கள், காட்சிப்படம், மனிதர்கள் என தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது. காம வேட்கையுடன் ஒருவர் குற்றங்களை செய்யத் தொடங்கினால் காம கொலைகாரர்கள் வேட்டை ஆரம்பம் என தீர்மானித்துக்கொள்ளலாம். ராபர்ட் பாபி லாங். வயது 31. காகாசிய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு

சங்க கால பாடல்களை மாற்றி எழுதிய தமிழ் உரையாசிரியர்கள் - கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன்

படம்
  கெட்ட வார்த்தை பேசுவோம் பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 166 எழுத்தாளர் பெருமாள் முருகன் பா.மணி என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதனை முதலில் ஒரு சிற்றிதழில் எழுதி பிறகு காலச்சுவடு மூலம் நூலாகியிருக்கிறது. அதனால்தான் இந்த நூலை நாம் எளிதாக படிக்க முடிந்திருக்கிறது என்றும் கூறலாம். கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூல், தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் என கூறப்படும் பிறப்பு உறுப்புகள் பற்றிய சொற்களை எப்படி சங்க்காலம் முதல் இன்றுவரை மறைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது. அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்கள் அதன் பாடல் வடிவில் சரியாகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு உரை எழுதியவர்கள் வரலாற்று நினைவோடு பிற்கால மாணவர்கள் சமூகத்தினர் தம்மை எப்படி நினைவில் வைத்திருக்கவேண்டும் என யோசித்து அதை மாற்றினார்கள் என்பதை பெருமாள் முருகன் விவாதிக்கிறார். அத்தியாயத்தின் முடிவில் மேற்கோளாக காட்டப்பட்ட நூல்களையும் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் இந்தவகையில் ஒருவர் ஆய்வு செய்ய விரும்பினால் பணி எளிதாக இருக்கும். நூலில் அதிகம் பேசப்படுவது பெண்குறியாக அல்குல் சொல்லைப் பற்றித்தான். இதை பொருள

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை ம

முடிஞ்சா என்னைப் புடி என சவால் விட்ட ஜாக் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  முடிந்தால் என்னைப் பிடி இப்போது |ஜாக்கின் கதைக்கு வருவோம். மேற்சொன்ன கதைகள் எல்லாம் காவல்துறையினர் யாரேனும் புகார் மூலம் கண்டுபிடித்தவைதான். ஆனால் ஜாக்கைப் பொறுத்தவரை அவர் கொலை சம்பவங்களை சுவாரசியமாக செய்ததை உலகத்திலுள்ள 300 பத்திரிகைகள் பிரசுரித்தன. உண்மையில் இப்படி உலகம் முழுக்க தன்னைப் பற்றி விஷயங்கள் தெரியவேண்டுமென ஜாக் நினைத்திருக்கலாம். லண்டன் நகரத்தின் கிழக்கு புறத்தில் உள்ளது ஒயின்சேப்பல் பகுதி. இங்கு வெள்ளிக்கிழமை ஆக.31, 1888 அதிகாலை ஒரு மணி இருக்கலாம். பாலி நிக்கோலஸ் என்ற விலைமாதுப் பெண் ஜாக்கால் கொலை செய்யப்பட்டார். பாலியின் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த ஸ்கர்ட் கலைந்திருக்க, கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்தது. பெண் குறியில் கீறல்கள் இருந்தன. விலைமாது என்பதால் கொலை பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த கொலை ஒரு வாரத்திற்கு பிறகு காலையில் நடைபெற்றது. கொலையானவர் பெயர், அன்னி சாப்மேன். இவரது வயிறு கத்தியால் அறுக்கப்பட்டு குடல் இடது தோள் மேல் விழுந்து கிடந்தது. வயிறு, தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிறப்புறுப்பில

