இடுகைகள்

சுயமோகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி  சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது.  அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...

கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை, இழவு வீடுன்னா பொணம் - என்பிடி ஆளுமைகள்

  அமெரிக்காவில் மேரிலேண்டில் பெல்ட்வே ஸ்னைப்பர் என்ற கொலைகாரர்கள் உருவாகி வந்தனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரபலமாக இருந்தனர். ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்தியை ஏகத்துக்கும் வெளியிட்டு மக்களின் பயத்துக்கு நெய் வார்த்தனர். இவர்களின் கொலை பாணி என்பது எளிதானது. ஆனால் பிறர் கண்டுபிடிப்பது கடினம். காரில் அமர்ந்து செமி ஆட்டோமேடிக் துப்பாக்கியை வைத்து வந்தவர் போனவர் என யாரையும் கவலைப்படாமல் குறிவைத்து சுட வேண்டியதுதான். தோட்டா எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிப்பதற்குள் ஏகப்பட்ட உயிர்கள் போயிருக்கும். இவர்கள் தங்கள் தில்லுக்கு துட்டு கிடைக்கும் என உறுதியாக நம்பி கடிதம் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பினர். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களை கடவுள் என அழைக்கவேண்டும் என கடிதம் எழுதியிருந்தனர். காவல்துறை அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கொலைகாரர்களின்   மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்துவது. சென்ற அத்தியாயத்தில் கூறிய சமாச்சாரம் உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். துப்பாக்கித் தோட்டா செலவுக்கு கூட ஆகாத வழியில் எதற்கு மக்களை கொல்ல வேண்டும்? கா...