இடுகைகள்

உடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயலில் நேர்மையாக இருந்து வெற்றிகண்ட பெருநிறுவன வழக்குரைஞர்! - நயனா மொட்டம்மா

படம்
  நயனா மொட்டம்மா நயனா மொட்டம்மா - கர்நாடக சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ நயனா மொட்டம்மா கார்ப்பரேட் வழக்குரைஞராக இருந்து எம்எல்ஏ வாக மாறியவர் கர்நாடக மாநிலத்தின் முடிகெரே தொகுதியில் மொட்டம்மா வெல்லுவார் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மால்நாடு, சிக்மகளூர் என இரு புகழ்பெற்ற பகுதிகளின் செல்வாக்கும் இங்கு உண்டு. இந்த பகுதியில் 1978ஆம்ஆண்டு இந்திராகாந்தி போட்டியிட்டு வென்று பிறகு தேசிய அரசியலில் வெற்றி பெற்றார். மொட்டம்மா 2015ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் இருக்கிறார். இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரை வீழ்த்த தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதைப்பற்றியெல்லாம் மொட்டம்மா கவலையே படவில்லை.  அதே படங்ளை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பெண்களை உடைகளை கொண்டு தீர்மானிக்க கூடாது என முகத்தில் அறைந்தது போல பதிவுகளை இட்டார். கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பெண்களில் மொட்டம்மாவும் ஒருவர். 1957ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அங்கு போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 224 என்ற அளவுக்கு கூட உயரவில்லை. மொட்டம

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

ஆண், பெண் என இருபாலினத்தவரை ஈர்க்கும் உடைகளின் டிரெண்ட்! - மாறும் கலாசாரமும் வணிகமும்

படம்
  டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்  - கே டிராமா இட்ஸ் ஓகே நாட் டு பி ஓகே ஆண், பெண் என இருந்த உடை வேறுபாடுகள் இப்போது உடையத் தொடங்கிவிட்டன. ஆண்கள் அணிந்த ஆடைகளை பெண்களும், பெண்களின் தேர்வாக இருந்த நிறங்களில் ஆண்கள் பல்வேறு உடைகளை வாங்கி அணியத் தொடங்கிவிட்டனர். ஆண்களும் நிறைய பூச்சட்டைகளை வாங்கி அணிந்துகொண்டு கடற்கரைகளில் உலாவத் தொடங்கிவிட்டனர். உச்சமாக, இந்தியாவில் கூட பாலின பேதமற்ற உடைகளை தைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆடைகளை ஆண்களும், பெண்களும் யார் வேண்டுமானாலும் வாங்கி அணியலாம். ஆண், பெண் என பர்பியூம்கள் கூட வேறுபட்டு விற்றுக்கொண்டு இருந்த நிலை இருந்தது. இன்று அதுவும் கூட மாறி வருகிறது. உண்மையில் யோசித்து பாருங்கள். பர்ஃபியூம்களில் ஆண் என்ன, பெண் என்ன? வியாபாரம் அப்படி தனியாக பிரிந்துவிட்டது. அதற்கேற்ப விளம்பரங்களை உருவாக்கி மனதில் பிரிவினையை ஏற்படுத்தி பொருட்களை கூவி விற்கிறார்கள். இன்று உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரும் பல்வேறு நாடுகளிலுள்ள டிவி தொடர்களைப் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் தென்கொரிய டிவி தொடர்களைப் பார்த்து உச்சிகுளிர்ந்து போனவர்கள் அதிகம். அந்த நாட்டு டிவி தொடர்கள

நெசவாளர்களை வாழ வைக்கும் உடை வடிவமைப்பாளர்களின் முயற்சி!