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல

எல்இடி விளக்கின் வரலாறு

படம்
  எல்இடி விளக்கு ஆற்றலை சேமிக்கும் விளக்கு -LED   விளக்கை யார் கண்டுபிடித்தது என ரூபி வாய்ப்பாட்டில் பார்த்தால் அன்றைக்கு அனைவரும் நம்பிய அறிவியலாளரான எடிசனைக் கூறுவார்கள். ஆனால் அவரே அவரது உதவியாளராக இருந்த நிகோலா டெஸ்லாவின் அறிவை பயன்படுத்தி துரோகம் செய்துதான் தன்னை நிலைநிறுத்தினார். இதற்கு எடிசன் கடைசிவரை பல்வேறு அரசியல் சதிகள் செய்துகொண்டே இருந்தார்.   எனவே இதுபற்றி முழுமையாக அறிய கிழக்கு டுடேவில் ராம் எழுதும் நிகோலா டெஸ்லா தொடரை வாசித்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக பல்பு என்றால் பிலிப்ஸ் குண்டு பல்பு அனைவருக்கும் நினைவு வரும். உருண்டையான பல்பில் நடுவில் டங்க்ஸ்டன் இழை இருக்கும், மின்சாரம் அதில் பாயும்போது ஒளிரும். இரண்டே நிமிடங்களில் பல்பின் கண்ணாடி கை பொறுக்க முடியாத வெப்பத்தை அடைந்துவிடும். இன்று அந்த பல்பு விடைபெற்றுவிட்டது. அதே சைசில் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்ள எல்இடி வந்துவிட்டது. குண்டு பல்புகளை பயன்படுத்தும்போது அதிக மின்னாற்றல் செலவாகும். கிடைக்கும் வெளிச்சம் குறைவு. மேலும் அதன் அருகில் நாம் உட்கார்ந்து வேலை செய்வது கடினம். இரவில் சூரியன் வந்துவிட்டதோ எனும்படி ச

அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி…

படம்
  அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி… அமைந்துள்ள இடம் க்ரீஸ் கலாசார அங்கீகாரம் 1987 டிப்ஸ் அனைத்து இடங்களையும் பார்க்க காம்போவாக டிக்கெட் எடுத்தால் நல்லது.   க்ரீசிலுள்ள ஏதேன்ஸ் நகரம். இந்த நகரத்தை காக்கும் கடவுள் பெயர் ஏதேனா.   ஏதேன்ஸ் நகரம், அங்கு வாழும் மக்களுக்கு முக்கியமானது. வணிகம், ராணுவ அணிவகுப்பு, ஜனநாயகம் என அனைத்திற்குமானது. இங்கிருந்து நீங்கள் சுற்றுலாவை தொடங்கலாம். ஏதேன்ஸ் நகரம் , 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.   இங்குள்ள பார்த்தினோன் கோவிலில் ஏதேனாவின் பெரிய சிலை அமைந்திருந்த்து. இங்குதான் கடவுளை வணங்குபவர்கள் தங்களது பரிசுப் பொருட்களை வைப்பார்கள். பின்னாளில் ஒட்டமான், வெனிடியன் படையினர் செய்த தாக்குதலில் ஏதேனா சிலை சிதைந்துவிட்டது. அப்படி சிதைந்தும் மிச்சமிருக்கும் சிலைத்துண்டுகளை வைத்து மீதியை நீங்கள் உங்கள் கற்பனை நினைவுகளில் நிரப்பிக்கொள்ளலாம். இங்கு செல்ல முதலில் மெட்ரோ   ரயில் பிடித்து அக்ரோபோலி ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும். அங்கு பார்த்தினோன் கோவிலைப் பிரதிபலிக்கும் மார்பிள் கற்களை வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே தெற்க

மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....

படம்
அசுரகுலம் - ரத்தசாட்சி  நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம். கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம். முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திர

ரேடார் எப்படி செயல்படுகிறது?

படம்
  quantum radar, china ரேடார் எப்படி செயல்படுகிறது? இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில் பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை.   வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான் அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றிவாகை சூடின. நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும் முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது. ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங். 1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வேல்   ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இயல்பும் அதுதான

விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

படம்
  விஷம் கொண்ட காய்கறிகள் நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் தாவரத

கிராமத்தை அழித்த களிமண் எரிமலை - இந்தோனேஷியா

படம்
  களிமண் எரிமலை பெரிய மலை உச்சியில் எரிமலை பொங்கி வழிந்து புகையும், பாறைக்குழம்பும் வெளியே வருவதை டிவி, நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்தோனேஷியாவில் உள்ள சித்தோர்ஜோவாவில் களிமண் எரிமலையில் பாறைக்குழம்பு வெடித்து வெளியாகிறது. எண்ணெய் தோண்டி எடுக்க ஒரு தனியார் நிறுவனம் ட்ரில்லரை உள்ளே விட்டு துளையிட்டது. அப்போதுதான் எரிமலைக் குழம்பு தலைகாட்டியது. அப்போது 155 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் விளைவுதான் எரிமலைக் குழம்பு என நிறுவனம் சொன்னது. உலகம் முழுக்க ஆயிரம் களிமண் எரிமலை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது, மனித செயல்பாடுகளால் உருவானது.   2006ஆம் ஆண்டு மேமாதம் 28ஆம் தேதி துளையிட்டபோதுதான் முதல்முதலில் லூசி எரிமலை உருவானது தெரியவந்தது. நீர், நீராவி, வாயு என முதலில் வெளியானது. பிறகு முழுக்க மண்ணும், உலோகமும் வெளியேறத் தொடங்கியது.     ஒருநாளுக்கு 1,80,000 க்யூபிக் மீட்டர் களிமண் வெளியேறத் தொடங்கியது. 2011ஆம்ஆண்டு வெளியாகும் களிமண் அளவு 10 ஆயிரம் க்யூபிக்காக குறைந்தது.   அங்கிருந்த மக்களை அரசு காலிசெய்யச் சொல்லியது. 30 ஆயிரம் பேர் வீட்டை காலிசெய்த

