இடுகைகள்

கண்டுபிடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள்

படம்
          நம்பிக்கையூட்டும் ஸ்டார்ட்அப்கள் ஏரோஸ்ட்ரோவிலோஸ் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், மைக்ரோ கேஸ் டர்பைன்களைத் தயாரித்து வருகிறது. கழிவுப்பொருட்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வித எரிபொருட்களை கேஸ் டர்பைன்கள் பயன்படுத்தி இயங்குவதாக வடிவமைத்துள்ளனர். வாகனத்துறைக்கான டர்பன்களைத் தயாரித்த நிறுவனம், பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. தற்போது ஜெனரேட்டர்களுக்கான பகுதிப்பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட ஏரோஸ்ட்ரோவிலோஸ், மைக்ரோ கேஸ் டர்பைன்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர்கள், ரோகித் குரோவர், பிரதீப் தங்கப்பன்,சத்யநாராயணன் சக்ரவர்த்தி. பெற்ற முதலீடு, 0.5 மில்லியன் டாலர்கள். பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிறுவனர்கள், ரோகன் கணபதி, யாஸ்காஸ் கரணம், விண்வெளி போக்குவரத்து, விண்வெளி டாக்சி ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தற்போது வரை 11.3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றிருக்கிறார்கள். 2024ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழ் தலைமைத்துவ விருதை வென்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இது.  கடந்த...

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

படம்
  reem hajajreh - yael admi இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி.  ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர். ...

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறு...

மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

படம்
  முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.   ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும்.   பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்ட...

நன்னாரி ஸ்விஃப்ட்டே

படம்
  என்ன ?எங்கு? எப்படி? நன்னாரியா ஸ்விஃப்டே  நன்னாரியா என்ற பேரினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இந்த உயிரினத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது நன்னாரியா இன உயிரினங்களின் எண்ணிகை 23 ஆக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.   எங்கு? மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டே அமெரிக்காவின் தென்கிழக்கு டென்னிசியில் உள்ள அப்பளாச்சியன் மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளது.  பெயர்க்காரணம் மரவட்டையான நன்னாரியா ஸ்விஃப்டேவை ஆய்வாளர் டெரக் ஹென்னன் கண்டறிந்தார். இவர் அமெரிக்க பாடகரான டெய்லர் ஸ்விஃப்டின் தீவிர ரசிகர். எனவே தான் கண்டறிந்த மரவட்டைக்கு ஸ்விஃப்டே என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு முன்னர் தனது மனைவியின் பெயரை மரவட்டை ஒன்றுக்கு சூட்டியுள்ளார். மனைவியுடன் நடைபயிற்சிக்கு செல்லும்போது, காணும் மரவட்டைகளை பார்க்க திடீரென நின்றுவிடுவது டெரக்கின் பழக்கம். அதை அவரின் மனைவி சகித்துக்கொண்டதால் மனைவியின் பெயரை மரவட்டைக்கு சூட்டி கௌரவப்படுத்தியிருக்கிறார்.  BBC wildlife june 2022 New specis discovery https://news.abplive.com/science/mee...

கண்டுபிடிப்புகள் வழியாக புவியியலைக் கற்க வேண்டும்! - ஜோனியா பாபெர்

படம்
  ஜோனியா பாபெர்  1862-1955) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில், கிளார்க் கவுண்டியில் பிறந்த புவியியலாளர்.  மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக, தொலைவில் உள்ள  எட்கர் கவுண்டியில் உள்ள பாரிஸ் எனுமிடத்திற்கு சென்றார்.  மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த ஜோனியா, ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார்.   1886-88 காலகட்டத்தில்,  தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றினார். பிறகு,  குக் கவுண்டி நார்மல் ஸ்கூலில் (தற்போதைய சிகாகோ ஸ்டேட் பல்கலைக்கழகம்) , ஆசிரியராக கிடைத்த பணிவாய்ப்பை ஏற்றார். 1890 - 1899 காலகட்டத்தில் அங்கேயே  புவியியல் துறை தலைவராக உயர்ந்தார். ஜோனியா பாபெர், புவியியலின் பல்வேறு பிரிவுகளை (Meteorology, Mathematical Geography) மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார்.  மாணவர்கள் புவியியல் சார்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும், அதன் வழியாக பாடங்களைக் கற்க வேண்டும் என ஜோனியா விரும்பினார்.  1896இல் புவியியல் மாணவர்களுக்கான தனித்துவ மேசையை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1898ஆம் ஆண்டு ஜோனியா துணை நிறுவனராக இருந்து புவியியல் சங்கத்தைத் தொடங்கினா...

