கிராமத்தை அழித்த களிமண் எரிமலை - இந்தோனேஷியா

 








களிமண் எரிமலை

பெரிய மலை உச்சியில் எரிமலை பொங்கி வழிந்து புகையும், பாறைக்குழம்பும் வெளியே வருவதை டிவி, நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்தோனேஷியாவில் உள்ள சித்தோர்ஜோவாவில் களிமண் எரிமலையில் பாறைக்குழம்பு வெடித்து வெளியாகிறது.

எண்ணெய் தோண்டி எடுக்க ஒரு தனியார் நிறுவனம் ட்ரில்லரை உள்ளே விட்டு துளையிட்டது. அப்போதுதான் எரிமலைக் குழம்பு தலைகாட்டியது. அப்போது 155 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் விளைவுதான் எரிமலைக் குழம்பு என நிறுவனம் சொன்னது.

உலகம் முழுக்க ஆயிரம் களிமண் எரிமலை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது, மனித செயல்பாடுகளால் உருவானது.  2006ஆம் ஆண்டு மேமாதம் 28ஆம் தேதி துளையிட்டபோதுதான் முதல்முதலில் லூசி எரிமலை உருவானது தெரியவந்தது. நீர், நீராவி, வாயு என முதலில் வெளியானது. பிறகு முழுக்க மண்ணும், உலோகமும் வெளியேறத் தொடங்கியது.   

ஒருநாளுக்கு 1,80,000 க்யூபிக் மீட்டர் களிமண் வெளியேறத் தொடங்கியது. 2011ஆம்ஆண்டு வெளியாகும் களிமண் அளவு 10 ஆயிரம் க்யூபிக்காக குறைந்தது.  அங்கிருந்த மக்களை அரசு காலிசெய்யச் சொல்லியது. 30 ஆயிரம் பேர் வீட்டை காலிசெய்து வெளியேறினர். களிமண் எரிமலை குழம்பால் பத்தாயிரம் வீடுகள் அழிக்கப்பட்டன.

எரிமலைக்குழம்பு ஆற்று நீரை மாசுபடுத்தியது. மாசுக்கு களிமண் குழம்பில் இருந்த உலோகங்கள் முக்கியமான காரணம்.


கருத்துகள்