இடுகைகள்

ஆனந்த் நீலகண்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துரியோதனின் கதை! - கௌரவன் சொல்லும் தர்மத்தின் கதை!

படம்
கௌரவன் ஆனந்த் நீலகண்டன் எதிர்நாயகர்களைப் பற்றி கதைவரிசையில் ராவணனை அடுத்து கௌரவர்களில் ஒருவரான துரியோதனின் கதை. முதல்பாகத்தில் துரியோதனின் இளமைப் பருவம், பெற்றோரின் அன்பு கிடைக்காத வாழ்க்கையில் நண்பர்களே ஆதரவாக அமைகிறார்கள். ஏழைமக்கள் பற்றி கவலைப்படுபவனுக்கு பலராமனின் கதாயுதம் மூலம் கிடைக்கும் பலம், பீமனைப் பற்றிய பயத்தை நொறுக்குகிறது. இதன் விளைவாக பலம் பெறுபவன் சாதிமுறைக்கு எதிர்ப்பாக கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரன் என நண்பர்களை சேர்த்து அஸ்தினாபுரத்தில் வாழ்கிறான். ஆனால் காந்தார இளவரசன் சகுனியில் மனதில் தன் பெற்றோரை பீஷ்மர் கொன்ற வன்மம் குறையாமல் உள்ளது. இதற்காக சிறு கொள்ளையனான துர்ஜயன் மற்றும் கட்டிடக் கலைஞனான ஊழல் மனிதர் புரோச்சனன் ஆகியோரைப் பயன்படுத்துகிறான். பரதகண்டம், தென்னக மன்னர்கள் கூட்டமைப்பு என சாதிமுறைகளால் பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு பரசுராமன் காரணமாக இருக்கிறார். அவருடன் செய்யும் உடன்பாட்டை நினைத்து பீஷ்மர் மருகுகிறார். அதேசமயம் இவர் தன் இளம் வயதை துரியோதனுடன் ஒப்பிட்டு ஒன்றுபோலவே இருக்கிறது என ஆறுதல் கொள்கிறார். பட்டத்து இளவரசராக துரியோதனன் கவனமாக ச