போவரி சட்டன் கோட்பாடை கண்டுபிடித்த வால்டர் சட்டன்!

படம்
Bio டேட்டா! பெயர்: வால்டர் சட்டன் ( 1877) பிடித்த துறை: மரபணு, மருத்துவம் சிறுவயது ஆர்வம் : பண்ணையிலுள்ள இயந்திரங்களைப் பழுது பார்ப்பது பிறர் அறியாத திறமை: கேமராவை தானே உருவாக்கியது திருப்பம்: பொறியியலைக் கைவிட்டு உயிரியல் படிப்பில் இணைந்தது கண்டுபிடிப்பு: மரபணுக்களைக் கொண்டுள்ள குரோமோசோம்களின் பங்கு (Boveri -Sutton Theory)  சாதனை: தி குரோமோசோம் இன் ஹெரிடிட்டி ( “The Chromosomes in Heredity,”1903) ஆராய்ச்சி அறிக்கை புகழ்பெற்றது: மரபணுவியல் துறை ஆராய்ச்சி முன்னோடி: இ.பி.வில்சன் (E. B. Wilson) வினோதம்: 39 வயதில் குடல்வால் சிதைவால் இறந்தார். அப்போது, குடல்வால் சிதைவு பாதிப்பை குணமாக்குவது பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.   https://www.lindahall.org/walter-sutton/ http://www.dnaftb.org/8/bio-2.html

இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த ஐந்து விஞ்ஞானிகள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நவீன இந்தியாவை உருவாக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை பிரிவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஞ்ஞானிகளின் பட்டியலை ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தயாரித்துள்ளது.  பெடங்காதாஸ் மொகன்டி, புவனேஸ்வர் நகரில் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் டீன் மற்றும் பேராசிரியராக உள்ளார். இவர், இயற்பியலாளராக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். அதில் குறிப்பிடத்தக்கது, கரும்பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்.  ஜோதிர்ரஞ்சன் எஸ் ரே, நாகர்கன்டா என்று பகுதியில் பிறந்தவர். புவி அறிவியல் படிப்புகள் தொடர்பான தேசிய மையத்தில் இயக்குநராக உள்ளார். தற்போது திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறார். இவர், பாறைகளின் வயதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை செய்து வருகிறார்.  விந்திய மலைத்தொடரின் வயதைக் கண்டுபிடிக்கும் புவியியல் ஆராய்ச்சியை செய்தவர் இவரே.  ஜோதிர்மயி தாஸ், ஐஏசிஎஸ் என்ற நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புற்றுநோய்க்க...

நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!

படம்
  கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.  மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை  பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.  உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.  ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.  வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.  இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.  டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உண...

கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்

படம்
    அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும் . ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி . ஆங்கில உலகில் அழகு , நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர் , லாமர் . 1914 ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார் . இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர் . நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார் . முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர் , பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார் . அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார் . படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார் . போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது , தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார் . இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது . சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார் . இரண்டாம் உலகப்போரின்போது , மக்கள் கஷ்டப்படுவதை...

டாப் 5 வானியல் அமைப்புகள்

படம்
  டாப் 5 வானியல் அமைப்புகள் ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா (Jyotirvidya Parisanstha (JVP)) –  ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா, மகாராஷ்டிராவின்  புனேவில் அமைந்துள்ள  அமைப்பு. 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிசன்ஸ்தா, வானியலை மக்களிடையே பிரசாரம் செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது. http://jvp.org.in/  அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronomical Society of India (ASI) ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியல் ஆர்வலர்களுக்கான அமைப்பு. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் வானியலின் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.  TIFR, IISER, IISc, IIT, ISRO, PRL , IIAP உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணிபுரியும் ஆய்வாளர்களும் வானியல் சொசைட்டியில் முக்கியமான அங்கம்.  அசோஷியேசன் ஆஃப் பெங்களூரு அமெச்சூர் அஸ்ட்ரானமர்ஸ் (ABAA)  பெங்களூருவைச்  சேர்ந்த இந்த அமைப்பு, 1976 ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பு, தொலைநோக்கி குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. வான் இயற்பியலில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்கள...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்...

அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

படம்
                தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார் . முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை . தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது , வல்லுநர்களைக் கொண்டது , கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது , குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது , மேம்படுத்துவது , இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது . பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு . முழுநேர ஆராய்ச்சியாளர்கள் . தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு , ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும் . தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன . உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது . இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்...

15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!

