இடுகைகள்

வருமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முத

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து

செயற்கை நுண்ணறிவு மூலம் பணம் சம்பாதிக்கும் ஏழை மக்கள்! - கார்யா ஆப்பின் வறுமை ஒழிப்பு செயல்பாடு

படம்
  கார்யா ஆப் பயன்பாட்டாளர்கள், கர்நாடகா செயற்கை நுண்ணறிவு மூலம் வேலையிழப்பு பற்றிய பதற்றம் தரும் செய்திகளை தினந்தோறும் கேட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தின் சிலுகாவடி, ஆலஹல்லி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிரந்தரமான வேலை என்று கூறமுடியாது. ஆனால், அங்குள்ள விவசாய நிலத்தில் செய்யும் கூலி வேலைக்கான ஊதியத்தை விட அதிகம். இதற்கு கார்யா   என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் அப்ளிகேஷனே காரணம். இந்த அமைப்பை டெல்லியை பூர்விகமாக கொண்ட மனு சோப்ரா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் என்ற நிறுவனத்தில்   வேலை செய்த மனு, தனது வேலையை கைவிட்டு கார்யா என்ற ஆப்பை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆப் மூலம், தாய்மொழியில் அதாவது கன்னடத்தில் குறிப்பிட்ட செய்தி பற்றிய டேட்டா மாடல்களை உருவாக்குகிறார்கள். குறிப்பிட்ட செய்தியை ஒருவர் துல்லியமான வட்டார வழக்கில் பேச வேண்டும். அவர் பேச்சின் துல்லியத்தைப் பொறுத்து அவருக்கு வருமானம் கிடைக்கும். ஒரு மணிநேர உழைப்பிற்கு 415.50

தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

படம்
  ப்ளூ டோகாய் கஃபே சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன் ப்ளூ டோகாய் காபி சிவம் சாகி 32 துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய் இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார். டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான். இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

சப்ஸ்டாக் வலைத்தளத்திலும் பயணிப்போம் - வாய்ப்புள்ளோர் இணையலாம் - வாங்க!

படம்
  இனி வலைப்பூவில் எழுதும் கட்டுரைகள் சப்ஸ்டாக்கிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இதிலும், தொடரலாம். தமிழோடு இணைந்து பயணிப்போம்.  https://anbarasushanmugam.substack.com/ நன்றி - மெட்டாமங்கீஸ் - விஜய் வரதராஜ்

கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

படம்
  புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர். ‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள். மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது. பச

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

உலகின் பெரிய வங்கிகள் - 2022

படம்
  சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி  நாடு - சீனா ரேங்க் -2 சொத்து - 5.5 ட்ரில்லியன் டாலர்கள் ஐசிபிசி - உலகின் பெரிய வங்கிகளில் முக்கியமானது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தனது முதல் இடத்தை இழந்துள்ளது. வங்கியை பல்வேறு முதலீடுகள் மூலம் கட்டுப்படுத்துவது சீன அரசுதான்.  சென்ட்ரல் ஹியூஜின் இன்வெஸ்ட்மென்ட் லிட். என்ற நிறுவனம், ஐசிபிசி வங்கியில் முதலீடு செய்துள்ளது. சீன நிதி அமைச்சகம், வங்கியில் 31 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது. ஹியூஜின் நிறுவனம், 35 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளது.  ஜேபி மோர்கன் சேஸ்  நாடு - அமெரிக்கா ரேங்க் -4  சொத்து மதிப்பு - 4 ட்ரில்லியன்  ரஷ்யா உக்ரைனால் பாதிக்கப்பட்ட வங்கி. 42 சதவீதம் வங்கி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜேபி மோர்கன், ஒட்டுமொத்தமாக இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. 8.3 பில்லியன் டாலர்கள் வரை வருமானத்தை அடைந்துள்ளது. 902 மில்லியன் டாலர்கள் வரை கடனை கொடுத்துள்ள வங்கி தான். இனிமேல் அமெரிக்காவில் பெரிய  பொதுத்துறை வங்கி என்ற பெயர் இதற்கு இருக்காது.  சீனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி நாடு - சீனா ரேங்க் - 5 சொத்து மதிப்பு - 4.7 ட்ரில்லியன் டாலர்கள் இதுவ

சுயமாக சாதித்து கோடிகளைக் குவித்த அமெரிக்க பெண்கள்!

