இடுகைகள்

இதயத்தை திருடாதே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மணிரத்னம் என்ற இயக்குநரின் படங்களை புரிந்துகொள்ள உதவும் நூல்! பரத்வாஜ் ரங்கனின் மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல்!

படம்
                  மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல் பரத்வாஜ் ரங்கன் கிழக்கு பதிப்பகம்    மணிரத்னம் எப்படி தன் படங்களை உருவாக்குகிறார் , பிறரது படங்களிலிருந்து தனது படங்களை எப்படி வேறுபடுத்துகிறார் ,. படத்தின் மார்க்கெட்டிங்கை யார் செய்கிறார்கள் , படத்தின் ஒளிப்பதிவுக்கென என்ன உத்திகளை பயன்படுத்துகிறார் , பல்வேறு மொழிகளில் படங்களை உருவாக்குவது அவருக்கு எப்படி எளிதாக இருக்கிறது என ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம் . அதிகம் பேசாதவர் . இருளும் ஒளியும் மாயம் செய்யும் படங்களிலும் வசனங்கள் நறுக்கென இருக்கும் . எப்படி இந்த மாயத்தை செய்கிறார் என்பதை ஏராளமான கேள்விகளைக் கேட்டு பரத்வாஜ் ரங்கன் கேட்டு எழுதியிருக்கிறார் . வெறும் படங்களை மதிப்பீடு செய்யும் புத்தகமாக தொடங்க திட்டமிட்டு உரையாடல் வடிவில் நூலை வடிவமைத்துள்ளது நல்ல ஐடியா . அனுபல்லவி தொடங்கி ராவணன் வரையிலான பல்வேறு பட அனுபவங்களை மணி எளிமையாக பகிர்ந்துகொள்கிறார் . இதில் பரத்வாஜ் ரங்கனிடம் கோபப்படும் இடங்களும் உண்டு . குறிப்பாக குறியீடுகளைப் பற்றி பாம்பே , ராவணன் படங்களை