  கேரளத்தில் பிரபலமாகும் பாலின பாகுபாடற்ற ஆடைகள் கேரளா மாநிலத்தின் செண்டமங்கலம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு காரணம் புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களின் ஆடைகள். இவர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து நெய்து விற்பதுதான். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கம் முதலில் நஷ்டத்தில் இயங்கியது. இதன் ஆடைகள் மக்கள் பெரிதாக அடையாளம் கண்டு வாங்கவில்லை.   ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையினர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஶ்ரீஜித் ஜீவன், ஷாலினி ஜேம்ஸ், ஆகிய வடிவமைப்பாளர்கள் மேலும் பலருடன் சேர்ந்து கைவிடப்பட்டு வந்த கைத்தறி நெசவை மீட்டெடுக்க முயன்றனர். 2022ஆம் ஆண்டு இருபத்து நான்கு வயதான பருல் குப்தா, யுகா எனும் பிராண்டை உருவாக்கினார். இதற்கு உதவிய ஹெச் 47 சங்கம் இதனால் மக்களிடையே புகழ்பெற்றது. கடந்த செப்டம்பரில் இந்த பிராண்டில்   33 புதிய ரகங்கள் வெளியாயின. இப்போது பருல் குப்தா, கிரு கேஷிகி எனும் புதிய ஆடை ரகங்களை வெளியிட்டுள்ளார். இந்த ரகங்களின் சிறப்பு, இவற்றை ஆணும், பெண்ணும் என இரு பாலினத்தவருமே அணியலாம் என்பதுதான். அதாவத

ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

படம்
  ‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்   உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்ற

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன

மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்

படம்
  ஜொனாதன் டேனியல் பிரைஸ் ஃபேஷன் போட்டோகிராபர் புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின? சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.  உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்? நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.  உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை ந

ஆடை வடிவமைப்பு, மலையேற்றம், சினிமா, தொழில் சாதிக்கும் பெண்கள்! - கிருஷ்ணா பாட்டில், அங்கிதா, ஸ்வேதா, ஹர்சிதா

படம்
                கிருஷ்ணா பாட்டீல் இமாலயத்தில் உள்ள சாடோபந்த மலையில் ஏறிய இளம்வயது பெண் இவர்தான் . மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இமயமலைக்கு சென்ற முதல் பெண் கிருஷ்ணாதான் . 2007 ஆம் ஆண்டு மலையேற்றம் பற்றி உத்தர்காசியிலுள்ள நேரு இன்ஸ்டிடியூட்டில் படித்தார் . பிறகு அதிலேயே அட்வான்ஸ் கோர்சும் முடித்தார் . பதினெட்டு வயதில் படிப்பின் ஒரு பகுதியாக மலையேற்றத்தைத் தொடங்கிவிட்டார் . மூன்று வயதிலிருந்து மலையேற்றம் செய்யவேண்டும் என்று நினைத்து வந்தவர் கிருஷ்ணா . ஏழு கண்டங்களிலுள்ள ஏழு மலைத்தொடர்களில் ஏறிவிட்டார் . அதற்குப் பிறகு 2010 இல்தான் இமயமலையில் ஏறுவதற்கான முயற்சியைத் தொடங்கினார் . மெக்கின்லி மலை ஏறும்போது தொழில்நுட்பரீதியான தடைகள் தோன்றின . ஒருவகையில் பெண்கள் சாதிப்பதற்கான பல்வேறு தடைகளை கிருஷ்ணா பாட்டீல் தனது சாதனைகள் மூலம் ஓரளவு தகர்த்துவிட்டார் . இயற்கைச்சூழலோடு இணைந்து வாழ்வது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் . ஆறு கண்டங்களிலுள்ள மலையேற்ற பெண்களில் இவரும் சுத்தமான நீர் , காடுகள் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . தையல் மற்றும் ஓவியங்களிலும்

நீரில் நனைந்தால் உடையின் நிறம் அடர்த்தியாக தெரிவது ஏன்?

