இடுகைகள்

இரா.முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேடுபொருள் யாதுமிலை - கடித நூல் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  தேடுபொருள் யாதுமிலை நூல், இரா.முருகானந்தம் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பெரும்பான்மையாக கொண்டுள்ளது. இந்த கடிதங்களின் வழியே பத்திரிகை பணி, அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், சந்தித்த மனிதர்கள், எழுத்துப்பணி, தனிப்பட்ட மனநிலை என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலகட்டத்தை கல்லில் பொறிப்பது போலத்தான் அமைகின்றன. மன்னர் என்றால் கல், எழுத்தாளன் என்றால் சொல் சரிதானே?  ஆரா பிரஸ்ஸின் வெளியீட்டில் கடித நூல்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் இந்த நூலும் முக்கியமானது. பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு நிதானமாக ஒன்றை ஆழ்ந்து பார்க்கும் புரிந்துகொள்ளும் எண்ணம் குறைந்துபோய்விட்டது. கடிதங்கள் எழுதும்போதும், அதற்குப் பிறகு அதை கையில் எடுத்து வாசிக்கும்போதும் பல்வேறு வகையான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் தேடுபொருள் யாதுமிலை கடித நூல், உங்களுக்கும் பல்வேறு நினைவுகளை, உங்கள் நட்புவட்டம் சார்ந்து உருவாக்கலாம். நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் வாசிப்பு வேட்கை கொண்டவர்களுக்கு பரிந்துரையுங்கள். மிக்க நன்றி  தலைப்பு உதவி கவிஞர் பாரதிதாசன் நூலை வாசிக்க... https://www.amazon.com/dp/B0

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - இரா.முருகானந்தம்- புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இரா.முருகானந்தம் (முருகானந்தம் ராமசாமி), சமூக வலைத்தளத்தில் எழுதும் பகிரும் கருத்துகள் முக்கியமானவை. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் வாழும் முருகானந்தம், தமிழ் இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் செயல்பாடு என பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். பல்வேறு டிவி சேனல், யூட்யூப் சேனல்களிலும் கலந்துரையாடல்களில் பங்கேற்று வருகிறார். சமூகம் சார்ந்து முருகானந்தம் வெளியிடும் பதிவுகளைக் கொண்டதே இச்சிறுநூல். இதில், சமூகத்திற்கு முக்கியமான நீங்காத இடம் பிடித்த ஆளுமைகள், எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதோடு, வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அதற்கான எதிர்வினைகளையும் தீர்க்கமாக அவரால் சுட்டிக்காட்ட முடிகிறது. கொண்ட கொள்கையில் உறுதியும், நேர்மையும் முருகானந்தம் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளில் எப்போதும் குறையாது நீக்கமற இடம்பெற்று வருகிறது. நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTL6KJH1 இரா.முருகானந்தம்

உண்மை மதிப்பை விட பலமடங்கு பங்கு மதிப்பு உயர்ந்தால்.. - அதானி மோசடி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

படம்
      1 மோசடி மன்னன் – அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 – தமிழாக்கம்   இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலதிபர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்டு. இந்த அம்சங்கள்தான்   உலகளவில்   இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக மாற்றி வருகிறது. இந்தியப்   பொருளாதாரம், அதன் தொழில் வளத்திற்கு முதலீடுகள் பெருமளவு கிடைக்கும் ஆதாரமாக பங்குச்சந்தையைப் நம்பியிருக்கிறது. மக்கள், பங்குச்சந்தையில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை நாளிதழ்களிலும், டிவி சேனல்களின் வழியாகக் கூட அறிவது குறைவே. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைவர், இயக்குநர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்   பற்றி நேர்மையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் உடனே சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் பற்றி எதிர்மறையாகப் பேசும், விமர்சிக்கும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடியும் உள்ள சூழ்நிலையில் பங்குச் சந்தையில் நடக்கும் பெருநிறுவன மோசடிகள் பற்றி மக்க

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலம

மனமறிய ஆவல் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
விரைவில் இரா. முருகானந்தம் அவர்களுக்கு அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் மின் நூலாக வெளிவரவிருக்கிறது. கடிதங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? அவை குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட உணர்வு நிலைகளை, பிரச்னைகளை பதிவு செய்கிறது. ஒருவகையில் காலத்தை காகிதங்களில் உறையவைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை அவர் செய்யும் வேலை, சூழ்ந்துள்ள மனிதர்கள், நகரம், அங்குள்ள சூழல், அரசின் உத்தரவுகள் என நிறைய விஷயங்கள் பாதிக்கின்றன. நிச்சயம் இதற்கான எதிர்வினைகள் நம் மனதில் தோன்றாமல் இல்லை. சிலர்  அதனை உடனுக்குடன் பகிர்ந்துவிடுவார்கள். இதுவும் அப்படியொரு பகிர்தல்தான். கடிதம் வழியாக நடந்த உரையாடல் எனக் கூட கூறலாம். தற்போது அட்டைப்படம் உங்களுக்காக....