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட

குற்றம் செய்தது யார் என கண்டறிவது எப்படி?

படம்
  ரத்தசாட்சி ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திக்கொல்கிறார். சுத்தியால் தலையை சிதைக்கிறார். அல்லது கோடாரி வைத்து நெஞ்சை அல்லது கபாலத்தை பிளந்து கொல்கிறார். இப்படி கொல்லும் முறையைப் பொறுத்து சில பாணிகள் அமைந்துவிடும். செல்வராகவன் படம் என்றால் நெருப்பு டான்ஸ் எங்கேப்பா என்கிறார்களே அதுதான். ஆனால் இப்படி இந்த பாணி கொலை என்று சொல்ல முடியாதபடி கொலைகளும் நிறைய நடந்தபடி உள்ளன. காவல்துறையினரும் ஏபிசி என வரிசைமுறைப்படி பழகிவிட்டதால், இது அவனாக இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ என குழம்பும்படி ஆகிவிட்ட வழக்குகளும் ஏராளம் உண்டு. இங்கு நாம் அதுபோல சில விஷயங்களைப் பார்ப்போம். நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரம். 2005ஆம் ஆண்டு. இங்கு ராபர்ட் ஸ்பாஹால்ஸ்கி என்பவர் தான் நான்கு கொலைகளை செய்ததாக கூறி சரண் அடைந்தார். காவல்துறையினருக்கு எப்போதும் ஈகோ அதிகம். நீ வந்து சரணடைந்தால் நாங்கள் விசாரிக்காமல் இருக்க முடியுமா விசாரித்து, முதலில் இரண்டு வழக்கு, பிறகு இரண்டு வழக்கு என சோதித்து உண்மையை அறிந்தனர். மூன்று கொலைகள் நடந்த ஆண்டு 90 முதல் 91 என ஓராண்டு என்றால் அடுத்த கொலை பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்றுள

குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்கும் ரகசிய ப்ரீமியம் டாக்சி குழு! டாக்சி டிரைவர் - கொரிய டிராமா

படம்
  டாக்சி டிரைவர் எஸ்பிஎஸ் தென்கொரிய டிராமா – 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   கொரிய நாட்டின் நீதித்துறை தவறவிட்ட சைக்கோ கொலையாளிகள், மோசமான குற்றவாளிகளை ரகசியமாக செயல்படும் அமைப்பு கடத்தி சிறைப்படுத்தி பாதுகாக்கிறது. இதை சியோல் நீதித்துறை அமைப்பு அறியும் போது என்ன ஆகிறது என்பதே கதையின் மையம். பொதுவாக நீதித்துறை எப்போதும் ஆளும் அரசின் கைப்பாவையாகவே இருக்கும். அதற்கேற்றபடி ஆட்களை உள்ளே நியமித்து எதிரிகளை அடித்து உதைத்து வளைப்பார்கள். வெளியுலகில் நல்ல பெயரை சம்பாதிக்க கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து நிதி அளித்து குற்றசெயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வார்கள். தொடரில் அப்படி ப்ளூபேர்ட் பௌண்டேஷன் அமைப்பு செயல்படுகிறது. அதன் நோக்கமே, பழிவாங்குவதுதான். யாராவது ஒருவர் பழிவாங்க நினைத்து இந்த அமைப்பை தொடர்பு கொண்டால், அவர்கள் புகார்தாரரை டாக்சியில் கூட்டிக்கொண்டுபோய் புகாரை வாய்மொழியாக பதிவு செய்துகொண்டு திட்டம் வகுத்து அவரது வாழ்க்கையைக் கெடுத்தவர்களை பழிவாங்குவார்கள். இதற்காகும் செலவை புகார்தாரர் கொட