படம்
சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் பிரின்டிங் இயந்திரம் - ஜோகன்னஸ் குடன்பர்க் இவரே பிரின்டிங் மெஷினைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பாளர் 1439ஆம் ஆண்டு நகர்ந்து இயங்கும்படியான அச்சு மெஷினை கண்டுபிடித்து சாதித்தார். இவரை அச்சுத்துறையின் பிதாமகன் என்று அழைக்கின்றனர். காகிதங்களை உள்ளே வைத்து கையால் மெஷினை இயக்கி அதில் அச்சிடும் முறையை இவர் உருவாக்கினார். 15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக குடன்பர்க் பிரின்டிங் இயந்திரமே கருதப்பட்டது. பின்னாளில் இதனை பல கண்டுபிடிப்பாளர்கள் மேம்படுத்தினர். டெலஸ்கோப் - 1609 இக்கருவி இல்லையென்றால் நாம் விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களைக் கண்டுபிடித்திருக்க முடியாது. இதனை 1611ஆம் ஆண்டு கிரேக்க கணிதவியலாளர் ஜியோவன்னி டெமிசியானி என்பவர் கண்டுபிடித்தார். இதனை கலிலீயோ கலிலீ முழுமை செய்தார். நவீன விண்வெளி தொலைநோக்கிகளை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு செய்தவர் ஐசக் நியூட்டன். நீராவி இஞ்சின் - 1712 இன்றும் கூட உலகில் மின்சாரம் தயாரிக்க எண்பது சதவீத நீராவி இயந்திரங்கள் பயன்படுகின்றன.  பல்வேறு பொருட்களை உற்பத்த...

உலகை மாற்றிய இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள்

படம்
ஷில்லி ங் இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள் Rosalind Franklin 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங் ஹில்லில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு நிலக்கரி பயன்பாடு பற்றிய இவரது ஆராய்ச்சி, அந்நாடு உலகப்போரில் நிலக்கரியை சிறப்பாக பயன்படுத்த உதவியது. இதுதொடர்பாகவே தன் முனைவர் படிப்பையும் செய்தார்.  1950ஆம் ஆண்டு ரோசாலின்ட் இருவகை டிஎன்ஏக்களை கண்டுபிடித்தார். இதன் காரணமாக கிங் கல்லூரியில் உதவித்தொகை பெற்றார். டிஎன்ஏ அதிகளவு ஈரப்பதமான சூழலில் இருந்தால் அதன் வடிவம் மாறிவிடும் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தார். 1958ஆம்ஆண்டு ரோசாலின்ட் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு 37 வயதில் மரணமடைந்தார்.  Janet Taylor 1804ஆம் ஆண்டு ஜேனட் டெய்லர் பிறந்தார். இவர் அவரது பெற்றோருக்கு ஆறாவது குழந்தை. இவர் தன் ஏழாவது வயதில் தாயாரை இழந்தார். கடல் சம்பந்தமான பல்வேறு சாதனங்களை தயாரித்து விற்று புகழ்பெற்றார். இவரது கருவிகள் பற்றி புகார்கள், சர்ச்சை இருந்தாலும் இதற்கான அகாடமி ஒன்றையும் துணிச்சலாக உருவாக்கி வென்றவர் இவர். 1617-1852 ஆம் ஆண்டில் பதிவான காப்புரிமைகள் எழுபதிற்கும் மேல்...

ஸ்டேப்ளர்ஸ் டேட்டா ரெடி!

படம்
பத்தொன்பதால் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்ஸ் இன்று இல்லாத இடம் கிடையாது. அதிலேயே ஏராளமான நிறம், வகை, பெரியது, சின்னது என அத்தனை விஷயங்களும் இருக்கிறது. முதல்முறையாக விற்பனைக்கு வந்த ஸ்டேப்ளரின் எடை 2.5 பவுண்ட்ஸ். விக்கி ஹவ் பக்கத்தில் கையில் குத்திய பின்னை எப்படி நீக்குவது என்று 3 ஸ்டெப்களில் வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பயன்படுத்தும் ஸ்டேப்ளரின் அளவு 6 மி.மீ. ஜனவரி 2011 முதல் மார்ச் 2018 வரை அறுவை சிகிச்சையில் தவறாக பயன்படுத்தப்பட்ட, பிரச்னை எழுந்து 366 உயிர்கள் பறிபோயுள்ளன. இதற்கு காரணம் ஸ்டேப்ளர்கள்தான். ஸ்விங்லைன் கம்பெனியின் 2018 ஆம் ஆண்டு வருமானம் 194 மில்லியன் டாலர்கள். இந்த கம்பெனியின் நிறுவனர்கள் 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான படத்தை நியூயார்க் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினர். நன்றி: க்வார்ட்ஸ்