மனமறிய ஆவல்! - கடிதங்கள்- துயரம் துரத்துதே ஏன்?

படம்
pixabay முன்னமே கூறினேனே திடீரென எழுதும்போது உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு வெறுமனே காலியாக உட்கார்ந்திருப்பது என் வழக்கமென. வின்சென்ட் கூட திட்டுவான். இப்படி சட்டென உணர்ச்சி வசப்படுவது சரியல்லவென. என்ன செய்வது என் இயல்பு அப்படி ஆகிவிட்டது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல திடீரென காலங்களில் பின்னால் கடிகாரத்தை திருப்பி வைத்துச் சென்றபோது கடும் விரக்தி ஏற்பட்டது. அந்தநேரத்தில் அஞ்சல் அட்டை கையில் கிடைத்தது துரதிர்ஷ்டம். உடனே எழுதி அப்போதே முருகானந்தம் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். இன்று படித்தால் உண்மையில் ஏன் இப்படி எழுதினேன். என்ன பிரச்னை என எனக்கே புரியவில்லை.இப்படி நெருங்கிய நண்பர்களுக்கு எழுதி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நட்பில் அதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  சரி, எழுதியதை மறைக்க முடியாது. படியுங்கள். 3 1.3.2013 அன்பு சகோதரருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நான் என்றும் உடன்பிறவாத சகோதரராகவே பாவிக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். தங்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் கி.மீ. தூரத்திலுள்ள என்ன

மனித உணர்ச்சிகள் ஒன்றுதானா? - கடிதங்கள்!

படம்
Wasafiri தாராபுரம் அருகே சந்தித்த ஜோதிட நண்பர், நிறைய நாவல்களை வாசிக்கிறவர். அவரிடம் நான் மண்ட்டோ பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அசுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர், என்ன மண்ட்டோ எழுத்து, மும்பைக்காரன் அழுதான்னா எனக்கு அழுகை வராது. அவன் வேற ஊர்ல இருக்கான். நான் வேற ஊர்ல இருக்கேன். எனக்கு அவனோட கலாசாரம் புரியாது. அவன் அழுதா நான் எதுக்கு அழணும். என்று பேசினார். எனக்கு இந்த வாதம் புதிதாக இருந்தது. கொல்கத்தா என்ற நகரில் இருப்பவனும் நம்மைப்போன்றவன்தான். அப்புறம் இதில் அவன் வேற ஆள் என்று சொல்வது வித்தியாசமாக இல்லையா? எனக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே சிறிதுநேரம் சமாளிப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டேன். அவர் நெசவு வேலைகள் செய்கிறார். அதற்கு இடையே எழுதுகிறார். ஜோதிடம் பார்ப்பதை கட்டண சேவையாக செய்கிறார். வாழ்வில் என்ன கசப்போ என்று நினைத்துக்கொண்டேன்.  ரைட். இந்த நேரத்தில் அந்த நினைவு எனக்கு வந்தது. அதற்காக கூறினேன். கடிதத்தை வாசியுங்கள். 2 23.2.2013 பிரிய நட்பிற்கு, வணக்கம். உடலும் மனமும் நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன். புதிதாக அம்ர

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது

வெளிச்சம் எங்கோ புலப்படுகிறது ஆளுமைகளின்          கடிதங்கள் இரா.முருகானந்தத்திற்கு எழுதியவை காப்புரிமை: இரா.முருகானந்தம்               All Rights Reserved. வலைப்பூவடிவ பதிப்பு உரிமை : ஆரா பிரஸ் நூல்தொகுப்பு: ஷான் ஜே, ஜோஸஃபின் ஆசிரியரின் அனுமதி பெற்று பிரசுரிக்கப்படுகிறது. வாசிக்கலாம் ஆனால் வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. சுந்தர ராமசாமி                                            18.09.2001 அன்புள்ள திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு,      வணக்கம். உங்கள் 15.08.2001 கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உடல்நலம் சற்றுக்குறைவாக இருந்ததால் பதிலெழுதப் பிந்தி விட்டது. மன்னியுங்கள்.      இன்னும் ஐந்தாறு மாதங்கள் நான் இங்குதான் இருப்பேன். வசதி இருக்கும்போது நீங்கள் வரலாம். நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வருவதால் வருவதற்கு முன் தொலைபேசித்தொடர்பு கொண்டு என் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.(என் தொலைபேசி எண்: 223159) என்னை சந்திக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை அதிகம் அசௌகரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தப்பக்கம் வர நேர்ந்தால் அவசியம் இங்க