இடுகைகள்

அக்‌ஷய பாத்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதிய உணவு வழங்கும் அக்‌ஷய பாத்ரா!

படம்
17 லட்சம் மாணவர்களுக்கு அமுதூட்டும் அக்‌ஷய பாத்ரா! – உணவு சமைப்பது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாதுதான். ஆனால் பதினேழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவை நேரம் தவறாமல் தரமாக சமைத்து பரிமாறும் பணி சாதாரணமா? பனிரெண்டு மாநிலங்களிலுள்ள 34 சமையலறைகள் மூலம் 14 ஆயிரத்து 314 பள்ளிகளிலுள்ள 17 லட்சத்து 61 ஆயிரத்து 734 மாணவர்களுக்கு அமுதூட்டுகிறது அக்‌ஷய பாத்ரா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம். 2000 ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.சி. பக்தவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா, தெருநாய்களுடன் உணவுக்கு போராடும் சிறுகுழந்தைகளைப் பார்த்த கணம்தான் அக்‌ஷய பாத்ரா நிறுவனம் தொடங்கப்படுவதற்கான பிள்ளையார் சுழி. ஆயிரத்து ஐநூறு உணவுப் பொட்டலங்களுடன் தொடங்கிய உணவு வழங்கும் இந்நிறுவனத்தின் பணி இன்று அதிநவீன டெக்னாலஜி உதவியுடன் மேலும் பிரமாண்டமாகியுள்ளது. “சாம்பாரின் வெப்பம், பள்ளிகளுக்கு அனுப்பும் சமையல் பாத்திரங்கள், மாணவர்களின் விமர்சனம் என அனைத்திற்கும் ஒழுங்குமுறைப்படுத்த தொழில்நுட்பத்தை நாடுகிறோம்” என்கிறார் அக்‌ஷய பாத்ரா நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அஜய் கவிஸ்கர். மதிய உணவு தயா