இடுகைகள்

போஸ்ட்வானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யானையை வேட்டையாடத் தடையில்லை!

படம்
ஆப்பிரிக்காவிலுள்ள போஸ்ட்வானாவில் யானைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே அரசு, யானைகளை வேட்டையாட வாங்க என தடையை நீக்கியுள்ளது.  ஆப்பிரிக்காவின் சாவன்னா யானைகளைக் காக்கும் நாட்டில் இப்படியொரு நிலைமையா என சூழலியலாளர்கள் நொந்துபோயுள்ளனர். காரணம் மேற்சொன்ன அறிவிப்புதான். யானைகளை வேட்டையாடும் தடையை நீக்கியது, அரசியல் விளையாட்டு என பலரும் கருதுகின்றனர். போஸ்ட்வானா அதிபரான மோக்வீட்ஸி மைசிசி , கிராமத்தினரின் ஓட்டுக்களைப் பெற இதுபோல அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்கிறது அரசியல் வட்டாரம். தற்போது போஸ்ட்வானாவில் 130000 யானைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. யானைகள் இரைக்காக வீடு, வயல், தோட்டம் புகுந்து தாக்குவதை இத்தடை நீக்கும் என சூழலியல்துறை கூறியுள்ளது. யானைகளை வேட்டையாடுவதற்காக வெளிநாட்டினர் ஆப்பிரிக்கா வருவது சுற்றுலா வருமானத்தையும் அதிகரிக்கும் என வேற லெவலில் யோசிக்கிறது அரசு. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. சட்ட விரோதமாக யானைகளை சுட்டுக்கொல்வதும் அதிகரித்து வருகிறது. 2007 - 2014 வரையில் யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிந்தது. யானைகளை கொல்வதற்கான தடை 2014 ஆம் ஆண்டு

LGBTயினரை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

படம்
theconversation.com ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் போஸ்ட்வானா! அண்மையில் போஸ்ட்வானா நாட்டு உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் சட்டத்தை அகற்றியுள்ளது. இந்த தீர்ப்பு வரும் ஜூன் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. கென்யாவில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியிடப்பட விருக்கிறது.  காலனிய ஆட்சிகாலச் சட்டப்படி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு, சட்டம் 164 படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க முடியும். இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகள் பிரிவில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும்.  போஸ்ட்வானாவின் சட்டங்கள் அப்படியே இந்தியச்சட்டங்களைப் போன்றதே. 1830 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்திய சட்ட கமிஷன் மூலம் ஓரினச்சேர்க்கை சட்டத்தை இயற்றினார். இந்தியா மற்றும் போஸ்ட்வானா சட்டங்கள் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின்(1533) சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போஸ்ட்வானா, 2003 ஆம் ஆண்டுதான் சட்டங்களை நவீனப்படுத்த தொடங்கியது.  பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு ந