படம்
மிஸ்டர். ரோனி துணி துவைக்கும்போது அல்லது மழை பொழியும்போது உடை எப்படி மிகவும் அடர்த்தியான நிறமாக மாறுகிறது? மழையை ரசித்து நனைந்துகொண்டு சாலையில் சென்று இருப்பீர்கள் போல. மழைநீரில் நனையாமல் நின்றிருந்தால் இதுபோல கேள்விகள் பிறந்திருக்காது அல்லவா? நீர், உடை இழைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. அதில் ஒளி பட்டு எதிரொளிப்பதால், உடையின் நிறம் அடர்த்தியானதாக தெரிகிறது. இதுபற்றி வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் லெக்னர், மைக்கேல் டோர்ஃப் ஆகியோர் ஆராய்ச்சி செய்து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர். நன்றி - பிபிசி

ஃபேஷன் உலகில் சாதித்த திறமைசாலி - மிஸ் ஜே

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள் ஜே.அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் ஜென்கின்ஸ், ஃபேஷன் உலகில் வெகு பிரபலமான ஆள். மிஸ் ஜே என்று அழைக்கப்படுவர், 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் டிவி உலகில் பல்வேறு மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸில் பிறந்தவருக்கு, ஃபேஷன் வழிகாட்டுதலை வழங்கியது யாரோ அல்ல; அவரது அம்மாதான். பின்னர் எலைட் மேனேஜ்மெண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மோனிக் பில்லார்டு ஜேவைப் பார்த்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்ததும் மாடலுக்கு சரியான ஆள் என முடிவு செய்தார். உடனே அக்ரிமெண்டை ரெடி செய்து கையில் கொடுத்துவிட்டார். அதன்பின் படிப்பை தூக்கிப்போட்டு மாடலிங்கில் குதித்தார் ஜே. வெற்றியும் பெற்றார். பின்னர்தான் டைரா பேங்க்ஸ் என்ற நடிகையின் நிகழ்ச்சியில் ஆலோசகரானார். அவருக்கு நிகழ்ச்சி பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கட்டண சேவையில் வழங்கினார். மேலும் டைரா ஷோ என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். வெறும் ஆலோசனைகள் மட்டுமன்றி அமெரிக்கா நெக்ஸ்ட் மாடல் எனும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆடைகளையும்  உருவாக்கினார். இவர் இ

பாலினப் பாகுபாடு நம் மனதில் உள்ளது

படம்
Daily Star பாலினப் பாகுபாடு என்பது மனநோய்! பாலின பாகுபாடற்ற பள்ளிகள் என்ற கட்டுரையை அண்மையில் எழுதினேன். அதைப் பாராட்டிய நண்பர் எனக்கு அதிலுள்ள உடை கான்செஃப்ட் புரியவில்லை. என்ன சொல்லவருகிறாய்? ஆண் குழந்தைகளுக்கு கவுன் வாங்கித் தருவாயா? என்றார். உண்மைதான்.அதிலுள்ள உண்மை எனக்கு புரிந்தது. ஆனால் அவர் புரிந்துகொள்ளாத சமாச்சாரம், ஆண் பெண் என்ற உடைக்கான கோடுகள், எல்லைகள் மங்கி வருவது மட்டுமே நான் கூறவந்தது. இதுதொடர்பாக குங்குமத்திலும் நான் முன்னமே கட்டுரைகளை எழுதியுள்ளேன். ரன்வீர்சிங் பேஷன் ஷோவில் ஜென்டர் நியூட்ரல் உடைகளை அணிந்துவந்து அவரது காதலிக்கே ஷாக் கொடுத்தார். பாஜிராவ் மஸ்தானி விழாவில் அவர் அணிந்த பேன்ட் கூட அந்த ரகம்தான். எனது உறவினர் வீடுகளில் பெண்ணுக்கு டீ மட்டும், ஆணுக்கு ஹார்லிக்ஸ் தரப்படும் வித்தியாசத்தை கண்ணாரப் பார்த்துள்ளேன். பெண்கள் எங்களது ஊரில் பாரமாக பார்ப்பதும், அவர்களுக்கு செய்யும் சிறிய உடைகள் அல்லது கல்விச்செலவும் கூட அரசுக்கு வரி கட்டுவது போலவே நினைக்கிறார்கள். இவையும் பாலினப் பாகுபாடு குறித்த கவனத்தை ஏற்படுத்தும் கட்டுரை எழுதக்காரணம். குழந்தைகள்