இடுகைகள்

வாந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை

படம்
           3 விஷம் = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் முன்னர், நோயாளிகளிடம் நிறைய பேசவேண்டும். சிலர் தங்களின் செயல்பாடுகளைக் கூறுவார்கள். சிலர் கூற மாட்டார்கள்.ஒருவரின் செயல்பாடுகள், குணங்கள் தெரிந்தால் ஓமியோபதியில் மருந்துகளைக் கொடுப்பது எளிது. தொடக்கத்தில் மருத்துவ அட்டவணை உதவியது. இன்று கணினியில் மென்பொருட்களை பயன்படுத்தி மருந்துகளை வழங்குகிறார்கள். நவீன காலத்தில் மருந்துகள் கூடிவிட்டன. ஓமியோபதியை பயிலும் மாணவர்களும், அதை பயிற்சி செய்பவர்களும் கூட தொடர்ச்சியாக பயின்றுகொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுதான் நோயாளிகளுக்கு நல்லதும் கூட. அரசு மருத்துவமனைகளுக்கு வட இந்தியா, தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளத்தில் அரசு கூட்டுறவு ஓமியோபதி நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை தமிழ்நாடு அரசின் டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வருகிறது. ஓமியோபதி மருந்துகள் எந்தளவு தூய்மையாக உள்ளனவோ, அந்தளவு வீரியம் அதிகமாக இருக்கும். தனியார் மருந்துகடைகளில் ஓமியோபதி ...

பாரசிட்டமால் சிரப்பால் கல்லீரல் பாதிப்பு - தவறு எங்கே நடக்கிறது?

படம்
  பாரசிட்டமால் சிரப் ஓவர்டோஸால் கல்லீரல் பாதிக்கப்படும்  குழந்தைகள்- தவறு எங்கே நடக்கிறது? ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்துக்கடையில் பார்மாசிட்டமால் வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு போகும் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாரசிட்டமால் சிரப்பை காய்ச்சலுக்கு எடுத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லீரல் செயலிழந்து கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பெற்றோர் பலரும் பாரசிட்டமாலை   எந்த ஆபத்தும் இல்லாத மருந் து என நினைக்கின்றனர். உண்மையில் அது தவறானது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிரப், அவர்களின் உடல் எடை அடிப்படையிலானது. ஆனால், பாரசிட்டமால் மருந்து இந்தியாவில் நான்கு   விதமாக தன்மையில் விற்கப்படுகிறது. இதனால் சிரப் ஓவர்டோஸாக கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஆண்டுக்கு ஒருவரேனும் இறந்து போகிறார்கள். மீதியுள்ளவர்கள் அவசர சிகிச்சையில் வைக்கப்படுகிறார்கள்.   இதை எதிர்கொள்வது எப்படி? பாரசிட்டமால் சிரப்பைக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். இல்லையெ...

மதுவால் ஏற்படும் ஹேங்ஓவர் பிரச்னை - சமாளிப்பது எப்படி?

படம்
giphy ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். அதனால், பார்ட்டி பண்ணலாம் வா என்றால் கோரிக்கையையும் மறுக்கமுடியாது. பேசியபடி குடிப்பதிலும் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடுத்தநாள் என்னாச்சு என தலையைப் பிடித்தபடி பலரும் எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவதால் உடலுக்கு என்னாகிறது? மது அருந்துவது உடலில் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மது குடித்தவர்களுக்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கல்லீரலை மட்டும் மது பாதிப்பதில்லை. குடலையும் பாதிக்கிறது. மது அருந்துபவர்களுக்கு, அதன் மூலம் வயிற்றில் அசிட்டால் டிஹைடு என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே ஹேங்ஓவரின் வாந்தி, குமட்டல், சோர்வு ஆகியவற்றின் காரணி. சிலர் சிவப்பு வைன், பார்பன் பருகுவார்கள். அவர்களது நம்பிக்கை, அதில் வாந்தி போன்ற பிரச்னைகள் அடுத்த நாள் ஏற்படாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் ஜின், வோட்காவை விட மோசமான பிரச்னைகளை மேற்சொன்ன பானங்களே ஏற்படுத்துகின்றன. இதிலும் சிலருக்கு மட்டும் அதிக போதை பாதிப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியில் அவை மரபணு மற்றும்  குடிப்பவரின் வயது, எடை சார்ந்தவை என்று கண்டற...