படம்
  சுயமாக சாதித்த பெண்கள்  டயான் ஹெண்ட்ரிக்ஸ் கட்டுமானப் பொருட்கள் விற்பனை வயது 75 12.2 பில்லியன் பெருந்தொற்று காலத்தில் ஹெண்ட்ரிக்ஸ் உருவாக்கிய நிறுவனம் கட்டுமானத்தில் ஏற்பட்ட விற்பனை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு சாதித்தார். கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். நிறுவனத்தை தனது கணவருடன் சேர்ந்து தொடங்கி டாலர்களை சம்பாதித்துள்ளார்.  2020ஆம் ஆண்டு 12.1 பில்லியனாக இருந்த வருமானம் இப்போது 15 பில்லியனாக உயர்ந்துள்ளது.  ஜூடி ஃபால்க்னர்  உடல்நலம் தொடர்பான நிறுவனம் வயது 78 6.7 பில்லியன் டாலர்கள் மருத்துவ ஆவண நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ், 3.8 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றது. மைசார்ட் எனும் மென்பொருளை நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி வேக்சின் பாஸ்போர்ட் பெறலாம். 1979ஆம் ஆண்டு தனது வீட்டு அடித்தளத்தில் தொடங்கிய நிறுவனம் இது. இதில் ஜூடிக்கு 47 சதவீத பங்கு உள்ளது. வருமானமோ, வம்போ எதைப் பற்றியும் பேசாத நிறுவனம் கடந்த ஆண்டுதான் ட்விட்டரில் இணைந்தது.  ஜூடி லவ்  ரீடெய்ல் கடைகள், கேஸ் நிலையங்கள் வயது 84 5.2 பில்லியன் டாலர்கள் 1964 தொடங்கி ரீடெய்ல் கடைகளை ஜூடியும் அவரது கணவ

உண்மையான திறமை இருந்தால்தான் தொழில்நுட்பம் உதவும்! அர்மான் மாலிக்

படம்
  அர்மான் மாலிக் பாடகர் நீங்கள் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறீர்கள். கலைஞர்களுக்கு சமூக வலைத்தளங்கள் உதவுகிறது என நினைக்கிறீர்களா? சமூக வலைத்தளங்களை நான் ரசிகர்களை சந்திக்கும் இடமாக பார்க்கிறேன். என்னுடைய வேலை பற்றி கூறுவதோடு தினசரி என் வாழ்க்கை பற்றியும் இதில் பதிவிட்டு வருகிறேன். இதில் இயங்கி ஒரே இரவில் பெரும் புகழ்பெற்றவர்கள் இங்கு நிறையப் பேர் உருவாகி வருகிறார்கள். அதேசமயம் இப்படி புகழ்பெறுபவர்களை விட திறமையான ஏராளமானோர் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளும் கலையை வளர்த்துக்கொண்டால் அவர்களின் தொழில்வாழ்க்கையும் உயரத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.  தொண்ணூறுகளில் சினிமா அல்லாத இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. இன்று இந்தி உலகில் தனி இசைக்கு என்ன இடம் இருக்கிறது. இப்போதுள்ள நிலை இன்னும் மேம்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறதா? நான் இதை ஏற்க மறுக்கிறேன். தனி இசை ஆல்பமாக வரும் பாடல்கள் சினிமா பாடல்களை சிறப்பாக உள்ளன. வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி திரையுலகம் சினிமா இசையை முக்கியமாக கருதுவது உண்மை. இதனை நெடுங்காலமாக அங்குள்ள நிறுவனங்கள்

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை சேர்த்து சாதித்த பிராந்திய கட்சிகள்!

படம்
  தேர்தல் பத்திரங்களில் நிதி சேர்த்த அரசியல் கட்சிகள்! 2020-2021ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை ஐந்து பிராந்திய கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி, 2020-21  காலகட்டத்தில் மட்டும் 218.5  கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர தொகை பற்றி  ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு ஏடிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.  திமுக -218.5 கோடி தெலுங்குதேச கட்சி - 54.8 கோடி அதிமுக -42.4 கோடி ஐக்கிய ஜனதாதளம் - 24.3 கோடி தெலங்கான ராஷ்டிர சமிதி -22.3 கோடி   மொத்தமாக இந்த கட்சிகள் பெற்ற தொகை 434.3  கோடி. இது கட்சிகளின் மொத்த வருமானத்தில் 83 சதவீதமாகும். தன்னார்வ நிதியாக கட்சிகள் பெற்றுள்ள தொகை 250.60 கோடி. வருமானத்தில் இதன் அளவு 47.34 சதவீதம். பிற வழியில் பெற்ற நிதி சதவீதம் 23.9 சதவீதம்.  மொத்தமுள்ள 31 கட்சிகளில் 5 கட்சிகள் மட்டும்தான் நிதி பற்றிய தகவலை வெளியே கூறியுள்ளன. 17 பிராந்தியக் கட்சிகள் தமது நிதியை செலவிடாமல் வைத்திருப்பதையும் கூறியுள்ளன.  டைம்ஸ் ஆப் இந்தியா  

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான