இடுகைகள்

பாலாஜி ஹெல்த்கேர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதியவர்களைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனை தொடங்கிய மருத்துவர்! - மருத்துவர் மகாலஷ்மி

படம்
மருத்துவர் மகாலஷ்மி  மகாலஷ்மிக்கு அப்போது 30 வயது. அந்த நேரத்தில்தான் தனது பெற்றோரை இழந்தார். அவர்களது இறப்பிற்கு பிறகு, சிறிது காலத்தில் அவரது மாமனார், மாமியார் ஆகியோரையும் இழந்தார். இதெல்லாம் அவரை அடுத்து செய்யவிருந்த மருத்துவமனை பணிகளைத் தடுக்கவில்லை.  அதுவரை சம்பாதித்த பணத்தையும், வங்கி கடன்களையும் இணைத்து பாலாஜி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். இதுகூட வயதானவர்களை வேலை காரணமாக சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை. வயதான காலத்தில் நோயும் சேர்ந்துகொள்ள அவர்களை பார்த்துக்கொள்ள மருத்துவமனை உதவியாக இருக்கும் என்றே மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.  மருத்துவர் மகாலஷ்மி, பாலாஜி ஹெல்த்கேர் நாம் எல்லோரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலைக்கு போகிறோம், திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுகிறோம். நான் இதைத் தாண்டி ஏதேனும் ஒன்றை செய்ய நினைத்தேன் என தனது செயல்பாட்டை விளக்குகிறார் மகாலஷ்மி. 2011 ஆம் ஆண்டு மும்பைக்கு வெளியே பாட்ஷா ஆற்றுப் புறத்தில் தொடங்கிய மருத்துவமனையில் முதலில் நான்கு பேர் நோயாளிகளாக இருந்தனர். இப்போது 74 பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷிசோபெரேனியா, டிமென்