மணிரத்னம் என்ற இயக்குநரின் படங்களை புரிந்துகொள்ள உதவும் நூல்! பரத்வாஜ் ரங்கனின் மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல்!
மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல் பரத்வாஜ் ரங்கன் கிழக்கு பதிப்பகம் மணிரத்னம் எப்படி தன் படங்களை உருவாக்குகிறார் , பிறரது படங்களிலிருந்து தனது படங்களை எப்படி வேறுபடுத்துகிறார் ,. படத்தின் மார்க்கெட்டிங்கை யார் செய்கிறார்கள் , படத்தின் ஒளிப்பதிவுக்கென என்ன உத்திகளை பயன்படுத்துகிறார் , பல்வேறு மொழிகளில் படங்களை உருவாக்குவது அவருக்கு எப்படி எளிதாக இருக்கிறது என ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம் . அதிகம் பேசாதவர் . இருளும் ஒளியும் மாயம் செய்யும் படங்களிலும் வசனங்கள் நறுக்கென இருக்கும் . எப்படி இந்த மாயத்தை செய்கிறார் என்பதை ஏராளமான கேள்விகளைக் கேட்டு பரத்வாஜ் ரங்கன் கேட்டு எழுதியிருக்கிறார் . வெறும் படங்களை மதிப்பீடு செய்யும் புத்தகமாக தொடங்க திட்டமிட்டு உரையாடல் வடிவில் நூலை வடிவமைத்துள்ளது நல்ல ஐடியா . அனுபல்லவி தொடங்கி ராவணன் வரையிலான பல்வேறு பட அனுபவங்களை மணி எளிமையாக பகிர்ந்துகொள்கிறார் . இதில் பரத்வாஜ் ரங்கனிடம் கோபப்படும் இடங்களும் உண்டு . குறிப்பாக குறியீடுகளைப் பற்றி பாம்பே , ராவணன் படங்களை