பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

 









காமம்

மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது.

காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.  அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார்.

இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை மோத வைத்து, அந்த விபத்தில் மனிதர்களின் உடல்கள் பிய்ந்து தெறிப்பதை தனக்கான பாலியல் சந்தோஷமாக கற்பனை செய்தார். ஆனால் இவரது முயற்சி முழுமையாகும் முன்னரே காவல்துறையால் கைது செய்யப்பட்டு விட்டார். ஜாக் ரிப்பர் வழக்கைப் பொறுத்தவரை ஒருவரைக் கொன்று குடலை உருவுவது, உடல் உறுப்புகளை சிதைப்பது அவருக்கு சந்தோஷம் கொடுக்கும் சமாச்சாரம். இப்படி பல்வேறு ஆட்களுக்கும் மனநிலை வேறுபட்டது. இதற்கு அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகம்.

பாலுறவு அடிமைகள்

தி கலெக்டர் என்ற நாவல் ஒன்று 1963ஆம் ஆண்டு எழுதப்பட்டது. எழுதிய ஆசிரியரின் பெயர், ஜான் ஃபோவெல்ஸ். இதில் பட்டாம்பூச்சிகளை பதப்படுத்தி பாதுகாக்கும் பணியை செய்பவன் இருக்கிறான். இவன் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்கிறான். கலைப்படிப்பு படிக்கும் மாணவி மிராண்டாவைப் பார்க்ககிறான். அவளை தனது வீட்டில் அடைத்து வைக்கிறான். பாலியல் வல்லுறவு, சித்திரவதை என எதையும்  செய்வதில்லை. அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்கிறான். கேட்டதையெல்லாம் செய்கிறான். ஆனால் அவளை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை.

இதை விரும்பி படித்த ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். அவரது பெயர், கிரிஸ்டோபர் வைல்டர். நிறைய பத்திகளை மனப்பாடமே செய்து வைத்திருந்தார். 

கிரிஸ்டோபர் கட்டுமானத்துறையில் வேலை செய்துகொண்டிருந்தார். புகைப்படம் எடுப்பதையும் பொழுதுபோக்காக செய்துகொண்டிருந்தார். தெரிய மற்றொன்று, அழகான பெண்களை தன்னிடம் ஈர்க்கப்படுமாறு செய்து அவர்களை கொல்வது யாரும் அறியாதது.  போலீசுக்கு இவர் மீது சந்தேகம் வந்தபோது இவரோடு ஜோடி போட்டு சுற்றிய இரு பெண்கள் காணாமல் போயிருந்தனர். கிரிஸ்டோபரும் காவல்துறையைப் பார்த்து பயந்து தனது காதலியின் கிரடிட் கார்டை எடுத்துக்கொண்டு வேறு நகருக்கு ஓடிவிட்டார்.

 இவருக்கு பாலுறவில் இயல்பான தன்மையில் விருப்பம் கிடையாது. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு கிரிஸ்டோபர் பாரில் நண்பர்களோடு இருக்கும்போது பெண் ஒருவரை குழு வல்லுறவு செய்தனர். இதற்காக காவல்துறையில் வழக்கு ஒன்றையும் சந்தித்தார்.  அப்போதுதான் தனது பாலுறவு திருப்தி என்பது  விறகை எடுத்து அடுப்பில் வைத்தால் மட்டும் தீராது என்பதை புரிந்துகொண்டார். எனவே, பாலுறவு கொள்ளும்போது பெண்ணின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு இடம்பெயர்ந்தார். கட்டுமானம், எலக்ட்ரிகல் துறை அப்போது அங்கு வளர்ச்சிபெற்று மேம்பட்டு வந்தது. அப்போது அங்கிருந்த சிறுமியை பாலுறவுக்கு கட்டாயப்படுத்த, பிரச்னையாகி நீதிமன்ற வழக்கானது. கிரிஸ்டோபரின் மனநிலையை சோதித்த மருத்துவர்கள், அவரால் குறிப்பிட்ட அடைமானம் இல்லாத இடத்தில் அவரால் வாழ முடியாது என்று சொன்னார்கள். அந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. பிடிஎஸ்எம் முறையில் டாமினன்ட் என்ற சொல் உண்டு. அதாவது ஆதிக்கம் செலுத்துவது. பாலுறவில் கிரிஸ்டோபர் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனால் பெண்களை அவர் அடிமை போல நடத்தும் இயல்பு கொண்டவர்.

பிறகு ஒரு பெண்ணை மாடலாக மாற்றுகிறேன் என்று சித்திரவதை செய்து கொன்றார். இவரது உடலை காவல்துறை எடுத்து சோதித்தபோது, கிரிஸ்டோபர் அடுத்த பெண்ணை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்திருந்தார். அந்த பெண்ணின் கண்களை பசையைப் பயன்படுத்தி ஒட்டி, மின்சாரத்தை பயன்படுத்தி சித்திரவதை செய்து உடலுறவு கொண்டார். தனது முன்னால் நிர்வாணமாக  உடற்பயிற்சி செய்த வற்புறுத்தினார். பிறகு அந்த பெண் பாத்ரூமில் அடைந்து சத்தம் போட்டு கிரிஸ்டோபரிடமிருந்து தப்பினாள். அழகிய பெண்களை கொல்பவன் என பின்னாளில் கிரிஸ்டோபருக்கு ஊடகங்கள் புகழ் சேர்த்தன.

நிறைய பெண்களை ஏன் கொன்றார் என்ற காரணத்தை அறிந்தால் ஆச்சரியப்படுவோம். அவர்களின் கார்களை திருடுவதற்காகவே பல பெண்களைக் கொன்றார். பிற பெண்களை கடத்துவதற்காக டினா மரியா என்ற பெண்ணை பிடித்து வைத்து மிரட்டினார். அவர் மூலம் நிறைய பெண்களை பிடித்து சித்திரவதை செய்து கொன்றார். இவரை அமெரிக்காவின் உள்நாட்டு காவல்துறை தேடப்படும் பத்து குற்றவாளிகளில் ஒருவர் என அட்டவணைப்படுத்தியது.

கிரிஸ்டோபர் பயன்படுத்திய கருவிகள் என்னென்ன கைவிலங்கு, டேப், கயிறு, தூங்குவதற்கான படுக்கை, மின்சார வயர்கள், தி கலெக்டர் என்ற நாவல் ஆகியவற்றை அவர் எப்போதுமே கூடவே வைத்திருந்தார். மூச்சு திணற வைத்து கொல்வது, கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது ஆகியவையே கிரிஸ்டோபரின் கொலை செய்யும் முறைகள். நியூ ஹாம்ஷையரில்  ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கும் முயற்சியில் கொல்லப்பட்டார்.

இன்னொருவரைப் பற்றியும் இப்போதே பார்த்துவிடுவோம்.

இவர் பெயர், ராபர்ட் ஹான்சன். இவர் அலாஸ்காவில் உள்ள பேக்கரி கடைக்காரர். இவர் பெண்களை  குறிப்பாக  விலைமாதுக்களை உடைகளை அவிழ்த்துப் போடச்செய்து தனது வீட்டில் ஓடவிட்டு துப்பாக்கி அல்லது வேறு ஆயுதங்களை கொண்டு வேட்டையாடி கொன்றார். இந்த முறையில் இருபது பேர்களை கொன்றேன் என ஒப்புக்கொண்டார். ஆனால் நான்கு கொலைகளை மட்டுமே தண்டனை கிடைத்தது. கொலைகளுக்கான ஆதாரங்களை காவல்துறை சேகரித்தால்தானே தண்டனை கிடைக்கும்.

 

 


கருத்துகள்