ஆரோக்கிய சேது செயலியின் குறைபாடுகள், இந்தியர்களை பெரிதும் பாதிக்கும்! - மிஷி சௌத்ரி
மிஷி சௌத்ரி மொழிபெயர்ப்பு நேர்காணல் மிஷி சௌத்ரி, மென்பொருள் சுதந்திரசட்ட அமைப்பு மக்களின் தொடர்புகளைக் கண்காணிக்கும் செயலிகள்தான், பெருந்தொற்று பிரச்னையைத் தீர்க்கும் என்று நினைக்கிறீர்களா? அடிப்படையில் ஒருவரின் தொடர்பு எண்களை கண்காணிப்பது என்பது, அவரின் நோய் பாதிப்பைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்குத்தான். இதன்மூலம் குறிப்பிட்ட நபரால் மற்றவர்களுக்கு நோய் பரவாது. ஆனால் இந்த தொடர்பு முகவரிகளை கண்காணிக்கும் செயலி என்பது பெரிய மந்திரக்கோல் செயல்பாடு அல்ல. இதன்மூலம் நமக்ககு இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடும் என்று கூறமுடியாது. இந்த ஆப் மூலம் நோய் எதிர்ப்பு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். ஆனால் இந்த செயலி உங்களுக்கு பூரண குணத்தை தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். தகவல்சுதந்திரம் இல்லாத இதுபோன்ற செயலிகள் நம் தகவல்களை பிறருக்கு திருடுவதற்கு வாய்ப்பாக அமையும். இதைவிட நேரடியாக மக்களை சமூக இடைவெளி கடைபிடிப்பது, நோய்தடுப்பு செயல்பாடுகளை செய்யலாம். சோதனைகளை செய்யலாம். இவற்றை குறிப்பிட்ட அளவுதான் செய்யமுடியும் என்பதால் அரசு செயலி முறையைக் கையில் எடுத்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியா போன